என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 138200"

    இளைய தலைமுறையினர் வாசிப்பையும், நூலக பயன்பாட்டையும் அதிகரித்தால் வாழ்வில் உயர முடியும்.

    உடுமலை:

    உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பருத்தி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை கிளை நுாலகம் எண் 2 நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

    நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், கனரா வங்கி பணி நிறைவு மேலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முனைவர் விஜயலட்சுமி வரவேற்று பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் அருணாசலம் முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ஏற்புரை ஆற்றிய முனைவர் பட்டம் பெற்ற சுந்தர்ராஜன் கூறும்பொழுது, நூலகத்தை பயன்படுத்தியதால் என்னால் இந்த அளவு உயர முடிந்தது. எனது ஆராய்ச்சிக்கு பல்வேறு வகையில் இந்த நூலகம் மற்றும் நூலகர்கள் உதவி செய்தனர். மாணவர்கள் நூலகத்தை அதிக அளவு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனக் கூறினார்.

    இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட உள்ள நூலகத்தை யார் வந்து பயன்படுத்தப் போகிறார்கள் என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். #Trump #AfghanistanLibrary #Modi
    வாஷிங்டன்:

    போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை இந்தியா செய்து வருகிறது.  அங்கு வாழ்வோரின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்திற்காக அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவது, ஆப்கன் அரசுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானை புதுப்பிக்க மத்திய அரசு இதுவரை சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பிரமாண்ட நூலகம் அமைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் அமைக்கவுள்ள நூலகத்தால் என்ன பயன் என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் என்ன பலன் ஏற்படும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? அப்படியே கட்டினாலும் ஆப்கானிஸ்தானில் யார் வந்து அதனை பயன்படுத்தப் போகிறார்கள்? என குறிப்பிட்டுள்ளார். #Trump #AfghanistanLibrary #Modi
    ×