என் மலர்
நீங்கள் தேடியது "Fertility Issues"
- நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர்.
- ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 1.46 பில்லியனாக (146 கோடியாக) அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை அறிக்கை (UNFPA's 2025 State of World Population Report) தெரிவித்துள்ளது.
UNFPA அறிக்கையின்படி, 2025 இல் 1.46 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். இது சுமார் 40 ஆண்டுகளில் 1.7 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளது, இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற மாற்றீட்டு விகிதத்திற்கும் (Replacement Rate) கீழே உள்ளது.
இந்தியாவின் 24% மக்கள் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 17% பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26% பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 7% ஆக உள்ளது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
1960 இல் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட 6 குழந்தைகள் இருந்த நிலையில், இன்று சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலைக்கு குறைந்துள்ளதற்கு கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் என UNFPA தெரிவித்துள்ளது.
இனப்பெருக்க நோக்கங்களை பூர்த்தி செய்ய இயலாமையே உண்மையான கருவுறுதல் நெருக்கடி என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாலினம், கருத்தடை மற்றும் குடும்பம் தொடங்குவது பற்றிய சுதந்திரமான மற்றும் தகவலறிந்த இனப்பெருக்க தேர்வுக்கான மக்களின் திறனை மேம்படுத்துவதே இதற்கு மாற்று வழி என்று அறிக்கை கூறுகிறது. அனைவருக்கும்
UNFPA இந்தியா பிரதிநிதி ஆண்ட்ரியா எம் வோஜ்னார் கூறுகையில், கருவுறுதல் விகிதங்களை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், மாநிலங்கள், சாதிகள் மற்றும் வருமானக் குழுக்கள் இடையே ஆழமான சமத்துவமின்மை நீடிப்பதாக தெரிவித்தார்.
- கருத்தரிப்பு பிரச்சனைக்கான ஆபத்து காரணியாகும்.
- பிஎம்ஐ என்பது பெண்ணின் உயரத்தை பொறுத்து வேறுபடும்.
உடல் பருமன் என்பது கருத்தரிப்பு பிரச்சனைக்கான ஆபத்து காரணியாகும். இது சாதாரணமாக கருமுட்டை வெளிவரும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு பங்களிக்கிறது என்கிறது ஆராய்ச்சி.
உடல் பருமன் அதிகம் கொண்ட பெண்கள், சாதாரண எடையுள்ள பெண்களை காட்டிலும் 43 சதவீதம் குறைவாகவே கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆய்வில் வழக்கமான கூடுதல் ஆபத்து காரணியாக உடல் பருமன் இருப்பதையும் கண்டறிந்தனர்.
பெண்களின் உடல் எடை மற்றும் கருவுறாமைக்கு இடையிலான உறவை ஆய்வு செய்த முதல் ஆய்வு இது தான் என்பதால் உடல் பருமனுக்கும், கருவுறுதலுக்கும் இடையில் தொடர்பு உண்டு.
ஒரு பெண் கர்ப்பத்துக்கு முன் மற்றும் கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 25-க்கும் குறைவான பிஎம்ஐ கொண்டிருக்க வேண்டும். ஆனால் கர்ப்பத்துக்கான ஆரோக்கியமான பிஎம்ஐ என்பது பெண்ணின் உயரத்தை பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
சிறந்த பிஎம்ஐ வரம்பில் உள்ள பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாயின் காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை இருக்கலாம். மற்றொரு பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், தைராய்டு போன்ற வேறு காரணத்தால் உடல் பருமன் இருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் கருமுட்டையை வெளியேற்றுவதும் வழக்கமான மாதவிடாயையும் கொண்டிருந்தால் அவர்களுக்கு கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் கர்ப்பத்துக்கு பிறகு அநேக விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதுமானது.
உடல் எடை அதிகளவில் இருக்கும் போது மாதவிடாயை தூண்டும் ஹார்மோன்கள் மற்றும் உங்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளுக்கு இடையில் சிக்கல் உண்டாகிறது.
கொழுப்பு செல்கள் பெரும்பாலும் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவை உண்டாக்குவதால் இது அண்டவிடுப்பின் போது உங்கள் உடலுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் அண்டவிடுப்பின் நாள் மாறுபடும்.
சமநிலையற்ற ஹார்மோன் அளவுகள் எப்போதுமே கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை குறிக்காது. ஆனால் வழக்கமான அண்டவிடுப்புமற்றும் மாதவிடாய் சுழற்சிகளை அனுபவிப்பார்கள். இது கருத்தரிப்பதை கடினமாக்குகிறது.
உடல் எடையோடு கர்ப்பத்தின் எடை அதிகரிப்பு அதைவிட மோசமாக்குகிறது. இவை அனைத்தும் கர்ப்பத்தை பாதிக்கும் என்பதோடு பிறக்காத குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம். மேலும் கருச்சிதைவு, கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் ஆகியவை ஏற்படும்.
- சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
- ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை
ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.
அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.

சரியான மாதவிடாய் சுழற்சி
சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.

பி.சி.ஓ.ஸ் பரிசோதனை
பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
ஹார்மோன் குறைபாடு
பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
விந்தணுக்கள் பரிசோதனை
தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.

ஃபோலிக் அமிலம்
கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை
நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி
கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.






