என் மலர்
நீங்கள் தேடியது "death rate"
- சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
- பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்குவங்காள மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
கனமழை , நிலச்சரிவால் டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக்- குர்சியோங்கின் மாவட்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் துடியா இரும்புப் பாலமும் இடிந்து விழுந்தது.
நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் அண்டை மாவட்டமான ஜல்பைகுரியன் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு வங்காளம்- சிக்கிமை இணைக்கும் சாலை மற்றும் சிலிகுரியை இணைக்கும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டன.
துர்கா பூஜைக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் சென்றுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் அவர்கள் பரிதவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேலாக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டார்ஜிலிங் எம்.பி. ராஜூ பிஸ்தா தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. உயிரிழப்புகள், சொத்து இழப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.
- இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளர்வர்களை் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.
- 2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.
- உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது.
நாட்டில் 49 மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2021 குடிமைப் பதிவுத் தரவுகளின்படி இந்த உண்மை தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்த பிறப்பு விகித குறைவு, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கிறது.

குறிப்பாக இந்த 49 மாவட்டங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன, அப்படிப் பார்த்தால், இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.
இதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்களிலும், பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகளை வரையறுக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இதனால் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என தென் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
- 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு 3.97 சதவீதமாக இருந்தது.
அதன்பின்பு இம்மாவட்டத்தில் இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்பு சதவீதத்தை காட்டிலும் அதன்பின்பு வந்த ஆண்டுகளில் இறப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதாவது 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் முதியோர் இறப்பு 12 சதவீதமாகவும், பெண்கள் 11 சதவீதமாகவும், இதய நோய் உள்ளவர்கள் 10 சதவீதமாகவும் உள்ளனர்.
இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தோம்.
இந்த பதிவேடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 7931 ஆக பதிவாகி உள்ளது. இது 2022-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 8665 ஆக பதிவாகி உள்ளது.
கொரோனா தொற்று குறைந்த நிலையில் அதற்கு பிந்தைய இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர்.
கொரோனாவுக்கும், கொரோனாவுக்கு பிந்தைய சாவு எண்ணிக்கை உயர்வதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
- சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு ஏற்கனவே 37 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 101 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், உள்ளூர் நகராட்சியின் அறிக்கையின்படி, 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் வழியாக ஓடும் குய்பா நதி, 1941 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பேரழிவின்போது வரலாற்று உச்சமாக 4.76 மீட்டர் இருந்தது. இது, 5.3 மீட்டர் என்ற புதிய உச்ச அளவை எட்டியது.
- மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
- இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி 184 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்பட்டது.
இந்நிலையில், கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில், 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு, இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
400க்கும் மேற்பட்ட வீடுகளில், தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன்[7 கோடி] உயர்ந்துள்ளது.
- ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும், 2 பேர் இறப்பார்கள்.
உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் [ஜனவரி 1] 8.09 பில்லியனாக [809 கோடியாக] இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று [திங்களன்று] வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் [7 கோடி] உயர்ந்துள்ளது . 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் [2024] மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.
மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.
வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
- 2021 உடன் ஒப்பிடும்போது, 2022-ல் சாலை விபத்துகள் 12% அதிகரித்து, இறப்புகளில் 9% அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், நாடு முழுவதும் தினமும் குறைந்தது 1,264 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"இந்தியாவில் சாலை விபத்துகள்" குறித்த ஆண்டு அறிக்கை, அதிர்ச்சியூட்டும் இறப்பு எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளது. இறப்பவர்களில் பெரும்பாலோர் 25- 35 வயதுக்குட்பட்டவர்கள்.
2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் குறைந்தது 42,671 பேர் 25-35 வயதுடையவர்கள்.
அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் 22,595 இறப்புகளுடன் அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
அதிக சாலை விபத்து எண்ணிக்கையைக் கொண்ட பிற மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் (54,432), கேரளா (43,910), மற்றும் உத்தரப் பிரதேசம் (41,746) ஆகியவை அடங்கும்.
உ.பி.க்குப் பிறகு, சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தமிழ்நாட்டில் 17,884, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 15,224 வழக்குகளுடன், மத்தியப் பிரதேசத்தில் 13,427 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
2021 உடன் ஒப்பிடும்போது, 2022-ல் சாலை விபத்துகள் 12% அதிகரித்து, இறப்புகளில் 9% அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. 2022ம் ஆண்டில் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.61 லட்சமாக உயர்ந்துள்ளது, இது 2021 ஆம் ஆண்டில் 4.12 லட்சமாக இருந்தது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 18 வயதுக்குட்பட்டவர்களில் 9,528 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 7,764 ஆகவும் இருந்தது.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 2022-ல் மொத்த இறப்புகள் 13,636 ஆகவும், 11,739 இறப்புகளிலிருந்து அதிகமாகவும் உள்ளன.
இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 470,403 ஆக உயர்ந்துள்ளது. இது 2019-ல் 4,56,959 ஆகக் குறைந்து, பின்னர் 2020-ல் 3,72,181 ஆகக் குறைந்தது. இது 2021-ல் 4,12,432 ஆகவும், பின்னர் 2022-ல் 4,61,312 ஆகவும் உயர்ந்தது.
2022-ல் 3 விபத்துகளுடன் லட்சத்தீவு மிகக் குறைந்த சாலை விபத்துகளைப் பதிவு செய்தது. 2022-ல் இரண்டு இறப்புகளுடன் மிகக் குறைந்த இறப்புகளையும் பதிவு செய்தது.
2023-ல் வெளியிடப்பட்ட சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையில், "வேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை மீறுதல்" போன்ற அடிப்படைக் காரணங்களை நிவர்த்தி செய்வதற்கு ஒரு முழுமையான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தியது.






