என் மலர்
நீங்கள் தேடியது "காப்பர் டி"
- மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.
- 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
கருத்தடை சாதனங்களில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு காப்பர்-டி பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த காப்பர்-டி கருப்பையில் வைக்கும் போது இதில் இருக்கும் தாமிர அயனியானது கர்ப்பப்பை வாய் மற்றும் உட்புறம் இருக்கும் திரவத்துடன் கலந்துவிடுகிறது.
இந்த திரவம் தான் விந்தணுக்களை கருமுட்டையுடன் சேராமல் தடுக்கிறது. இந்த காப்பர் டி சாதனத்தில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இவை கருத்தரித்தலை தடுத்துவிடுகிறது.

மேலும் காப்பர் டி பொருத்திய பிறகு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் காப்பர் டி பயன்படுத்தினால் பிரசவத்துக்கு பிறகு சுமார் 8 வாரங்கள் காத்திருக்கவும். மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.
காப்பர் – டி நன்மைகள்
காப்பர் – டி காப்பரால் செய்யப்பட்டது. இது நீண்ட காலம் நீடிக்கும். காப்பர் டி ஹார்மோன் அல்லாத பிறப்புக்கட்டுப்பாடு என்பதால் இது உடலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
காப்பர் – டி பயன்படுத்துவதால் உடலில் உள்ள எந்த ஹார்மோன்களையும் பாதிக்காது. கருத்தடை மாத்திரைகளால் உடலில் ஹார்மோன் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் காப்பர்– டி பயன்படுத்தலாம்.
விந்து வருவதற்குள் விந்து வரும் இடத்துக்கு வெள்ளை அணுக்கள் முந்திவந்து விந்தணுக்களை செயலிழக்க செய்கிறது.

இந்த காப்பர் – டி பயன்பாடு உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கருத்தடைக்காக உடலுறவில் குறுக்கிடாது. மேலும் இது 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். பலனளிக்கும் என்பதால் நிம்மதியாக பாதுகாப்பாக உணரலாம்.
பெண்கள் பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது இதை பயன்படுத்தலாம். ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான ரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகளின் அபாயத்தை கொண்டிருக்கவில்லை.

தீமைகள்
காப்பர் – டியின் பொதுவான பக்க விளைவுகள் என்றால் ஒழுங்கற்ற மற்றும் அதிக ரத்தப்போக்கு.
மற்றொரு பக்க விளைவு மாதவிடாய் வலி அதிகரிக்கலாம்.
குறிப்பாக பிரசவிக்காத பெண்களை விட பிரசவித்த பெண்கள் குறைவான பக்கவிளைவுகளை கொண்டிருக்கிறார்கள்.
காப்பர் – டி பொருத்தும் போது வலி, செருகிய சில நாட்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலி பெரும்பாலான மக்களுக்கு இந்த பக்கவிளைவுகள் பொதுவாக 3-6 மாதங்களுக்குள் மறைந்துவிடும்.
- கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது.
- தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.
கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது. குழந்தைப்பேறு வேண்டாம் என்று சில காலத்துக்கு தள்ளிபோடும் தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள்
பெண்கள் கருத்தரிக்க விரும்பாத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். இந்த மாத்திரைகள் பாதுகாப்பானது. தினமும் இந்த மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஒரு நாள் தவறினாலும் பலனில்லாமல் போய்விடும். மேலும் மாத்திரைகளை நிறுத்தும் போதும் சுயமாக நிறுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையோடு தான் நிறுத்த வேண்டும். ஏனெனில் இது சுழற்சி முறை என்பதால் குறிப்பிட்ட நாட்கள் வரை போட்ட பிறகு தான் நிறுத்த வேண்டும்.
இல்லையெனில் ஹார்மோன் சுழற்சியில் மாற்றம் உண்டாகக் கூடும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எப்போதும் பாதுகாப்பானவை. இவை பக்க விளைவை உண்டாக்காது.

ஆணுறை
ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களில் மிக முக்கியமானது. கருவுறுதலை தடுக்கும் வழிமுறைகளில் இது முக்கியமானது. பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை தடுக்கும் நிலையில் இது சரியான தேர்வாக இருக்கும்.
ஆணுறை பயன்படுத்துவதும் எளிது என்பதால் கருத்தடைக்கு ஆணுறை சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் ஆணுறை அணியும் போது இருவருக்குமே பாதுகாப்பு. இது பாலியல் தொற்று நோய் உண்டாகாமலும் தடுக்கும்.
பெண் ஆணுறை
ஆண்களை போன்றே பெண்களுக்கும் பெண் ஆணுறை உண்டு. இது யோனிக்குள் செலுத்தப்படக்கூடியது. ஆண் ஆணுறைகள் உடலுறவுக்கு பிறகு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஆனால் பெண் ஆணுறைகள் கடினமானது அல்ல. இது ஈரப்பதமானாலும் சிதையாது. மெல்லிய பொருள்களால் தயாரிக்கப்படும் பெண் ஆணுறைகள் ஆண்களின் விந்தணுக்களை உள்ளே செல்லாமல் தடுக்கும்.
பெண்களின் உடல் எடைக்கேற்ப பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கிறது. பெண் ஆணுறையின் இரண்டு பக்கமும் வளையப்பகுதி இருக்கும். ஒரு பக்கத்தில் முனை நகராமல் இருக்கும் படியும் மற்றொரு முனையானது யோனிக்குள் செல்லும் வரையிலும் இருக்கும்.
இதை டேம்பன் போல் பொருத்திகொள்ளலாம். பெண் ஆணுறை குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவாக தான் உள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.
கருத்தடை கிரீம்கள்
ஆண்களின் விந்தணுக்களை அழிக்ககூடிய ரசாயனங்கள் கலந்த கிரீம் வகைகள், ஜெல்லிகள், களிம்புகள், மாத்திரைகள் கிடைக்கிறது. இதை பெண் உறுப்பில் கர்ப்பபையின் வாய்ப்பகுதியில் தடவிக் கொள்ள வேண்டும்.
இதனால் ஆண்களின் விந்தணுக்கள் உறவின் போது பெண் உறுப்புக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கரு உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
துரதிஷ்டவசமாக இவை கரு உருவாவதை நிச்சயம் தடுத்துவிடும் என்று சொல்லமுடிவதில்லை. பயன்படுத்தும் முறை, அதன் நேரம் இவற்றில் அறியாமல் செய்யும் தவறு கூட கருவுறுதலை மேம்படுத்திவிடுகிறது.

கருத்தடை ஊசி
இது புரொஜெஸ்டிரான் ஹார்மோனில் தயாரிக்கப்பட்ட மருந்து. இது ஊசியாக பயன்படுத்தப்படுகீறது. இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டுகொள்ள வேண்டும். எனினும் இதை தொடர்ந்து வருடக்கணக்காக பயன்படுத்த முடியாது. ஏனெனில் இது மாதவிலக்கை சீரற்று ஆக்கும். எலும்புகளையும் பலவீனமாக்கிவிடும்.

காப்பர் டி
கர்ப்பபைக்குள் பதிவிடப்படும் லூப் போன்ற கருத்தடை சாதனம். செம்பு கலந்த காப்பர் டி போன்ற மற்றொரு சாதனம், ஹார்மோன் கலந்த (LNG) என உங்கள் உடலுக்கு தேவையான ஒன்றை மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பொருத்திகொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்ததும் கர்ப்பபைக்குள் இதை பொருத்தி கொள்ள வேண்டும்.
பிரசவத்துக்கு பிறகு இதை பொருத்துவதாக இருந்தால் இரண்டு மாதங்களுக்கு பிறகு இதை பொருத்துவார்கள். எனினும் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் உரிய இடைவேளையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது இடம் மாறிவிட்டால் உடனடியாக வேறு மாற்றும்படி அறிவுறுத்துவார்கள்.