search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுாதன முறையில் தேசிய நண்பர்கள் தின கொண்டாட்டம்
    X

    தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் இணைந்து பொது மக்களுக்கு ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கினர்.

    நுாதன முறையில் தேசிய நண்பர்கள் தின கொண்டாட்டம்

    • இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது.
    • நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களுக்கும், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றியவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை காவல்–துறை யினர் பொதுமக்களின் நண்பன் என்ற கூற்றை பறைசாற்றும் விதமாக தேசிய நண்பர்கள் தினம் தஞ்சை அண்ணா சிலை பகுதியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர் மற்றும் தஞ்சை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களையும் போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றியவர்களிடம் தேசிய நண்பர்கள் தினத்தை போற்றும் வகையில் இனிப்பு வழங்கி கையில் ராக்கி கயிறு கட்டியும் பொதுமக்களிடம் நூதன முறையில் நட்பு பாராட்டினர் .

    தஞ்சை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்தி ரனின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , போக்குவரத்து துணை ஆய்வாளர் பாஸ்கரன் , சிறப்பு துணை ஆய்வாளர் ரமேஷ், ஏட்டு புவனேஸ்வரி, போக்குவரத்து போலீசார் நாகராணி , தனலக்ஷ்மி , தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×