search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water scarcity"

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராமநாதசுபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முழு குடிநீர் தட்டுப் பாட்டை போக்கிடும் வகை யில் தமிழ்நாடு அரசு சார் பில் ரூ.2,819 கோடி மதிப் பீட்டில் சிறப்பு கூட்டு குடி நீர் திட்டம் ஒப்புதல் அளிக் கப்பட்டு கடந்த மே மாதம் 2-ந்தேதி நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தொடங்கப்பட் டுள்ளது.

    மேல்நிலை தொட்டிகள்

    அந்த வகையில், ராமநாத புரம் நகராட்சியில் ரூ.229 கோடி மதிப்பீட்டில் தொடங் கப்பட்ட சிறப்பு கூட்டு குடி நீர் திட்டப்பணிக்காக கான் சாகிப் தெரு, கோட்டை மேடு, சிங்காரம் தோப்பு ஆகிய மூன்று இடங்களில் 50 லட்சம் மதிப்பீட்டில் 14.5 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட இருக்கி றது.

    இதையொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக கட்டுமான பணி பூமி பூஜைக்கு குடிநீர் வடிகால் வாரிய மண்டல ஒருங்கி ணைப்பாளர் ஜெ.பாலாஜி தலைமை தாங்கினார்.

    இந்த திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கி டலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்த லைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் ரெங்கராசு, ராமநாத புரம் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன்,

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாள ரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான நகராட்சி கவுன்சிலர் முகம் மது ஜஹாங்கீர் (எ) ஜவா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் தொழிலதிபர் என்.திருமாறன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ.பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் கலந்துகொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசு நிதியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
    • அம்ரூத் திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசு நிதியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மொத்தம் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதில் 23 பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள ஐந்து பணிகளில் இம்மாதம் டவுன்ஹாலில் கட்டப்படும் மாநாட்டு அரங்கம் மற்றும் பஸ் நிறுத்தம் எதிரே தினசரி மார்க்கெட் ஆகிய இரண்டு பணிகளையும் இம்மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் நொய்யல் கரை சீரமைப்பு பணி முடிவடையும். காயிதே மில்லத் நகர், சின்னான் நகர் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.

    எனவே இவ்விரு பணிகளையும் செப்டம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அம்ரூத் திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட்சிட்டி அம்ரூத் திட்ட பணிகளை முடிக்க முனைப்பு காட்டி வருகிறோம். 4-வது குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திட்டம் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக விலகிவிடும்.

    இவ்வாறு பவன்குமார் கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் குடிநீர் ஆதார மேம்பாட்டு பணிகள் ரூ.529.35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு திட்டங்களின் மூலம் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், புதிய கிணறு அமைத்தல், ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறு திறன் அதிகரித்தல் உள்ளிட்ட 108 குடிநீர் ஆதார மேம்பாட்டு பணிகள் ரூ.529.35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை அம்பை-04634250397, சேரன்மாதேவி- 04634260131, களக்காடு-04635265532, மானூர்-04622485123, நாங்குநேரி-04635250229, பாளையங்கோட்டை- 04622572092, பாப்பாக்குடி- 04634274540, வள்ளியூர்-04637220242, ராதாபுரம்-04637254125 ஆகிய பஞ்சாயத்து யூனியன் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

    • தொண்டியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இதுசம்பந்தமாக எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல்நிலை பேரூராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் வழக்கமாக வழங்கப்படும் குடிநீரின் அளவை விட மிகக்குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை தடையின்றி வழங்க தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    தொண்டி பேரூராட்சி பகுதியில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் பொருத்தவும், மீன் வளத்துறைக்குச் சொந்தமான இடத்தில் முன்பு செயல்பட்டு வந்த ஐஸ் பிளாண்ட்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தொண்டி ஜெட்டி பாலத்தை சீரமைக்கவும், தொண்டியை தனி தாலுகாவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி உட்புறம் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும், புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும், தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமாக சேந்தனி போர்வெல் பழுதடைந்துள்ளதால் அதன் அருகில் புதிதாக போர்வெல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனுவை வழங்கினர்.

    அப்போது தொண்டி நகர காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, தி.மு.க. செயலாளர் இஸ்மத் நானா ஆகியோர் உடனிருந்தனர்.

    • நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது.
    • தென்னை நார்கழிவுகள், கரும்புசோகை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம்.

    குடிமங்கலம் :

    கோடை காலத்தில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பயிர் மேலாண்மை உத்திகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:- கோடை காலங்களில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வெப்ப அயர்ச்சி உற்பத்தியிலும், பொருளாதார ரீதியாகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது. ஆனால் வெப்ப அயற்சியின் காரணமாக ஏற்படும் மாற்றம், இலைகளின் அளவு மற்றும் வடிவத்தின் வாயிலாகவும், மகசூல் குறைவதன் வாயிலாகவும் தெரிகிறது. நீர் தட்டுப்பாட்டை போக்க மேலாண்மை செய்ய, பயிர்களுக்கு மூடாக்கு முறைகளையும் வெப்ப அயர்ச்சியை குறைக்க நீராவிபோக்கை குறைக்கும் முறைகளையும் செயல்படுத்தினால் அதிக மகசூல் கொடுக்கும்.

    நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைப்பதன் வாயிலாக நீர் ஆவியாதலை குறைத்து கிடைக்கும் நீரை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். மூடாக்கின் அமைப்பதால் களை கட்டுப்பாடு மற்றும் நுண்ணுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தி மண்ணை உயிர்ப்போடு வைத்திருக்கலாம்.சில சமயம் துணை பயனாக களைக்கட்டுப்பாட்டு செலவு குறைவதால் நீர்பற்றாக்குறை இல்லாத இடங்களில் கூட நிலப்போர்வை முறை பின்பற்றப்படுகிறது.பயிர் எச்சங்களை 5 முதல் 10 செ.மீ., தடிமன் அளவுக்கு சராசரியாக பரப்பி விடுதல் வேண்டும். இதற்கு ெஹக்டேருக்கு 5 முதல் 10 டன் என்ற அளவிற்கு பயிர் எச்சங்கள் தேவைப்படலாம்.

    தென்னை நார்கழிவுகள், ஓலைகள், கரும்புசோகை, கரும்புச்சக்கை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம். இவற்றை கையாள்வதற்கும், பரப்புவதற்கும் ஏற்ப சிறிய துண்டுகளாக இருப்பது அவசியம்.

    நெகிழி மூடாக்கில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களினால் தாள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் தடிமன் 20 முதல் 25 மைக்ரான் வரை இருக்கும். கருப்புநிறம் கொண்ட தாள்கள், மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை நிற நிலப்போர்வையில் கருப்பு நெகிழி மூடாக்கைவிட வெப்பநிலை குறைவாக இருக்கும்.

    சொட்டுநீர் குழாய்களை சரியாக வரிசைப்படுத்தி அதன் மீது போர்வையை போர்த்திய பின் அதன் ஓரங்களில் மண் அணைக்க வேண்டும். பயிரின் இடைவெளிக்கு ஏற்ப சீரான இடைவெளியில் துளைகள் இட வேண்டும். அதன்பின் நாற்று விதைகளை நடலாம்.

    வெப்ப அயர்ச்சியை தவிர்க்க நீராவி போக்கினை கட்டுப்படுத்தியும், இலைகளில் வெப்பநிலையை மாற்றக்கூடிய திரவங்களை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்தும் திரவங்களை சமீப காலமாக மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வெவ்வேறு வகையான செயல்திறன் கொண்ட திரவங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அவற்றின் நோக்கம் வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமே.

    உதாரணமாக திரவ நுண்ணுயிரான மெத்தைலோபாக்டீரியாவை காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு சதவீத கரைசலை ஒரு லிட்டர் நீரில் 20 மில்லி அளவில் தெளித்து பயன்படுத்தலாம். அப்போது பச்சையத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். இதனால் மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.இதனை பூ மற்றும் காய் பிடிக்கும் போதும், வறட்சியான நேரங்களிலும் பயன்படுத்துவது சிறந்தது. அதேபோல் கயோலின் என்ற மருந்து, களி மண் கலந்தது போன்று இருக்கும். இதை தண்ணீரில் 5 சதவீதம் என்ற அளவில் தெளிக்கும் போது வெப்ப நிலை மற்றும் நீராவிப்போக்கு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
    • குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் நகர் மன்றத்தலைவர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 90 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.

    நகரில் குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை பிரச்சினை உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சரிவர பணி செய்யாததால் நகரில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிமாகி வருகிறது.

    நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் கவுன்சி லர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை கண்டு கொள்வதில்லை. நகராட்சி யில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு குற்றச்சாட்டு களை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினை சரிசெய்யப்படும். நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ்நிலையம் இடிக்கப் பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.

    இங்கு கூடுதலாக கடைகள், பார்க்கிங் வசதி அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் நகர் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கவும், ரூ.8.7 கோடி செலவில் வாறுகால் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது, என்றார்.

    • கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    • முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி, நீராவி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமசாமி பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    அமைச்சர் ராஜ கன்ணப்பன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளி குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும். கிராமங்கள் தோறும் பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும். அதற்கான பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார். தமிழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடுமையாக திராவிட இயக்கம் எதிர்க்கும்.

    திராவிட தலைவர்களில் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின் மட்டுமே உள்ளார். தமிழ்மக்களில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்கத்தில் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. மந்திரி, எம்.எல்.ஏ. பதவி வரும்-போகும். எந்த பதவியில் இருந்தாலும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

    முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கமுதியில் மில் தொடங்கப்பட உள்ளது. நான் படிக்கும் காலத்தில் கிராமங்களுக்கு பஸ் வராது. 8 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்வோம். இப்போது அப்படி இல்லை. கிராமங்களுக்கே பஸ் வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பெருநாழி போஸ், முதுகுளத்தூர் பூபதி மணி, கடலாடி ஆறுமுகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடஞ்சாவடி ஒன்றியம், தப்பகுட்டை ஊராட்சி 2 -வது வார்டுக்கு உட்பட்ட தாடிகாரனுாரில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக அந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

    காகாபாளையம்:

    மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பகுட்டை ஊராட்சி 2 -வது வார்டுக்கு உட்பட்ட தாடிகாரனுார், பெரியபொன்னு காட்டுவளவு பகுதியில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2012- ல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

    ஆனால் பல்வேறு காரணங்களால் இதுவரை அதில் நீறேற்றம் செய்வதில்லை. அதனால் அந்த பகுதியில் சுமார் 20- க்கும் மேற்பட்ட தனிபைப்லைன் அமைத்து மக்கள் தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக அந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது. .அதனால் மக்கள் தங்கள் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் குடிநீருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தறிதொழிலாளி வெங்கடேசன் (வயது 36) என்பவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவி யேற்ற பிறகு பைப் லைன் துண்டிக்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 2 தூண் எங்கள் நிலத்திலும்,மற்ற 2 தூண் மற்றொருவர் நிலத்திலும் உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியவில்லை இது குறித்து கடந்த 28-ந்தேதி மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தோம். கடந்த 12-ல் சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தோம் கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் அதிகாரிகள் வந்து பிரச்சனையை தீர்க்க முடியாமல் திரும்பிவிட்டனர். பிரச்சினை தீர்த்து குடிநீர் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    ×