search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விழிப்புணர்வு"

    கடலூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் கஞ்சா, போதை தடுப்பு விழிப்புணர்வு , வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் கஞ்சா, போதை தடுப்பு விழிப்புணர்வு , வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா அய்யந்தூர் கிராமம் கோவில் திருவிழாவில் இரவு நாடகம் நடைபெற்றது. 

    நாடக மேடையில் அப்பகுதி கிராம பொதுமக்கள் , இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கமாக நடந்து கொள்வது, சாதி மோதல் ஈடுபட கூடாது அதனால் வாழ்க்கையின் நிலைமையே மாறிவிடும் , மாணவர்கள் பேருந்து படியில் பயணம் கூடாது, சட்டவிரோத செயல்கள், சமூக விரோதிகள் பற்றி தகவல் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என நாடக மேடையை விழிப்புணர்வு மேடையாக பயன்படுத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    ×