search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rules"

    • தேவர் குருபூஜை விழாவில் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பா டுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தேவர் ஜெயந்தியின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இதில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசிய தாவது:-

    பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவுறுத் தப்பட்டுள்ளன.விதிமுறை களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவதை கருத்தில் கொண்டு பிற மாவட்டத்தினரும் நமது மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட விதி முறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு போல் பேனர் வைப்பதை தடுத்திடவும், அரசு கட்டடங்களில் விளம்பரம் செய்வதை தடுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.
    • அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள்.

    குலசை தசரா-நேர்த்திக் கடன்

    நேர்த்திக் கடனில், மாவிளக்கு பூஜை செய்வதும் ஒன்று. இது அனைத்து ஆலயங்களிலும் செய்வது போன்றே பக்தர்கள் அம்பாளுக்கு நேர்த்தி கடனாக மாவிளக்கு ஏற்றி வணங்கி வருகின்றனர்.

    அங்கப்பிரதட்சனம் செய்வதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அதனை நிறைவேற்றுகிறார்கள்.

    விசேஷ நாட்களில் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு வந்து பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்கின்றனர்.

    தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.

    இவர்கள் குளித்து முடித்து விட்டு, ஈரத் துணியுடன், சந்தனம் பூசிய உடம்போடு, தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி, ஓம் சக்தி தாயே என்று பக்திப்பரவசத்தோடு கோவிலை வலம் வருகிறார்கள்.

    அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள். மேலும் சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்கின்றனர்.

    இங்கு இன்னுமொரு வேண்டுதல், அன்னதானம் செய்வது மற்றவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது என்பது ஒரு மிகப் பெரிய சேவையாகும்.

    பசியால் துடிக்கும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற தொண்டு வேறு எதற்கும் ஈடாகாது என்பார்கள்.

    குலசை ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.

    இது போன்று அருள்மிகு முத்தாரம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சகல சவுபாக்கியங்களையும் பக்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    • குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும்.
    • குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    குலசை முத்தாரம்மன்-50

    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கை நிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

    11. மாவிளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    12. குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    13. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1&ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    14. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    15. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    16. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    17. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    18. அம்மை போட்டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    19. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    20. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குல தெய்வமாக கருதுகிறார்கள்.

    21. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    22. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக்கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    23. குலசை கோவிலுக்கு சுமார் 800 க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    24. குலசையில் உள்ள நாடார் தசரா குழு தனித்துவம் கொண்டது. அந்த குழுவில் தான் எல்லா கடவுள்களின் வேடம் அணிந்தவர்களை காண முடியும்.

    25. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    26. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    27. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.

    28. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    29. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    30. திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷனை அம்பாள் வதம் செய்யும் சம்ஹாரம் பக்தர்களின் ஆடல், பாடலுக்கிடையே ஆரவாரமாக நடைபெறும்.

    31. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    32. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    33. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12&வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    34. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    35. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    36. திருப்பதி கோவிலில் பணக்கட்டுகளும், தங்க நகைகளும் உண்டியலில் போடப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் குலசை கோவிலில் 90 சதவீத உண்டியல் வருவாய் சில்லறை நாணயங்களாகவே உள்ளது.

    37. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2&வது இடத்தில் உள்ளது.

    38. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    39. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்ற வற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    40. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    41. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    42. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    43. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    44. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    45. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    46. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    47. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    48. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    49. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    50. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள்.
    • அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும்,எந்த பாதிப்பும் ஏற்படாது.

    இரும்பு ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு பல்வேறு வேடம் அணிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் ஏற்பட்டபடி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை, அலங்காரத்துக்கு பக்தர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

    அதன்பிறகு அட்டைகள், கலர் தாள்களினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் பக்தர்களிடம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிஜ பொருட்களையே பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    அதாவது ஒருவர் சூலாயுதம், வேலாயுதம் ஏந்தி வரும் வகையில் வேடம் போட்டால், உண்மையான இரும்பு சூலாயுதம், வேலாயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

    குலசேகரப்பட்டினம் ஆலயத்தை பொருத்தவரை வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள். அப்படி வரும் போது உண்மையான இரும்பு ஆயுதங்கள் மற்றவர்களை பாதித்து விடுகிறது.

    அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே வேடம் அணிந்து வருபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஒலி பெருக்கி குழாய் வேண்டாம்

    குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வந்து மகிஷனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சூரசம்ஹாரத்தை காண குலசேகரன்பட்டினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றிரவு குலசையில் திரும்பிய திசையெல்லாம் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படும். அந்த சமயத்தில் தசரா குழுவினர் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்ஹாரம் தொடங்குவதற்கு முன்பு கோவிலில் இருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். எல்லா தசரா குழுவினரும் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்தினால், ஆலயத்தில் இருந்து வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.

    எனவே தசரா குழுவினர் ஒலி பெருக்கி குழாய்களுக்கு பதில், ஒலிபெருக்கி பெட்டிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

    • லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
    • 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கனிமவள வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.
    • தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது.

    தாராபுரம் :

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அரசு துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன ங்களில் இருந்து தேவை யான தகவல்களை பொதுமக்கள் கோரி பெற முடியும்.இதை பயன்படுத்தி பொதுமக்கள், தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்கள், லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.இவ்வாறு வரும் மனுக்களுக்கு உரிய தகவல்களை அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் பணியில் இருப்பார்.

    விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள், தகவல் அலுவலர் பதில் அளிக்க வேண்டும் என்பது விதி முறை. கோரிக்கை நிராக ரிக்கப்பட்டால் மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டின்போது மனுதாரர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று விதிமுறை இதுநாள் வரை இருந்தது. ஒரு வேளை அவர் நேரில் வர முடியாவிட்டால் எழுத்துபூ ர்வமாக மனு தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. இது தகவல் உரிமை ச்சட்ட ஆர்வல ர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது. அதை கருத்தில் கொண்டு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் மனித வள மேம்பாட்டுத்து றை செயலாளர் பிறப்பித்த அரசாணைப்படி மேல் முறையீட்டு மனு விசா ரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராக தேவை யில்லை.இதற்கெனதகவல் ஆணை யத்தின் (மேல்முறை யீட்டு நடைமுறை) விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்ப ட்டுள்ளது.மேல் முறையீடு மனு மீதான விசாரணை நடத்தும்போது நேரடியாக ஆஜராவதற்கு பதிலாக வீடியோ கான்பரன்ஸ் முறையிலும் ஆஜராகலாம்.இதை தனக்குள்ள அதிகா ரத்தை பயன்படுத்தி ஆணையமே முடிவு செய்யலாம் என்று உத்தர வில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த தகவல் உரிமைச்ச ட்ட ஆர்வலர்கள் கூறுகை யில், இந்த திருத்தம் காலத்துக்கு ஏற்ற மிகவும் அவசியமான திருத்தம். இதன் மூலம்தகவல் கோரும் மனுதாரர்கள், அதிகாரிகள் அலைச்சல் தவிர்க்கப்படும். பொருட்செலவு குறையும். இதே போல தகவல் கோரி விண்ணப்பிக்கும் நடை முறையை, காலத்துக்கு ஏற்றபடி ஆன்லைன் முறைக்கு மாற்றினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
    • ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகை யில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்து வது தொடர்பான அரசா ணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.

    கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களிடம் புதிய போக்கு வரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார் கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேக மாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் .

    அதே நேரத்தில் அதி வேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளி டம் எடுத்துக் கூறப்பட்டது.

    உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப் படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட் பட்ட குழந்தைகளை பாது காப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங் களுக்கு வழி விடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது குறித்து, திருப்பூர் மாவட்ட போலீசார் கூறுகையில் 'போக்குவரத்து விதிமுறை மீறி பயணிக்கும் வாகன ஓட்டிகளை சோதனைச்சாவடிகளில் பிடித்து, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட அபராத கட்டணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூரில் இன்னமும் புதிய கட்டணப்படி யாருக்கும் அபராதம் விதிக்கவில்லை. 'சாப்ட்வேர் அப்டேட்' செய்து விரிவான அறிவுறுத்தல் வந்த பின் அறிவிப்பு வெளியிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.விதிமுறை பின்பற்றினால் அபராதம் குறித்த அச்சம் வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லை என்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விதி மீறிய 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டது. தொழிலுக்கு செல்லும் படகுகள் தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலாக்கம் தொடர்பாக மீன்வளத்துறையினர் நடுக்கடலில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் கடந்த ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு தற்போது வரை டோக்கன் பெறாமலும் 109 விசைப்படகுகள், அனுமதியின்றி தொழிலுக்கு சென்ற 7 விசைப்படகுகள், 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் மீன்பிடித்த 21 விசைப்படகுகள் பிடிபட்டன.

    இந்த படகுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்குக் சென்று விதிகளை மீறிய மேலும் 6 படகுகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    மீன்பிடி விதிகளை மீறும் படகுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடுக்கடலில் சோதனையின்போது விதிகளை மீறியதாக முதல் முறை பிடிபடும் படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், அடிக்கடி பிடிபடும் படகுகளுக்கு ரூ.15 ஆயிரம் என தொடங்கி அந்த படகில் கொண்டு வரப்படும் மீன்களின் எடைக்கேற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் படகுகளுக்கு விசாரணை முடியும் வரை மானிய டீசல், மீன்பிடி டோக்கன் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது.
    • நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களுக்கும், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றியவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை காவல்–துறை யினர் பொதுமக்களின் நண்பன் என்ற கூற்றை பறைசாற்றும் விதமாக தேசிய நண்பர்கள் தினம் தஞ்சை அண்ணா சிலை பகுதியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர் மற்றும் தஞ்சை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களையும் போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றியவர்களிடம் தேசிய நண்பர்கள் தினத்தை போற்றும் வகையில் இனிப்பு வழங்கி கையில் ராக்கி கயிறு கட்டியும் பொதுமக்களிடம் நூதன முறையில் நட்பு பாராட்டினர் .

    தஞ்சை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்தி ரனின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , போக்குவரத்து துணை ஆய்வாளர் பாஸ்கரன் , சிறப்பு துணை ஆய்வாளர் ரமேஷ், ஏட்டு புவனேஸ்வரி, போக்குவரத்து போலீசார் நாகராணி , தனலக்ஷ்மி , தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.
    • நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது.

    திருப்பூர் :

    அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது குடித்துவிட்டு ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணியாமல் செல்லுதல், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்கள் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

    சமீபத்தில் அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார். அவர் ெஹல்மெட் அணிந்திருக்கவில்லை. பைக்கில் சக நண்பர்கள் 2பேர் உடன் வந்தனர். ெஹல்மெட் அணிந்திருந்தால்விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் குறைந்தபட்ச காயங்களுடன் மாணவர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், திருப்பூரில் நடைபெறும், பல விபத்துகளுக்கு விதிமீறல்களே காரணமாக அமைகின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணிவதை சுமையாக கருதத் தேவையில்லை. அது உயிர்க்கவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது சுலபமான விஷயம்தான். ஆனால் பலர் இதைப் பொருட்படுத்துவதில்லை.

    நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான ரோடுகளில் கூட, பலர்வாகனங்களை விதிமுறைப்படி இயக்குவதில்லை.விபத்து நேரும்போதுதவறாக விதிமுறை பின்பற்றுபவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. விதிமுறையை முறையாக கடைபிடித்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவிகள் உயிரிழக்க நேர்கிறது.

    திருப்பூரின் ரோடுகள் பரந்து விரிந்தவை அல்ல.பரபரப்புடன் இயங்கும் மாநகரில் வாகனங்களை நிதானமாக இயக்கியாக வேண்டிய கட்டாயம் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களில் பறப்பவர்கள் பலர். தற்போது பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 18 வயது நிரம்பாத மாணவர்கள் பலர் பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.போலீசார் அறிவுறுத்தினாலும்ப ள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது தொடர்கதையாக உ ள்ளது. பெற்றோர் நினைத்தால், வாகனங்களை மாணவர்கள் எடுத்துச்செல்லாமல் தடுக்க முடியும்.கவனமின்மையால் விபத்துகள் கண நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால்ஒவ்வொரு விபத்துகளும், விலை மதிக்க முடியாத இழப்பை ஏதேனும் ஒரு குடும்பத்திற்கோ, விபத்தால் பாதிக்கப்பட்டவரை சார்ந்திருப்பவர்களுக்கோ ஏற்படுத்தி விடுகின்றன.எனவே வாகன விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தடுக்க வேண்டுமென போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். #ArunJaitley #PetrolDiesel
    புதுடெல்லி:

    தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்து உள்ளார்.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக தங்களது வரிகளை சரியாக செலுத்தினால் பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பை சார்ந்திருக்கவேண்டி இருக்காது.



    சம்பளதாரர்கள் வரிகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் மற்றவர்களும் தங்களுடைய வரியை செலுத்துவதில் முன்னேற்றம் காணவேண்டும். எனவே அரசியல் தலைவர்கள், கருத்தாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் எண்ணெய் அல்லாத மற்ற வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும்.

    நேர்மையாக வரி செலுத்துவோரின் கவலை வரிகளில் தங்களுடைய பங்கை செலுத்துவதுடன், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சேர்த்து இழப்பீடு தருவதுதான்.

    எனவே, குடிமக்கள் அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை. மாறாக இவற்றின் விலையை குறைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

    கடந்த 4 ஆண்டுகளில் வரியில் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இதில் பெட்ரோலிய பொருட்களின் வரி பங்களிப்பு மட்டும் 0.72 சதவீதம் ஆகும்.

    எண்ணெய் அல்லாத வரிகள் மீதான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2017-18-ல் 9.8 சதவீதமாக இருந்தது. இது 2007-2008-ம் ஆண்டுக்கு இடையேயான கால கட்டத்தை ஒப்பிடும்போது அதிகம் ஆகும். மோடி அரசு நிதி விஷயத்தில் முன்ஜாக்கிரதை அல்லது விவேகத்தை வலுவாக வளர்த்து இருக்கிறது. நிதியளவில் ஒழுக்கம் இல்லாமல் போனால் கடன்பெறுவதுதான் அதிகரிக்கும். எனவே நிதியளவை புத்திசாலித்தமான, வலுவான கையாளும் மத்திய அரசால்தான் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க இயலும்.

    அரசின் உத்தேசத்தின்படி பெட்ரோலிய பொருட்களின் மீது உற்பத்தி வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமானத்தை இழக்கச் செய்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை மறைமுகமாக விமர்சித்த அருண்ஜெட்லி, “இது பொறியில் சிக்கவைக்கும் யோசனை. எனக்கு முன்னோடியே(ப.சிதம்பரம்) இதைச் செய்ய முன்வரவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை” என்றும் அவர் குறிப்பிட்டார்.  #ArunJaitley #PetrolDiesel #Tamilnews 
    எதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக் செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், டிரம்ப் அப்படி யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Trump
    வாஷிங்டன்:

    ட்விட்டர் எனும் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் முக்கிய இடம் வகிக்கிறார். 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிரம்பை பின்தொடர்ந்து வருகின்றனர்.

    காரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து டிரம்ப் ஆக்டிவாக இருப்பவர். தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இதில், டிரம்பால் பிளாக் செய்யப்பட்ட 7 பேர் கோர்ட்டை நாடினர்.

    டிரம்ப் தங்களை பிளாக் செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணையில், பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.

    மேலும், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. #Trump
    ×