search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் முறையாக இயக்க வேண்டும்
    X

    சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்த காட்சி.

    கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் முறையாக இயக்க வேண்டும்

    • ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில். ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார். கூட்டத்தில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊத்தூர், கிராமத்திற்கு ஆரணியில், இருந்து தேவிகாபுரம், செல்லும் தடம் எண் 8ஏ, 8பி, ஆகிய அரசு பஸ் உள்ளே வந்து சென்று வந்தது.

    இப்போது சிறிது காலமாக சரிவர பஸ் வந்து செல்லவில்லை, இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    ஆகவே அரசு பஸ் உள்ளே சென்று வர வேண்டும், இதேபோல் சென்னையில் இருந்து போளூர் செல்லும் தடம் எண் 148, பஸ் சேத்துப்பட்டு அடுத்த செவரைப் பூண்டி கூட்ரோட்டில் ஒரு சில பஸ்கள் நிற்காமல் செல்கிறது, எனவே அனைத்து பஸ்களும்நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினர்கள், பிற துறை அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×