search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US sanctions"

    வெனிசுலா நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான தடையை தளர்த்துவதற்கு, அமெரிக்கா புதிய நிபந்தனையை விதித்துள்ளது. #VenezuelaOilCompany #USSanctions #NickolasMaduro
    வாஷிங்டன்:

    எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இம்மாதத் தொடக்கத்தில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, அதிபராக அங்கீரித்துள்ளன. அத்துடன், அதிபர் நிகோலஸ் மதுரோ அதிகாரத்தை ஜூவான் கெய்டோவிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால், ஜூவான் கெய்டோவின் நியமனத்தை அதிபர் மதுரோ ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் அமெரிக்காவுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாகவும் அறிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ஜூவான் கெய்டோவுக்கோ அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்றார்.



    இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்டீவன் மனுச்சின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெனிசுலா அதிபர் மதுரோ, தற்காலிக அதிபராக அறிவித்துள்ள ஜூவான் கெய்டோவிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தும் என்று கூறினார்.

    பிடிவிஎஸ்ஏ நிறுவனம் மீது நேற்று புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது. #VenezuelaOilCompany #USSanctions #NickolasMaduro

    தேர்தல் தலையீடு குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசு, ரஷ்யா தொடர்புடைய மேலும் 22 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது. #USSanctions #RussianSpies
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஷ்யாவை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. அரசியல் கட்சிகள், தலைவர்களின் இ-மெயில், சர்வர்களில் ஊடுருவி (சைபர் ஹேக்கிங்) அத்துமீறலில் ஈடுபட்டதாக ரஷ்ய உளவு அமைப்புகள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    இந்த  குற்றச்சாட்டை ரஷ்யா ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது. எனினும், தொடர்ந்து சைபர் ஹேக்கிங் குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்தது. அத்துடன் அமெரிக்காவில் உள்ள ரஷ்ய உளவு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புதிய தடைகளை பிறப்பித்து வருகிறது.

    அவ்வகையில், 18 ரஷ்ய தனிநபர்கள் மற்றும் 4 ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. தடைவிதிக்கப்பட்ட 18 நபர்களில் 15 பேர், ரஷ்யாவின் பிரதான புலனாய்வு அமைப்பின் (ஜிஆர்யு) உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுவரை ரஷ்யா தொடர்புடைய 272 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USSanctions #RussianSpies
    ஈரானில் உள்ள சபஹார் துறைமுக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்கா பொருளாதார தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்துள்ளது. #ChabaharPort #USSanctions #USExemptedIndia
    வாஷிங்டன்:

    ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமல்படுத்தியுள்ளது. நவம்பர் 5-ம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த பொருளாதார தடை இதுவரை இல்லாத மிக கடுமையானது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஈரானிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு தடை விதித்துள்ளது. எனினும், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளது.

    இந்தப் பொருளாதாரத் தடைகளால், அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்கா நம்புகிறது.



    இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கானிஸ்தானை இணைக்கும் ரெயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு சில அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, “நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இங்கிருந்து ஆப்கனுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அமெரிக்கா சில அனுமதியை வழங்கி உள்ளது. ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதித்துள்ளது” என்றார். #ChabaharPort #USSanctions #USExemptedIndia
    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சூளுரைத்துள்ளார். #Iransanctions #USsanctions #Rouhani
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

    மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


    இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

    ஈரான் மக்களிடையே இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ரவுகானி, 'சர்வதேச நெறிமுறைகளை மீறி எங்கள் மீது உங்களால் (அமெரிக்கா) திணிக்கப்பட்டுள்ள சட்டமீறலான அத்தனை தடைகளையும் தகர்த்து நாங்கள் பெருமையுடன் முன்னேறி வருவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டார். #Iransanctions #USsanctions #Rouhani
    ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். #IranSanctions #USSanctions
    தெக்ரான்:

    ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூற கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது.

    மேலும் ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார தடை இருக்கும் என்றும் எச்சரித்தார். ஈரான் மட்டுமின்றி அதனுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கும் இந்த தடை பாயும் என்றும் தெரிவித்தார்.

    அந்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரசாரத்துக்கு புறப்படும் முன்பு அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஈரான் மீதான பொருளாதார தடை கடுமையாக இருக்கும். அது எப்போதும் இல்லாத வகையில் மிக பலம் வாய்ந்ததாக இருக்கும். என்ன நடக்கும் என்பதை பார்க்க தானே போகிறோம் என்றார்.

    இதன் மூலம் எண்ணை ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும். மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய கம்பெனிகள் ஈரானில் இருந்து வெளியேறும். அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும். எனவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.



    தெக்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி அமெரிக்காவுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதே போன்று மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் ஈரான் ராணுவத்தின் போர் விமானங்கள் வானத்தில் பறந்து பயிற்சிகள் மேற்கொண்டன. நாட்டின் பாதுகாப்பு பணியில் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதை காட்டுவதற்கு இவை நடத்தப்பட்டன.

    ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தடையை ஏற்க மறுத்த இவர்கள் ஈரானுடனான வர்த்தகத்தை டாலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். #IranSanctions #USSanctions
    தடைகளை தொடர்ந்து விதித்துவரும் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷியா வெளியுறவுத்துறை மந்திரி குறிப்பிட்டுள்ளார். #RussiawarnsUS #USSanctions
    மாஸ்கோ:

    சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு நேற்று பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக, ரஷியாவை சேர்ந்த 33 உளவு நிறுவனங்கள் மற்றும் ராணுவத்துடன் தொடர்புடையை தனியார் நிறுவனங்கள் இந்த தடை வளையத்துக்குள் வந்துள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா வெளியுறத்துறை மந்திரி செர்கேய் ரியாப்க்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.



    அமெரிக்கா விதித்துவரும் தடைகளால் ரஷியாவின் நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் தடை விதிப்பது வேடிக்கையாக உள்ளது. அமெரிக்காவில் இருப்பவர்கள் பொழுதுப்போக்குக்காக இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

    அமெரிக்காவின் இந்த அர்த்தமற்ற செயல்களால் ரஷியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அரசியலில் பதற்றமும் உருவாகும் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அபாயகரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று செர்கேய் ரியாப்க்கோவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். #RussiawarnsUS #USSanctions
    அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் இன்று தனது வாதத்தை முன்வைக்க உள்ளது. #USSanctions #DonaldTrump #ICJ #IranUSLawsuit
    தி ஹேக்:

    ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

    குறிப்பாக ஈரானின் எண்ணெய் வளம் மற்றும் ஆற்றல் துறைகளை குறிவைத்து மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.  இதனால் ஈரான்  பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. அந்நாட்டின் பண மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் மீது இன்று விசாரணை தொடங்க உள்ளது. அப்போது ஈரான் அரசு தங்கள் தரப்பு நியாயத்தையும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக கூற உள்ளது.



    அமெரிக்கா விதித்துள்ள தடைகள் சீர்படுத்த முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்றும் ஈரான் தனது மனுவில் கூறியிருக்கிறது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. இந்த அம்சங்களை முன்வைத்து இன்று ஈரான் தனது வாதத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரான் வாதம் இன்று முடிந்ததும், வாஷிங்டன் தரப்பு வழக்கறிஞர்கள் நாளை ஆஜராகி வாதாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #USSanctions #DonaldTrump #ICJ #IranUSLawsuit
    ×