என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
- 38 ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்பு
- அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் வரவேற்றார். மேலும் இந்த ஒன்றி குழு கூட்டத்தில் 38 ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில் அந்தந்த ஊராட்சிக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்து ஒன்றிய குழு தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யவும், மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து சுழற்சி முறையில் நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த ஒன்றிய குழு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்