என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia Discounted Oil"

    • ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சில நாட்களுக்கு முன்பு டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதினை சந்தித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

    உக்ரைன் போர் விவகாரத்தில் ஏற்கனவே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த ரஷியா மறுத்து வருவதால் அந்நாட்டின் 2 மிகப்பெரிய எண்ணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து உள்ளது.

    ரோஸ்நெப்ட் , லுகோயில் ஆகிய 2 நிறுவனங்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் துணை நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இவை மிகப்பெரிய தடைகள். ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "போர் முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.

    மேலும் அமெரிக்க கருவூல துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறும்போது,"இந்த அர்த்தமற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் புதின் மறுத்துவிட்டதால், ரஷியாவின் போர் எந்தி ரத்திற்கு நிதியளிக்கும் அந்நாட்டின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போல் புதின் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்றார்.

    • டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
    • டிரம்பிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம்.

    பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.

    இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறும்போது," ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகவும் மேலும் கொள்முதலை குறைக்கும்" என்றார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்க போவதில்லை என்று டிரம்ப் மீண்டும் கூறியதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி இறுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார். டிரம்ப் தனக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததாக மட்டுமே கூறினார். ஆனால் மோடி எதை மறைத்தாலும், டிரம்ப் வெளிப்படுத்துகிறார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து பேசிய தாகவும் இந்த இறக்குமதி நிறுத்தப்படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.

    முதலில் டிரம்ப்பிடம் இருந்து ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களைப் பெற்றோம். இப்போது அவரிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம். பிரதமர் மோடி எதை மறைக்கிறார்? அவர் எந்த அழுத்தத்தில் இருக்கிறார்? அவர் எதற்கு பயப்படுகிறார்? ஹவ்டி மோடி-நமஸ்தே டிரம்ப் முற்றிலும் கெட்டுப்போனது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
    • குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது என தூதர் தகவல்

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.

    ரஷியாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

    உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், எந்த நாட்டிடம் இருந்து நல்ல ஒப்பந்தம் கிடைக்கிறதோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறியதாவது:-

    ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது, எங்கள் வர்த்தகம் அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன். அது இந்திய அரசு முடிவு செய்யும் விஷயம். மிகக் குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் ஜனவரி மாதம் ஒரு நாளுக்கு 1.4 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இது டிசம்பர் மாத இறக்குமதியைவிட 9.2 சதவீதம் அதிகமாகும். ரஷியாவின் மாதாந்திர எண்ணெய் விற்பனையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×