என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவுறுவதில் சிக்கல்"

    • இந்திய குடும்பங்களில் ஆண் மலட்டுத்தன்மை பற்றி பேசுவது இழிவு என்ற மனநிலை உள்ளது.
    • ஆண் மலட்டுத் தன்மையை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்.

    இந்தியாவில் திருமணமான பெண்களின் கருவுறாமை பிரச்சினைக்கு அதிகரித்து வரும் ஆண்களின் உயிரணு குறைபாடே 50 சதவீதம் வரை காரணம் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரி வித்துள்ளது.

    இந்தியாவில் கருவுறுதலில் பிரச்சினை ஏற்பட்ட 2.75 கோடி பேரில் ஆண்கள் கிட்டத்தட்ட சரிபாதி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    அதிகரித்து வரும் ஆண் மலட்டுத் தன்மை

    சமீபத்தில் சோதனைக் குழாய் குழந்தை தொடர்பான தேசிய கருத்தரங்கு இந்திய கருவுறுதல் துறை தலைவர் டாக்டர் பங்கஜ் தல்வார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

    இதில் மகப்பேறு மற்றும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு தொடர்பான சிறப்பு டாக்டர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் அதிகரித்து வரும் ஆண் மலட்டுத் தன்மை குறித்து விவாதம் நடந்தது.

    புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற மோசமான பழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாததால் அதிகரித்து வரும் உடல் பருமன், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள், நவீன வாழ்க்கை சூழலால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஆண் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என நிகழ்ச்சியில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.

    ஆண் மலட்டுத்தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வரும் டாக்டரும் இந்திய கருவுறுதல் அமைப் பின் தலைவருமான அமீத் பட்கி கூறுகையில்:-

    சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினர் விகிதம் அதிகரித்து வருவதால் இந்தியாவின் அதன் சந்தை மதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு 750 மில்லியலான இருந்தது. 2030-ம் ஆண்டிற்குள் அதன் சந்தை மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயரும் எனவும் தெரி வித்தார்.

    கருவுறாமை பிரச்சினையில் ஆண்களின் பங்கு சரிபாதி இருக்க பழியை பெண் மீது சுமத்திவிட்டு ஆண்கள் மவுனமாக இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்திய நல்வாழ்வு கவுன்சில் தலைவர் கமல் நாராயணன் கூறுகையில்:-

    ஆண் மலட்டுத் தன்மையை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும். எதார்த்தத்தை புரிந்து கொண்டு ஆண் பெண் இருவரையும் உள்ளடக்கிய சுகாதார பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

    இந்திய குடும்பங்களில் ஆண் மலட்டுத்தன்மை பற்றி பேசுவது இழிவு என்ற மனநிலை இன்னமும் உள்ளது. அந்த மனநிலை யிலிருந்து விலகி அதை அறிவியல் பூர்வமாக அணுகி இதற்கான தீர்வு குறித்து நகர வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணர்கள் பேசினர்.

    • நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர்.
    • ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும்.

    2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 1.46 பில்லியனாக (146 கோடியாக) அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை அறிக்கை (UNFPA's 2025 State of World Population Report) தெரிவித்துள்ளது.

    UNFPA அறிக்கையின்படி, 2025 இல் 1.46 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். இது சுமார் 40 ஆண்டுகளில் 1.7 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளது, இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற மாற்றீட்டு விகிதத்திற்கும் (Replacement Rate) கீழே உள்ளது.

    இந்தியாவின் 24% மக்கள் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 17% பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26% பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 7% ஆக உள்ளது.

    2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    1960 இல் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட 6 குழந்தைகள் இருந்த நிலையில், இன்று சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலைக்கு குறைந்துள்ளதற்கு கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் என UNFPA தெரிவித்துள்ளது.

    இனப்பெருக்க நோக்கங்களை பூர்த்தி செய்ய இயலாமையே உண்மையான கருவுறுதல் நெருக்கடி என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    பாலினம், கருத்தடை மற்றும் குடும்பம் தொடங்குவது பற்றிய சுதந்திரமான மற்றும் தகவலறிந்த இனப்பெருக்க தேர்வுக்கான மக்களின் திறனை மேம்படுத்துவதே இதற்கு மாற்று வழி என்று அறிக்கை கூறுகிறது. அனைவருக்கும் 

    UNFPA இந்தியா பிரதிநிதி ஆண்ட்ரியா எம் வோஜ்னார் கூறுகையில், கருவுறுதல் விகிதங்களை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், மாநிலங்கள், சாதிகள் மற்றும் வருமானக் குழுக்கள் இடையே ஆழமான சமத்துவமின்மை நீடிப்பதாக தெரிவித்தார்.   

    • மைட்டோகாண்ட்ரியா பழுதாக இருந்தால், கருவுறும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது.
    • பெற்றோர் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, பிள்ளைப்பேறு மாறிவிடும்.

    மரபணுவில் உள்ள இழைமணி (மைட்டோகாண்ட்ரியா) பழுதாக இருந்தால், கருவுறும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது. இப்படி பிறக்கும் குழந்தைக்கான குறைபாட்டை முன்தாகவே தடுக்க ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையிலிருக்கும் கருமையப் பகுதியை, குறைபாடுள்ள பெண்ணின் சினை முட்டையில் பொருத்திக் கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

    விலங்குகளிடம் இந்த ஆய்வை நடத்தியதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனிதக்கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம், இந்த புதிய மருத்துவம் காரணமாகப் பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் மைட்டோகாண்ட்ரியாவில் செய்த திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும்.

    மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை செய்யப்பட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டே இருக்கும். இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா? என்ற எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.

    மரபணு இழை கோளாறு ஏன் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதைவிட கொடுமை இந்த குறையை, அடுத்துவரும் சந்ததிக்கும் தந்துவிடுவோமோ என்று ஒரு தாய் மருகுவதுதான். அந்தக் கவலையைப் போக்குவதைவிட, நல்ல விஷயம் வேறு உண்டா? என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

    ஆனால், இந்த தொழில்நுட்பத்தை அனுமதித்தால் தன்னுடைய மகன் அல்லது மகள் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, பிள்ளைப்பேறு மாறிவிடும் என்பதும் பலருடைய குற்றச்சாட்டு. மிகவும் அபூர்வமான தருணத்தில் மட்டும் பயன்படுத்தி, குறையுள்ள குழந்தை பிறப்பதை தடுக்கலாம்.

    ஆனால், அதையே வியாபாரமாக்கி எல்லாக் கருக்களிலும் மருத்துவர்கள் மாற்றங்களைச் செய்ய அரசு அனுமதிக்கக்கூடாது என்ற வாதமும் இருக்கிறது.

    பிறக்கப்போகும் குழந்தையை கேட்டுக்கொண்ட பிறகு, பிள்ளைப்பேறு தொடர்பாக பெற்றோர் முடிவு எடுப்பதில்லை. அப்படி இருக்கும்போது மரபணு இழை பாதிப்புள்ளவர்களின் விஷயத்தில் மட்டும், ஏன் புதிய நடைமுறையை அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் எழாமல் இல்லை.

    • சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
    • ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.

    ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


    ஆரோக்கியமான உடல் எடை

    ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.

    அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.


    சரியான மாதவிடாய் சுழற்சி

    சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.

    தைராய்டு பிரச்சனைகள்

    தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.


    பி.சி.ஓ.ஸ் பரிசோதனை

    பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.

    பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

    ஹார்மோன் குறைபாடு

    பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

    விந்தணுக்கள் பரிசோதனை

    தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.


    ஃபோலிக் அமிலம்

    கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை

    நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.


    உடற்பயிற்சி

    கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.

    ×