search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை
    X

    குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை

    • ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
    • குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் நகர் மன்றத்தலைவர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 90 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.

    நகரில் குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை பிரச்சினை உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சரிவர பணி செய்யாததால் நகரில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிமாகி வருகிறது.

    நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் கவுன்சி லர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை கண்டு கொள்வதில்லை. நகராட்சி யில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு குற்றச்சாட்டு களை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினை சரிசெய்யப்படும். நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ்நிலையம் இடிக்கப் பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.

    இங்கு கூடுதலாக கடைகள், பார்க்கிங் வசதி அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் நகர் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கவும், ரூ.8.7 கோடி செலவில் வாறுகால் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது, என்றார்.

    Next Story
    ×