search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Court"

    • டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பது ராணாவுக்கு தெரியும்.
    • ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா (வயது 62) 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

    தாக்குதல் வழக்கில், இவரது பங்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது, ராணாவின் நண்பரான டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவனது நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதும் ராணாவுக்குத் தெரியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஹெட்லி யார் யாரையெல்லாம் சந்தித்தார்? என்ன பேசப்பட்டது? தாக்குதலுக்கு திடட்மிடப்பட்ட சில இலக்குகள் உட்பட தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவற்றை ராணா அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தனர். ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்றார்.

    மாயமான மலேசிய விமானம் எம்எச்370 தொடர்பாக போயிங், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt
    வாஷிங்டன்:

    மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்எச்370, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

    விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் விழுந்தது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்ன நடந்தது? என்பதற்கு விசாரணக்குழுவின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில் மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலேசிய விமான விபத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ், போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்இ  ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேக்சன், வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மலேசிய விமான நிலையத்தில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட விமானம் மாயமானது தொடர்பான வழக்கு என்பதால் அமெரிக்காவில் விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதி தெரிவித்தார். #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt

    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #DonaldTrump #USCourt #NeomiRao
    வாஷிங்டன்:

    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    அமெரிக்காவில் பல பெண்களின் பாலியல் புகார்களுக்கு ஆளானவர் நீதிபதி பிரெட் கவனாக் (வயது 53). அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். அவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார். அதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அவர் கடந்த மாதம் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.



    அதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த வாஷிங்டன் மாகாணம், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவி காலியானது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுவது இந்த கோர்ட்டு ஆகும்.

    இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (45) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், “கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதி பிரெட் கவனாக் இடத்துக்கு நியோமி ராவை நான் தேர்வு செய்து இருக்கிறேன். அவர் அற்புதமான மிகச்சிறப்பான நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து நியோமி ராவ், ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது அவர், “செல்வாக்கு மிக்க அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு என்னை தேர்வு செய்திருப்பதின் மூலம் என் மீது ஜனாதிபதி வைத்துள்ள நம்பிக்கையை காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டார்.

    நியோமி ராவ் தேர்வு பற்றிய அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட தீபாவளி கொண்டாட்டத்தில், இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.

    நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நியோமி ராவ், இந்தியாவை சேர்ந்த பார்சி இன பெற்றோரான ஜகாங்கிர் நாரியோஷாங் ராவ், ஜெரின் ராவ் தம்பதியரின் மகளாக 1973-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந் தேதி பிறந்தவர். மிச்சிகனில் வளர்ந்தார். டெட்ராய்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து மிகச்சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

    சிறிது காலம் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

    கடந்த ஆண்டு இவரை ஜனாதிபதி டிரம்ப், தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக நியமித்தார்.

    இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  #DonaldTrump #USCourt #NeomiRao 
    அமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USCourt #CallCentreScam
    நியூயார்க்:

    இந்திய வம்சாவளியினர் 21 பேர், அமெரிக்காவில் உள்ள மூத்த குடிமக்கள், சட்டப்பூர்வ குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட பலரைப் பற்றிய தகவல்களை தகவல் தரகர்கள் மூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த தகவல்களை கொண்டு இந்தியாவில் ஆமதாபாத்தில் உள்ள ‘கால்சென்டர்’கள் மூலம் அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு உள்நாட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப்பணிகள் துறை அதிகாரிகள் என்ற பெயரில் மிரட்டி பல லட்சம் டாலர்களை சட்ட விரோதமாக கறந்து விட்டனர்.

    இந்த ஊழல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில் தொடர்பு உடைய இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு தலா 4 ஆண்டு முதல் 20 ஆண்டு வரையில் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

    இவர்களில் பலரும் தண்டனைகாலம் முடிந்ததும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் கூறினார்.  #USCourt #CallCentreScam #tamilnews

    எதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக் செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், டிரம்ப் அப்படி யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Trump
    வாஷிங்டன்:

    ட்விட்டர் எனும் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் முக்கிய இடம் வகிக்கிறார். 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிரம்பை பின்தொடர்ந்து வருகின்றனர்.

    காரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து டிரம்ப் ஆக்டிவாக இருப்பவர். தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இதில், டிரம்பால் பிளாக் செய்யப்பட்ட 7 பேர் கோர்ட்டை நாடினர்.

    டிரம்ப் தங்களை பிளாக் செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணையில், பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.

    மேலும், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. #Trump
    ×