search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்துக் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்
    X

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம். ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடந்த காட்சி.

    அனைத்துக் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்

    • ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்ற கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி, ஒன்றிய பொறியாளர் புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலக மேலாளர் அசோக் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பா ளராக வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் இமகிரிபாபு, குட்டிவெங்கடேசன், சுரேஷ்குமார், மனோகரன், சரவணன் ரஞ்சித்குமார், தீபிகாபரத் சூரியகலா, இந்திராகாந்தி, கவுரப்பன் உள்ளிட்ட உறுப்பி னர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சி னை கள் குறித்து பேசினார்கள்.

    உறுப்பி னர்களின் கோரிக்கை களுக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ராமாலை கிராமத்தில் பட்டா ரத்து செய்த பிரச்சினை குறித்து உடனடியாக உயரதிகா ரிகளுக்கு கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்கள் இயங்கவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், பழுதடைந்த பள்ளிகள் குறித்து கணக்கெ டுத்து கலெக்டருக்கு அனுப்பி உள்ளோம்.

    விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வரும் கூட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்படும் என்றார்.

    மேலும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வெளியே பல்வேறு அரசியல் கட்சி களின் கொடிக்கம்பங்கள் உள்ளன.

    மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படு வதால் நெடுஞ்சா லைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அனைத்து கட்சியின் கொடிக்கம்பங்க ளை அகற்ற நெடுஞ்சாலை துறையையும் நகராட்சி யையும் கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×