search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contraception"

    • குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    • நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் சார்பில் நகர மன்ற தலைவர் மன்னை த.சோழராஜனிடம் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ்.சேதுராமன், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் வேல்முருகன், விலங்கியல் ஆர்வலர்கள் விவேக், அண்ணாதுரை, நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், ஜெயக்குமார், ஜான்சன் லயன்ஸ் சங்கம் சந்தோஷ், ஜே.சி.ஐ சங்கம் நந்தகுமார் உட்பட பலர் ஒருங்கிணைந்த கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மன்னார்குடி நகரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மனித நேயத்தோடு வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறை களின்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மன்னார்குடி நகரத்தில் தற்சமயம் சுமார் 6000 தெரு நாய்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தத் தெரு நாய்கள் உணவுக்காக அலையும் நிலையில் உணவு கிடைக்காத சூழலில் வெறிபிடிக்க வாய்ப்பு உள்ளது.

    விரைவாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை யெனில், தெரு நாய்கள் அதிகரித்து உணவு கிடைக்காமலும், குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே, நமது மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிகின்ற அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு, அதற்கான நவீன அறுவை சிகிச்சை கூடம், தெருநாயை பிடிப்பது முதல் அறுவை சிகிச்சை செய்து முடித்து பிடிபட்ட இடத்திலேயே விடுவது வரையிலான பணிகளை உறுதிப்படுத்த வேண்டும்.

    நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்ற கொண்ட நகர் மன்ற தலைவர் சோழராஜன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    சீர்காழி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட 24 வார்டுகளிலும் சாலைகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி வருவதாலும், கடிப்பதாலும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதனால் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நகர்மன்ற கூட்டத்தில் 24 வார்டு உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து சீர்காழி நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி இன்று சீர்காழியில் தெரு  நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நாய்கள் பிடிக்கும் பணி தொடங்கியது. சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி, தென் பாதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் வலை வைத்து பிடித்து கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டது.

    பிடிபட்ட நாய்கள் அனைத்தும் மயிலாடுதுறை கொண்டு செல்லப்பட்டு அங்கு கால்நடை மருத்துவர் மூலம் கருத்தடை செய்யப்பட்டு பின்னர் பிடிக்கப்பட்ட பகுதிகளில் விடப்படும் என்ன மிருகவதை தடுப்பு ஆய்வாளர், முரளிதரன் தெரிவித்தார். பொது விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த அன்பழகன், தூய்மை பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ். இதனை சீர்காழி மக்கள் வரவேற்றுள்ளனர்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன. முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

    ரிதம் (காலண்டர்) முறை (Rhythm calendar method)

    இந்த முறைப்படி மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சிப் பருவத்தில் உடலுறவைத் தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம் மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும் இந்த முறையில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

    பில்லிங்ஸ் முறை (Billings or Ovulation Method)

    பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன் இது சற்று குறைந்த அளவில் வறண்டு கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்புத் தன்மை கரு முட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும் இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும்போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

    உடலில் வெப்ப மாறுபாடு

    * பெண்களில் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தின் நடுப்பகுதியில் கண்காணித்தல் வேண்டும்.

    * அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும்போது உடலில் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்ஹிட் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்துக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
    தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
    ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு.

    * மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.

    * காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

    * காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

    * காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது.

    * காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம்.

    * குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.

    குறிப்பு: கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.
    சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கருத்தரிப்பதை தடுக்க தான் கருத்தடை முறைகள் கையாளப்படுகின்றன. ஆயினும் சிலமுறை எதிர்பாராத வகையில் கருத்தரிப்பு ஏற்படுவது உண்டு. சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் தம்பதியர் மத்தியில் பொதுவான சில தவறுகள் தான் கருத்தடை முறையில் எழுகின்றன.

    அது மீண்டும் வராமல் இருக்க என்ன வழிகள் இருக்கின்றன. பாதுகாப்பான முறையில் உடலுறவுக் கொண்டு கருத்தரிப்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காணலாம்…

    உங்களுக்கு ஏற்ற கருத்தடை மாத்திரை உட்கொள்ள வேண்டியது அவசியம். பிறப்புறுப்பில் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சில கருத்தடை மாத்திரைகள் சரியான பலன் தராது. எனவே, மருத்துவரிடம் ஆலோசித்து உங்களுக்கு ஏற்ற மாத்திரைகள் பயன்படுத்துவது அவசியம்.

    வேசிலின் அல்லது பேபி ஆயில் போன்றவை பயன்படுத்துவது ஆணுறையின் தன்மையை பாதிக்கிறது. அதனால் கூட கருத்தரிக்க வாய்ப்பிருப்பதாய் கூறப்படுகிறது. இதற்கு சிலிகான் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல தீர்வளிக்கும்.

    சீரான முறையில் அல்லது சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ள தவறுவதும் கூட கருத்தரிக்க வாய்ப்பாக அமையும்.

    மாதவிடாய் சுழற்சியில் பாதுகாப்பான நாட்களில் உடலுறவுக் கொள்வதன் மூலம் நீங்க கருத்தரிப்பதை தவிர்க்க முடியும்.

    தரமற்ற ஆணுறை உபயோகிப்பதன் காரணமாக கூட கருத்தரிப்பு ஏற்படுகின்றன. எனவே, தரமான ஆணுறைப் பயன்ப்படுத்த வேண்டியது அவசியம்.
    ×