என் மலர்
நீங்கள் தேடியது "Economic sanctions"
- ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.
ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சில நாட்களுக்கு முன்பு டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதற்கிடையே ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதினை சந்தித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன் போர் விவகாரத்தில் ஏற்கனவே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த ரஷியா மறுத்து வருவதால் அந்நாட்டின் 2 மிகப்பெரிய எண்ணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து உள்ளது.
ரோஸ்நெப்ட் , லுகோயில் ஆகிய 2 நிறுவனங்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் துணை நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவை மிகப்பெரிய தடைகள். ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "போர் முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.
மேலும் அமெரிக்க கருவூல துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறும்போது,"இந்த அர்த்தமற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் புதின் மறுத்துவிட்டதால், ரஷியாவின் போர் எந்தி ரத்திற்கு நிதியளிக்கும் அந்நாட்டின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போல் புதின் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்றார்.
- இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன்?
ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார். இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
இந்நிலையில் புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுமார் 2.2 கோடி ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஷியா மீது அமலில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்க வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது என தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, ரஷியா ஏற்கனவே கடுமையான தடைகளின் கீழ் உள்ளது என்றும், புதிய தடைகள் உடனடியாகப் பலன் தராது என்றும் கூறினார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் அதன் நிலப்பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜெலென்ஸ்கி உறுதியாக நிராகரித்துள்ளார்.
3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

டிரம்ப் தனது புளோரிடா மார்-ஏ லாகோ தோட்டத்தில் செய்தியாளர் கூட்டத்தில், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க "பொருளாதார சக்தியை" பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.
பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். அவற்றை கைப்பற்ற படைகளை கூட அனுப்புவேன்.தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன்.
அதேபோல் கனடாவுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோவும் அமெரிக்காவின் அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.
- ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
- வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்தித்து பேசினார்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.
மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் டிரம்ப் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் அமலில் இருக்கும். ரஷியாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11-ந்தேதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய உளவுப்படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் என்பவரும் அவரது மகள் யூலியா ஆகியோர் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். ரஷிய உளவுப்படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த மார்ச் மாதம் செர்கே மற்றும் அவரது மகள் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முழுக்க முழுக்க ரஷியா தான் காரணம் என இங்கிலாந்து குற்றம்சாட்டியது. இங்கிலாந்தின் குற்றசாட்டை ஏற்ற அமெரிக்கா ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது.
ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வரும் நிலையில் இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தி அதில் தாக்குதல் நடத்தியது ரஷ்யாதான் என உறுதி செய்தது. இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகுறித்து ரஷியாவின் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘இந்த பொருளாதார தடையை நிச்சயம் ஏற்க முடியாது' என உறுதிபட தெரிவித்துள்ளது. #Russia #USA #EconomicSanctions
அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே சில பொருளாதார தடைகளை விதித்து இருந்தது.
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கே ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினார்கள்.
இதில், செர்கே ஸ்கிரிபால் ரஷிய உளவு படையை சேர்ந்தவர் ஆவார். அவர் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில்தான் தாக்குதல் நடந்தது. இதில், பாதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். அவர்கள் மீது ரஷியாதான் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், ரஷியா நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியது.
இது சம்பந்தமாக இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தியது. அதில், ரஷியாதான் தாக்குதல் நடத்தியது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கூறி இருக்கிறது.
இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.

ஆனால், அதையும் மீறி ரஷியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதை நாங்களும் உறுதி செய்து இருக்கிறோம். இதனால் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷியா மீது கூறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக ரஷியா அமெரிக்கா மீது சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Russia #USA #sanctions






