search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plans"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

    அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.

    வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

    • பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது
    • கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த தேர்தலில் கர்நாடகா பார்முலாவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது பெண்களுக்கு மாதந்தோறும் 2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் கர்நாடக மாநிலத்திலேயே நிறைவேற்றப்படவில்லை இங்கும் நிறைவேற்றமாட்டார்கள் என சந்திரசேகர ராவ் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது

    கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா துணை முதல் மந்திரி சிவக்குமார் மற்றும் 10 அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் பிரசாரம் செய்யும் பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.

    நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சித்தராமையா பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும்.

    தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தனது 6 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

    • மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.
    • மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது மாவட்ட கலெக்டராக ஏ.பி.மகாபாரதி நேற்று பொறு ப்பேற்றுக்கொண்டார்.

    புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் பல ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

    சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சரும், தலைமைச் செயலாளரும் அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

    குறிப்பாக அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் வேகமாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.

    தமிழக அரசுக்கு நற்பெயரும் மாவட்ட மக்களுக்கு நன்மையும் செய்யக்கூடிய வகையில் செயல்படுவேன்.

    சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், நீர் வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
    • அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

    சிவகாசி,

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசியில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அசன்பதுருதீன் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ வர்மன், தலைமைக்கழக பேச்சாளர்கள் செல்வம், பரமக்குடி ஜமால், மான்ராஜ் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் சிறப்பாக செயலாற்றிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதா காலத்துக்கு பிறகு தமிழ கத்தில் ஏழை- எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது.

    ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அறிவியல் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது. தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள்.

    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    அம்மா பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை இப்படி பல்வேறு அ.தி.மு.க.வின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பாதியாக குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.

    முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அ.தி.மு.க. அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.

    மகளிருக்கு ரூ. 1000 தருவதாக சொன்ன தி.மு.க. இதுவரை வழங்கவில்லை. தி.மு.க. கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் தி.மு.க.வினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் தி.மு.க.வினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயாராக இருந்து அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது, 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன் பேசும்போது, ஒன்றிய குழு கூட்டத்திற்கு ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. எனவே அந்த துறை சார்ந்த நலத்திட்டங்கள் என்ன? அரசு அறிவித்த திட்டங்கள் எவை? என்று எங்களுக்கு தெரியாததால் எங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரின் கேள்விக்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜா, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை இனிவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என கூறினார்.

    முடிவில் மேலாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரீமியம் தொகை அதிகரிப்பு சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
    சேலம்:

    இந்திய அரசு ரூ.2 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா ேயாஜனா ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

    இதில் ஜீவன் ேஜாதி காப்பீடு திட்டத்தில் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரையிலானோர் சேர்ந்து கொள்ளலாம்.   அதே போல் சுரக்‌ஷா திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது  வரையிலானோர் இணைந்து கொள்ளலாம் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டங்களில் தினமும் பல ஆயிரம் பேர் சேர்ந்து வருகிறார்கள். அதுமிட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குடும்பங்கள் இந்த திட்டங்களினால் பயனடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பேர்  தபால் மற்றும் வங்கிகள் மூலமாக மேற்கண்ட திட்டங்களில் சேர்ந்து உள்ளனர்.  ஜீவன் ேஜாதி திட்டத்துக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ. 330 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.436 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுரக்‌ஷா காப்பீடு திட்டத்துக்கான ஆண்டு பிரீமியம் தொகையும் ரூ.12-ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிரீமியம் மூலமாக கிடைக்கும் வருவாயை விட காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகமாக இருப்பதாக நிறுவனங்கள் ெதரிவித்து வந்த நிலையில் பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிகள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

    கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி நிலவரப்படி ஜீவன் ேஜாதி திட்டத்தில் 6.4 கோடி பேரும், சுரக்‌ஷா திட்டத்தில் 22 கோடி பேரும் இணைந்துள்ளனர்.  இந்த 2 திட்டங்களின் கீழும் காப்பீடு தொகை கோருவோருக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது.
    புதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவிதுள்ளார். #DonaldTrump #RussianElection
    நியூஜெர்சி:

    அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வரும் டிரம்ப், விசாரணை கமிஷனையும் குறைகூறி வருகிறார். இந்த புகாரை ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை வருகிற 16-ந்தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து பேசுவீர்களா? என டிரம்பிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘நான் அவரிடம் (புதின்) அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். தேர்தல்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். அமெரிக்க தேர்தலை யாரும் சீர்குலைப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    உக்ரைனை இணைத்துக்கொண்டது, சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருவது போன்ற ரஷியாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், புதினுடனான சந்திப்பில் இந்த விஷயங்கள் குறித்தும் பேச இருப்பதாக டிரம்ப் கூறினார்.

    இதைப்போல ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிவிதிப்பது குறித்து 3 அல்லது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று கூறிய டிரம்ப், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். #DonaldTrump #RussianElection  #tamilnews 
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNassembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத் தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக் கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டு தோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, “சொற்குவை” என்ற திட்டம் தொடங்கப்படும்.

    அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர் களும், மொழியியல் ஆராய்ச்சி யாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (எம்.ஏ.) பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தேர்வின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந் தோறும் கல்வி உதவித்தொகையாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #MGRStudyChair
    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், “மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்“ என்று ஆவேசமாக பேசினார். #KamalaHassan #MakkalNeethiMaiyam
    திருச்செந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து அவர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக காலை 10 மணி அளவில் நெல்லை மாவட்டம் பணகுடி பஸ் நிலையம் அருகே அவர் திறந்த காரில் வந்தார். அவருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வள்ளியூர் வழியாக திசையன்விளைக்கு கமல்ஹாசன் காரில் சென்றார்.



    அப்போது அவர்பல இடங்களில் பேசினார்.

    பின்னர் திருச்செந்தூர் தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது நற்பணி இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியாக மாற்றி செயல்பட்டு வருகிறோம். சென்னையில் வருகிற 25-ந் தேதியில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நற்பணி இயக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். நமது பாதை எப்போதோ முடிவாகி விட்டது. நமது கட்டமைப்பு குறித்து நேர்காணலில் தெரிவிக்கப்படும்.

    நான் சாதி, மதங்களை எதிர்ப்பதாக சிலர் கூறுகின்றனர். நான் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கும் எல்லா விஷயங்களையும் எதிர்த்து நிற்கிறேன். நான் சாதி, மதங் களுக்கு அப்பாற்பட்ட வன். நான் நேசிப்பது மனிதர்களை மட்டும்தான். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். இனி எனக்கு வழங்கப்பட்ட வேலை, எனது எஞ்சிய வாழ்நாட்களில் மக்களுக்கு பணி செய்வது மட்டும்தான். அதனை ஏற்கனவே தொலைக்காட்சியில் தெரிவித்து விட்டேன். அதனை பொதுமக்களிடம் நேரில் கூறுவதற்காக வந்துள்ளேன்.

    சில கட்சியினர் தேர்தல் வரும்போது மட்டுமே பல்வேறு ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் மகாத்மா காந்தி ‘பாரத தர்ஷன்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டதுபோன்று, சுற்றுப்பயணம் செய்கிறேன். நான் காந்தியை பார்த்தது கிடையாது. ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றி வருகிறேன். மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், மக்களின் நன்மைக்கு தடையாக எது வந்தாலும், அதனை தகர்த்து எறிவோம்.

    நமது நாடு பல்வேறு பாரம்பரிய பண்பாடுகளைக் கொண்டது. நமது நிலையை மேம்படுத்தி கொள்ள நாம் குரல் கொடுக்க வேண்டும். தற்போது செல்போன்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘மய்யம் ஆப்‘பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது நமது கட்சியின் உறுப்பினர் அட்டை போன்றது. இது அகிம்சை ஆயுதம் ஆகும். அதனை நீங்கள் பயன்படுத்தி அரசு பொறுப்பில் உள்ளவர்களிடம் உங்களின் உரிமைகளை உரிமையுடன் கேட்கலாம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர்வு அதிகரித்து கொண்டே செல்கிறது. நமது கட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ- மாணவிகள் அதிகளவில் சேருகின்றனர். அடுத்த மாதம் மாணவர்களின் எழுச்சி தெரியவரும். நான் கல்லூரிக்கு செல்வதை அரசு ஆணை பிறப்பித்து தடுத்து இருக்கிறார்கள். அது எனக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

    நான் பள்ளிப்பாடத்தைக்கூட சரியாக முடிக்கவில்லை. அதனால் எனக்கு கல்லூரியில் அனுமதி கிடைக்காது. இருந்தாலும் மாணவர்கள் பெருந்தன்மையாக அழைக்கிறார்கள். அதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தடைகளை எல்லாம் வென்று சரித்திரம் படைப்போம். அதற்கான முன்மொழிவுகளை சினிமா பாடல்களில் கூறி இருக்கிறோம். அதனை நடைமுறையில் காண்பிப்போம். எங்கள் இளைஞர்களின் பலம் என்ன என்பதை தெரியப்படுத்துவோம். நாளை நமதே என்று நம்புங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்வோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் ஆவேசமாக பேசினார்.  #KamalaHassan #MakkalNeethiMaiyam
    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது. #NASA #Helicopter #Mars
    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.

    இதற்காக ஒரு குழுவினர், 4 ஆண்டு காலம் உழைத்து, சிறிய அளவிலான ஹெலிகாப்டரை வடிவமைத்து அதன் எடையை 1.8 கிலோ அளவுக்கு குறைத்து உள்ளனர்.

    இந்த ஹெலிகாப்டர் பூமியை விட 100 மடங்கு மெல்லிய செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    இது பற்றி ‘நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறும்போது, “மற்றொரு கிரகத்தின் வான்வெளியில் ஹெலிகாப்டரை பறக்க விடுவது என்பது மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாக அமைந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறும்போது, “நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும்” என்றார்.

    ‘ட்ரோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆளில்லாத விமானத்துக்கு பதிலாக பறக்க உள்ள இந்த ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

    பூமியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் 5½ கோடி கி.மீ. தொலைவுக்கு பறக்கும். எனவே ‘ரிமோட் கண்ட்ரோல்’ சமிக்ஞை எதையும் அனுப்புவதற்கு முடியாது.

    2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் இணைத்து அனுப்பப்படுகிற இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும் என்று ‘நாசா’ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.  #NASA #Helicopter #Mars
    ×