என் மலர்
நீங்கள் தேடியது "பொருளாதார தடை"
- உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார்.
- ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
கீவ்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் பதவி ஏற்றபின் ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியாவின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
இந்நிலையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவுகளை மேலும் விரிவுபடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
- பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
- ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன.
அணுசக்தி திட்டங்களை கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற "ஸ்னாப்பேக்" (Snapback) என்ற அம்சம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் 10 வருடங்கள் கழித்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
தற்போது அமலுக்கு வந்துள்ள இந்திய தடையால் ஈரானின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கப்படும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும், மேலும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
முன்னதாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது.
ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி நேற்று ரஷியா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 28) முதல் தடைகள் அமலுக்கு வந்தன.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரானுக்கு இந்த தடைகள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் மீது தடை விதிக்க ஐநாவுக்கு உரிமை இல்லை என்றும் இந்த தடைகளால் தங்களுக்கு எந்த பொருளாதார பாதிப்புகளும் இருக்காது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
- இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன்?
ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார். இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
இந்நிலையில் புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுமார் 2.2 கோடி ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஷியா மீது அமலில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்க வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது என தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, ரஷியா ஏற்கனவே கடுமையான தடைகளின் கீழ் உள்ளது என்றும், புதிய தடைகள் உடனடியாகப் பலன் தராது என்றும் கூறினார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் அதன் நிலப்பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜெலென்ஸ்கி உறுதியாக நிராகரித்துள்ளார்.
3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தைவான் விவகாரத்தில் இரு நாடுகள் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- பொருளாதார தடை மேலும் பதற்றத்தை தூண்டி உள்ளது.
பீஜிங்:
சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் அரசாங்கத்துக்கு எதிராக 2019-ல் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதனை ஒடுக்குவதற்காக ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அமெரிக்கர்கள் உள்பட 19 பேர் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர்.
இதனால் நாடு கடத்த அடக்குமுறையில் ஈடுபட்டதாக கூறி சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த 6 அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
ஏற்கனவே வர்த்தக வரி உயர்வு மற்றும் தைவான் விவகாரத்தில் இரு நாடுகள் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் தற்போதைய இந்த பொருளாதார தடை மேலும் பதற்றத்தை தூண்டி உள்ளது.
- மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் 4 பேர் மீது பொருளாதார தடை.
- இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய போரில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது.
இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகோடா, முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணை தலைவராக இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் துணை மந்திரியான வினாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேரும் இங்கிலாந்துக்கு பயணம் செய்யவும், அங்குள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக கொலை, துன்புறுத்தல் அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான 4 பேர் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், "இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுமார் 30 வருட சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக, இலங்கை அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
- இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது.
- வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வாஷிங்டன் :
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் சில ஏவுகணைகளும் அடங்கும்.
அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வடகொரியா இத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது.
அதே போல் தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய 3 மூத்த ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் பல தனிநபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் நிறுவனங்கள் மீது தடை
- ஏற்றுமதியாளர்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நாளில் இருந்து அமெரிக்கா பல்வேறு தடையை ரஷியா மீது அமல்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மேலும், உக்ரைன் பதிலடி கொடுக்க பில்லியன் கணக்கில் ராணுவ உதவிகளும் செய்து வருகிறது. இருந்தாலும் ரஷியா போரை நிறுத்துவதுபோல் தெரியவில்லை. வருவாய், ராணுவ உதவிகள் எங்கிருந்து வருகிறதோ, அந்த இடத்தையெல்லாம் முடக்கி, ரஷியாவிற்கு மூச்சுச் திணறலை கொடுக்க அமெரிக்கா முயற்சி செய்துள்ளது.
அந்த வகையில் ரஷியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் வரை பல்வேறு நாடுகளில் உள்ள 120 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.
ரஷிய சுரங்கம், தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்துள்ளது. கிர்கிஸ்தானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நபர்கள் மீதும் இந்த பொருளாதார தடை பாய்ந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்ட பொறியியல் கம்பெனி ரஷியாவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தது. இந்த நிறுவனத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஜப்பானில் அமெரிக்கா மற்றும் ஏழு நடுகள் இடையிலான மாநாடு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியா பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதார தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது முழு அளவில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுக்கு பொருளாதார அளவில் நெருக்கடி கொடுப்பதற்கும், சட்டவிரோத போரை ஆதரிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பொறுப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த எதிர்பாராத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
உக்ரைனுக்கு எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் துணை நிற்போம்'' என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
- நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷிய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.
இதேபோல் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷிய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
- அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
பீஜிங்:
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
- கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
- வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.
நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிரு பர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், எல்லாம் மேஜையில் உள்ளது என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.

இந்தநிலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம். அதன் விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார்.
இதற்கிடையே கனடாவின் சீக்கிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
- இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

டிரம்ப் தனது புளோரிடா மார்-ஏ லாகோ தோட்டத்தில் செய்தியாளர் கூட்டத்தில், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க "பொருளாதார சக்தியை" பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.
பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். அவற்றை கைப்பற்ற படைகளை கூட அனுப்புவேன்.தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன்.
அதேபோல் கனடாவுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோவும் அமெரிக்காவின் அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.
- அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
- தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டோக்கியோ:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2023-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன. அதேபோல் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகிறது.
அதன்படி உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷியாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.






