search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி ஒன்றியக்குழு கூட்டம்
    X

    ஆரணி ஒன்றியக்குழு கூட்டம்

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமை யில் நடந்தது. துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன் னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இல.சீனிவாசன் புதிய வட்டார வளர்ச்சி லர் பாண்டியனை அறிமுகம் செய்து வரவேற்றார்.

    அலுவக கூட்டத்தில் உறுப்பினர் கவிதாபாபு பேசுகையில், சுபான் ராவ்பேட்டையில் பக்க கால்வாய்களில் கழிவுநீர் முறையாக செல்லாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது என்றார்.

    ஜெயபிரகாஷ் பேசுகையில், கிராமப்பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்படுவதாக கூறி பொக்லைன் எந்திரம் வைத்து பள்ளம் எடுக்கப்பட்டது. நன்றாக இருந்த சாலைகளை உடைத்து பள்ளம் எடுக்கப்பட்டதால் அங்கு மழை நீர் தேங்கிகுளம் போல காட்சியளிக்கிறது என்றார்.

    துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் பேசுகையில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூறும் புகார்களுக்கு உடனடியாக அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்ராபாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் பகுதியான ஸ்ரீராம் நகர் பகுதியில் நாற்று நடும் போராட்டம் நடத்த தயாராக இருந்தார்கள் அவர்களை அழைத்து சமாதானம் பேசினேன். இது போன்ற நிலைகளை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது பகுதிக்கு தேவைகள் குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் படித்து நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×