search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Committee Meeting"

    • அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
    • மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும்

    வடமதுரை:

    வடமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாடியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் மணிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. பின்னர் வடமதுரை யூனியன் உட்பட்ட பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் கோரிக்கை வைத்தார். மலை கிராமமான மலைப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளதால், சீரமைக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் வெள்ளையன் கோரிக்கை வைத்தார்.

    மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் என்று சுக்காம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி கோரிக்கை வைத்தார். பின்னர் கவுன்சிலர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    • ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    • நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள்,மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள மனோகரனுக்கு ஒன்றியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- ஈஸ்வரி ( 2 வது வார்டு ): பல்லடம் முதல் பூமலூர் வரை செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கிடாத்துறை பகுதியில் சாலையின் வழியே செல்லும் பிஏபி வாய்க்கால் மீது பாலம் அமைக்க உள்ளனர். பாலம் 26 மீட்டர் நீளத்திற்கு உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். அப்படி அமைத்தால் வாய்க்கால்களில் வரும் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே அந்த இடத்தில் 26 மீட்டர் முழுமையான அளவுக்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி : இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

    துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் : ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு மனை வரன்முறை படுத்த விண்ணப்பங்கள் அளித்தால் மிகவும் காலதாமதமாக வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக வழங்க வேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன்:விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மங்கையர்க்கரசி கனகராஜ் ( 10 வது வார்டு ):-

    கோடங்கி பாளையம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு கேட் வால் ரோட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் : குடிநீர் இணைப்பு கேட் வால் சிலாப் வைத்து மூட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பின்னர் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வாடிப்பட்டி யூனியன் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார்.

    துணை சேர்மன் தனலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வனஜா வரவேற்றார். கணக்கர் சங்கர் தீர்மான அறிக்கை வாசித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். 15-வது நிதி குழு வளர்ச்சி திட்ட பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை, தோட்டக்கலை, போக்கு வரத்து உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் ராதா நன்றி கூறினார்.

    • ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சங்கீதாபாரி தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களின் மீது, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாபாரி பதிலளித்தார்.

    உறுப்பினர்கள் கூறும்போது ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் உரிய மரியாதை வழங்குவதில்லை, ஊராட்சி செயலாளர்கள் தன்னிச்சையாக செயல்படுவது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது, எனவே ஊராட்சி மன்றத் செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.

    அனைத்து ஊராட்சிகளிலும் இதே நிலை தொடர்வதாகவும், பல ஆண்டுகள் ஓரே ஊராட்சியில் ஊராட்சி செயலாளர்கள் பணிப்புரிவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அவர்களை மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

    ஒரே ஊராட்சியில் பல ஆண்டு காலமாக பணி புரியும் ஊராட்சி மன்ற செயலாளர் பட்டியல் திரட்டப்பட்டு மற்ற ஊராட்சிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமை நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் வீரா(எ) புருஷோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி முதல் முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணா பிறந்தநாளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கவும் நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி ரூ.294 ஆக உயர்த்திய முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • தீர்மானங்களுக்கு அங் கீகாரம் கோரப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    மாதனூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் ப.ச.சுரேஷ்குமார் தலைமையில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் நடைபெற்றது. துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஒன்றிய பொதுநிதி செலவினங்கள், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் செலவினங்கள் குறித்த தீர்மானங்களுக்கு அங் கீகாரம் கோரப்பட்டது.

    மேலும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். அதற்கு ஒன்றியக்குழு தலை வர் சுரேஷ்குமார் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன், அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்த தீர்மானம்
    • கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாதாரன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை கழிவுநீர் கால்வாய் சிறு கல்வெட்டு குடிநீர் பைப் லைன் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும், கால்வாய் களை தூர்வார வேண்டும், ஊராட்சிகள் தோறும் கொசு மருந்து தெளிக்க வேண்டும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் அன்பரசி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் கட்ட கோரிக்கை வைத்தனர்.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், செங்கல்நத்தம் பிச்சாண்டி தலங்கை மாரிமுத்து மாரிமுத்து கொடைக்கல் கார்த்திக் வேங்கப்பட்டு ராமன்பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில். ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார். கூட்டத்தில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊத்தூர், கிராமத்திற்கு ஆரணியில், இருந்து தேவிகாபுரம், செல்லும் தடம் எண் 8ஏ, 8பி, ஆகிய அரசு பஸ் உள்ளே வந்து சென்று வந்தது.

    இப்போது சிறிது காலமாக சரிவர பஸ் வந்து செல்லவில்லை, இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    ஆகவே அரசு பஸ் உள்ளே சென்று வர வேண்டும், இதேபோல் சென்னையில் இருந்து போளூர் செல்லும் தடம் எண் 148, பஸ் சேத்துப்பட்டு அடுத்த செவரைப் பூண்டி கூட்ரோட்டில் ஒரு சில பஸ்கள் நிற்காமல் செல்கிறது, எனவே அனைத்து பஸ்களும்நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினர்கள், பிற துறை அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஆலோசனை
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற உள்ள திட்ட பணிகள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடம் கோவில்கள் ஆகிய இடங்களை தூய்மையாக வைப்பது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை மறியலிலும் ஈடுபட்டனர்
    • அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார்

    சோளிங்கர்:

    சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் வரவேற்றார்.

    கூட்டத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இ-டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் 17 பேரும் திடீரென்று சோளிங்கர் - சித்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். பின்னர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இ- டெண்டர் முறையில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி கூட்டத்தில் இருந்து தலைவர் கலைக்குமாரும் வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
    • காங்கயம் ஊராட்சி ஒன்றியப்பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    காங்கயம் : 

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலை வகித்தார்.

     இதில் ஊராட்சிப்பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைப்பது, குடிநீர்ப்பணிகளுக்காக மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், காங்கயம் நகர மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப்பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    ×