search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒன்றிய குழு கூட்டத்தில் 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    X

    ஆலங்காயத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்த காட்சி.

    ஒன்றிய குழு கூட்டத்தில் 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    • தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி(திமுக) தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூபாலன் ஆகியார் முன்னிலை வகித்தனர். மேலாளர் சாந்தசீலன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் 11-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் சதாசிவம் பேசுகையில் நிர்வாகத்தில் ஒன்றிய குழு தலைவரின் கணவர் மற்றும் துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும்,

    இதனால் ஒன்றிய குழு உறுப்பினர்களின் உரிமைகள் பரிக்கப்பட்டுகிறது என்று கூறிவிட்டு திமுகவை சேர்ந்த 6 ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கூட்டம் முடிந்த பின்னர் வெளிநடப்பு செய்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் சதாசிவம், சிகாமணி, காயத்ரி பிரபாகரன், பிரீதா, லட்சுமி, முருகன் ஆகிய 6 பேர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி மன்ற அரங்கிற்கு வந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலின் பேரில் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி, ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

    திமுக ஒன்றிய குழு தலைவருக்கு எதிராகவே, திமுக வினரே வெளிநடப்பு, தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி கூறுகையில்:-

    ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அனைத்து திட்டப் பணிகளை அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு பிரித்து தருவதாகவும், தன்னுடைய கணவர் எந்த திட்டப் பணிகளிலும் தலையிடுவதில்லை என்று கூறினார்.

    Next Story
    ×