search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cholera"

    • கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.
    • 9 மாகாணங்களில் 8-ல் காலரா தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.

    காலரா நோய்த்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஜாம்பியாவிற்கு உதவும் வகையில், மருந்துகள் உள்பட சுமார் 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்களை இந்தியா இன்று விமானம் மூலம் அனுப்பியது.

    ஜாம்பியா நாட்டில் தற்போது திடீரென காலரா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த நாட்டுக்கு உதவ இந்தியா முன் வந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு விமானம் மூலம் மருந்து உதவிப் பொருட்களை இன்று அனுப்பி வைத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காலரா நோயால் பாதிக்கப்பட்ட சாம்பியா நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள் இந்தியா சார்பில் செய்ய முடிவு செய்யப்பட்டதையொட்டி 3.5 டன் மருந்து உதவி பொருட்கள் இன்று சரக்கு விமானம் மூலம் அனுப்பபட்டு உள்ளது.

    இதில் குடிநீர் சுத்திகரிப்பு பொருட்கள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துபொருட்கள் அடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலரா தொற்று நோயால் ஜாம்பியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 600 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. சாம்பியாவின் 10 மாகாணங்களில் 9-ல் காலரா பாதிப்பு பதிவாகியுள்ளது.

    ஜிம்பாப்வே நாட்டில் காலரா நோயின் தாக்கத்தினால் குறுகிய காலகட்டத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர். #Zimbabwe
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் காலரா நோயின் தாக்கத்தினால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயின் தீவிரத்தினால் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இதையடுத்து, நோய் பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும், நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மேலும், நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து தூய்மையாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீர்குழாய்களை சீரமைக்க மக்கள் முடிந்த அளவு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. #Zimbabwe 
    ×