என் மலர்tooltip icon

    சூடான்

    • ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர்.
    • சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன.

    ஆப்பிரிக்க நாடான சூடானில், உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கு அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வரும் துணை ராணுவத்தினரால் (RSF) இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

    அவர் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ஆதர்ஷ் பெஹெரா என்று தெரியவந்துள்ளது.

    அவரிடம் RSF போராளிகள் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், இரண்டு RSF போராளிகளுக்கு இடையில் உள்ள ஆதர்ஷ் -இடம் ஒரு போராளி, "ஷாருக்கானை  உனக்கு தெரியுமா?" என்று கேட்கிறார்.

    மற்றொருவர் RSF குழுவை வழிநடத்தும் தங்கள் தலைவரான முகமது ஹம்தான் டகலோ-வை புகழ்ந்து கோஷம் எழுப்பும்படி ஆதர்ஷ்-ஐ கட்டாயப்படுத்துகிறார்.

    ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர். அவர் 2022 முதல் சூடானில் உள்ள சுக்ரதி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சூடான் தலைநகர் கார்ட்டூமில் இருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் உள்ள அல் ஃபாஷிர் நகரத்திலிருந்து பெஹெரா கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன. அங்கிருந்து அவர் நியாலா நகரத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து இந்தியாவிற்கான சூடான் தூதர் முகமது அப்துல்லா அலி எல்டோம் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அல் ஃபாஷிரில் உள்ள தகவல் தொடர்பு அமைப்பு முற்றிலுமாக சரிந்துவிட்டது.

    அங்கு அவர்களுடன் யாரும் பேச முடியவில்லை. பெஹெராவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.   

    • நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர்
    • கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-ஃபாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டனர்.

    சூடானில் மகப்பேறு மருத்துவமனையில் 460 பேரை அந்நாட்டு துணை ராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேறு மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர் என்று உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

    நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுமார் 35,000 பேர் எல்-ஃபாஷர் நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-பாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியிருந்த நிலையில் தற்போதைய படுகொலைகள் நடந்துள்ளன. 

    • மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,
    • இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

    சூடானில் துணை ராணுவப் படை (RSF) மசூதி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

    வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,

    தாக்குதலுக்குப் பிறகு, மசூதி இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.

    சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

    குறிப்பாக எல் ஃபாஷர் நகரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. 

    • நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது.
    • நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.

    சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர்.
    • அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.

    சூடானில் அகதிகள் முகாம் மீது துணை ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

    சூடானில் வடக்கு டார்பூர் மாகாணத்தின் அல்-ஃபாஷிருக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமான அபு ஷோக் முகாம் மீது திங்கள்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.

    இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம் கடந்த காலங்களிலிலும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

    அரசு படைகள் மற்றும் ஆர்எஸ்எப் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இதுபோன்ற முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியாகினர்.

    கெய்ரோ:

    ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

    அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
    • .2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டது.

    கார்டோம்:

    காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில், சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டுள்ளது.

    தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. ஆனால் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சூடானின் சுகாதார மந்திரி ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், கடந்த 4 வாரங்களில் கார்டோம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

    • டார்பூரில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை), வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தின் தலைநகரான எல்-ஓபெய்டில் உள்ள ஒரு சிறைச்சாலையின் மீது RSF ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நகரம் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. RSF தாக்குதல்கள் இங்கு நிலைமையை மேலும் மோசமாகியுள்ளன.

    முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, டார்பூரில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் RSF ஆல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தத் தாக்குதல்களுக்கு முன்னர், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகரான போர்ட் சூடானில், RSF தொடர்ந்து ஆறு நாட்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமாகின. இவற்றில் மின்சார கட்டமைப்பு மற்றும் சிவில் விமான நிலையம் ஆகியவை அடங்கும்.   

    • இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
    • ஏப்ரல் 2023 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நடந்த மோதலில் 24,000 பேர் உயிரிழநதனர்.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை ராணுவப்படையினர் நேற்று திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.

    இந்தத் தாக்குதலால் கிட்டத்தட்ட 2,400 பேர் முகாம்களிலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏப்ரல் 2023 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நடந்த மோதலில் 24,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஐ.நா தேரிவித்துள்ளது. 

    • துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
    • ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில்  உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     

    துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

     

    கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .

    • பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
    • பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

    இந்நிலையில் சூடானில் கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து சுமார் 61 ஆயிரத்து 800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை மற்றும் கட்டாய குழந்தை திருமணங்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் இரு ராணுவ தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். பதிவான வழக்குகளை தவிர்த்து இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் இருக்கலாம் என்ற அச்சம் சர்வதேச சமூகங்களிடையே பரவியுள்ளது.

    • ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி விபத்துள்ளது.
    • நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது.

    சூடானில் ராணுவ விமான விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (செவ்வாய்க்கிழமை) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது.

    ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து விபத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதில் விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் வீடு உள்ள பகுதியிலிருந்த பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற படைகளுக்கும், ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது. 

    ×