என் மலர்
நீங்கள் தேடியது "Nuclear Weapons"
- அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன.
- எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து 'X' தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன. போர் அச்சுறுத்தல் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன, எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளராகவும் உள்ள எலான் மஸ்க் இதற்கு பதிலளிக்கையில், "போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது இந்தக் கருத்து குறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டோ அல்லது விரிவாகவோ எதுவும் கூறவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் பெற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
- ரஷியா , சீனா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
- எனவே அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
சீனா ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதை சீனா மறுத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், பெய்ஜிங் எப்போதும் அமைதியான வளர்ச்சிப் பாதையில்தான் உள்ளது. அணு ஆயுத பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் அணு ஆயுதங்கள் தற்காப்பு ரீதியானதாகும். சர்வதேச விதிமுறைகளை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்துவதில்லை என உறுதிபூண்டுளோம். சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்படும் சீனா, அணுசக்தி பிரச்சினைகளில் பொறுப்புடன் செயல்படும்.
உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும்" என்று கூறி சர்வதேச விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
ரஷியா , சீனா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிப டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டினார்.
கடந்த காலங்களில், அணு ஆயுதங்களின் அழிவு சக்தி காரணமாக அந்த சோதனைகளை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது என்றும் டிரம்ப் கூறினார். எனவே அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
மீண்டும் அணு ஆயுத சோதனைகளுக்குத் தயாராகத் தொடங்குமாறு பென்டகனுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் கூறியது.
- இந்த ஒப்பந்தம் 2010 இல் திருத்தப்பட்டது.
உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் பிடிகொடுக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே கோபத்தில் உள்ளார்.
இந்த சூழலில், அமெரிக்காவுடன் ரஷியா கையெழுத்திட்ட புளூட்டோனியம் ஒப்பந்தத்தை புதின் ரத்து செய்து டிரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான சட்டதிருத்தத்தில் புதின் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில், புளூட்டோனியம் மேலாண்மை குறித்து அமெரிக்காவிற்கும் ரஷியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இந்த ஒப்பந்தம் 2010 இல் திருத்தப்பட்டது.
இதன்படி ரஷியா தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. இவற்றை அணுமின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
அந்த நேரத்தில், இந்த ஒப்பந்தம்மூலம் சுமார் 17,000 அணு ஆயுதங்களின் உற்பத்தியைத் தடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
2016 இல் அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தபோது புதின் புளூட்டோனியம் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி வைத்தார்.
இந்நிலையில் தற்போது இந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக ரத்து செய்யும் சட்டதிருத்தத்தில் புதின் கெய்யெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் ரஷியா தடையின்றி அணு ஆயுதங்கள் தயாரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
- ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன.
அணுசக்தி திட்டங்களை கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற "ஸ்னாப்பேக்" (Snapback) என்ற அம்சம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் 10 வருடங்கள் கழித்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
தற்போது அமலுக்கு வந்துள்ள இந்திய தடையால் ஈரானின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கப்படும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும், மேலும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
முன்னதாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது.
ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி நேற்று ரஷியா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 28) முதல் தடைகள் அமலுக்கு வந்தன.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரானுக்கு இந்த தடைகள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் மீது தடை விதிக்க ஐநாவுக்கு உரிமை இல்லை என்றும் இந்த தடைகளால் தங்களுக்கு எந்த பொருளாதார பாதிப்புகளும் இருக்காது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
- இதுதொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிரானா மலைகளைத் தாக்கியதாக கூறப்பட்டது.
ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு கடந்த மே மாதம் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணு ஆயுத கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதி இருப்பதாக கூறப்படும் கிரனா மலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இது ஒரு நிலத்தடி அணு ஆயுத சேமிப்பு வசதியைக் கொண்டதாகவும், 1980-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனைகள் உள்பட அணு ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கான தளமாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிரானா மலைகளைத் தாக்கியதாக வந்த செய்திகளை இந்தியா மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை
- கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது உளவுத்துறை சரியாக வேலை செய்யவில்லை என்றும், அதன் இயக்குனர் வழங்கிய தகவல்கள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி காப்பார்டின் நிலைப்பாட்டை அவர் நிராகரித்தார்.
ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் அளித்த தகவல் தவறானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரான் தனது கைவிடப்பட்ட அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்வில்லை என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தத் தகவல் தவறானது என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
"தகவல் தவறாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் இருப்பதாக நான் சொன்னேன். ஆனால் உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை" என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் சிற்பியாக அறியப்படும் ஃபக்ரிஸாதே 2011 இல் SPND அமைப்பை நிறுவினார்.
- ஏவுகணை பாகங்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன.
ஈரான் இஸ்ரேல் மோதல் நேற்றுடன் ஒரு வாரத்தை எட்டியது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஈரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) கூற்றுப்படி, 60க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் சுமார் 120 சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தெஹ்ரானுக்கு அருகிலுள்ள பல ஏவுகணை உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன. ஏவுகணை பாகங்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன.
குறிப்பாக, ஈரானின் அணுசக்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தெஹ்ரானின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SPND) தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி அதை வெற்றிகரமாக அழித்ததாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பலர் பேர் கொல்லப்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் SPND முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் சிற்பியாக அறியப்படும் ஃபக்ரிஸாதே 2011 இல் SPND அமைப்பை நிறுவினார்.
இதற்கிடையே ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எஸ்பிஎன்டி முக்கிய பங்கு வகிக்கிறது.
- எங்களுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தடுக்கும் பணியை முடிக்க தேவையான வரை இந்த நடவடிக்கை தொடரும்.
- தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டன.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் தங்களை தாக்கும் என உளவுத்துறை தகவல் கிடைத்ததாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) தெரிவித்தது. அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளானால், அதன் ஆயுதப் படைகள் உடனடியாக இஸ்ரேலின் "ரகசிய அணுசக்தி நிலையங்களை" குறிவைக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி இஸ்ரேல் ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் நலன் கருதி ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் "எங்களுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தடுக்கும் பணியை முடிக்க தேவையான வரை இந்த நடவடிக்கை தொடரும்" என்று நேதன்யாகு அறிவித்தார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த தாக்குதலை, "உடனடி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்குவதை நோக்கமாகக் கொண்ட முன்கூட்டிய தாக்குதல்" என்று விவரித்தார்.
மேலும், ஈரான் திருப்பி தாக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேல் முழுவதும் சிறப்பு அவசரகால நிலையை காட்ஸ் அறிவித்தார்.
இதற்கிடையில், இன்று அதிகாலை நேரத்தில் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய தாக்குதல்கள் இராணுவ உள்கட்டமைப்பு அல்லது அணுசக்தி தொடர்பான வசதிகளை குறிவைத்திருக்கலாம் என்ற நம்பப்படுகிறது. குண்டுவெடிப்புகளுக்கான ஆதாரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று ஈரானின் அரசு ஊடகமான IRIB குறிப்பிட்டது.
இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பலரால் நம்பப்படுகிறது, இருப்பினும் அது இதை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை அல்லது மறுக்கவில்லை.
இந்த சூழலில் ஈரான் திருப்பி தாக்கினால் விளைவு விபரீதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.
இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை பெற்றுள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
உளவுத்துறை ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி தளங்களை உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக SNSC தெரிவித்துள்ளது.
ஈரானிய நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்த இலக்குகள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பலர் நம்பினாலும், அந்த நாடு இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
- காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
- அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம்.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
முன்னதாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இந்த கருத்தை பாகிஸ்தான் மந்திரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிடவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் வழக்கமான திறன்கள் போதுமான அளவு வலுவாக இருப்பதால், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இந்தியாவைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை.
இந்தியாவின் தாக்குதல்கள் ஒரு போர் ஆகும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா அதன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இரு தரப்பினருக்கும் கண்ணியத்தை வழங்கும் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையை நிறுவ பாகிஸ்தான் ஆவலுடன் இருக்கிறது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம். வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் நீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றார்.
- ரஷியாவுக்கு வரும் உலகத் தலைவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என ஜெலன்ஸ்கி தடாலடியாக அறிவித்தார்.
- அணு ஆயுதத்தை எளிதில் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டின் அணுசக்தி விதிகளை புதின் புதுப்பித்தார்.
உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்றும், அது ஏற்படாது என்று நம்புவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
ரஷிய அரசு ஊடக தொலைக்காட்சியில் பேசிய அவர், உக்ரைனில் உள்ள மோதலை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வர ரஷியாவிடம் வலிமையும் வழிமுறைகளும் உள்ளன என்று புதின் கூறினார்.
ரஷிய பிரதேசத்தில் உக்ரேனிய தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், "அந்த (அணு) ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் அவை தேவைப்படாது என்று நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக மே 8 முதல் மே 10 வரை இரண்டாம் உலகப்போரில் ரஷிய வெற்றி தின அணிவகுப்பை முன்னிட்டு 3 நாள் போர் நிறுத்தத்தை புதின் முன்மொழிந்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு அன்றைய தினம் வரும் உலகத் தலைவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என தடாலடியாக அறிவித்தார்.
ரஷியா அணு ஆயுதத்தை எளிதில் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டின் அணுசக்தி விதிகளை புதின் கடந்த நவம்பர் 2024 இல் புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- ரஷிய ஊடகமான ஆர்டிக்கு அளித்த பேட்டியில் பேசினார்.
- இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷிய ஊடகமான ஆர்டிக்கு அளித்த பேட்டியில் ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பேட்டியில் பேசிய அவர், இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்க எங்களுக்கு ஆர்வம் இல்லை.
இருப்பினும், இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை எதையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோம் என்று கூறினார்.
முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசியும் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். எல்லைகளில் 130 ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.






