search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal activities"

    • ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் டவுன் போலீஸ் சப்- டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக சில திருநங்கை கள் குற்ற செயல்களிலும், சிலா் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து அதிகரித்தது.

    இதனை தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். இதன்பேரில் ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். பயிற்சி ஏ.எஸ்.பி. ஷ ஹ்னாஸ் முன்னிலை வகி த்தார். இதில் திருநங்கைகள் சிலர் குற்ற செயல்களிலும், சட்ட விரோத செய ல்களிலும் ஈடுபடுகின்றனர். இனி திருநங்கைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தி னா்.

    மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அசோக், ஒருங்கி ணைப்பாளர் சந்தாதேவி ஆகியோர் பங்கேற்று திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து போலீசார் திருநங்கைகளிடம் அவர்களது கோரிக்கை களை கேட்டறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காண ப்படும் என உறுதியளி த்தனா்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, சண்முகம் மற்றும் திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • புதுவை கடல் பகுதியில் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் தற்போது கடலில் வலை விட முடியாத சூழல் உள்ளதாக அரசுக்கு மனு அளித்துள்ளனர்.
    • சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் இந்த தொழில் முறையை தடுக்க வேண்டிய கடலூர் மற்றும் புதுவை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

    புதுச்சேரி:

    மூ. புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்து சார்பில், புதுவை கடல் பகுதியில் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் தற்போது கடலில் வலை விட முடியாத சூழல் உள்ளதாக அரசுக்கு மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இயற்கைக்கு மாறான மிகவும் அபாயகரமான முறையில் ஒரு சில மீனவர்கள் கணவாய் மீன் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் கேன்கள், மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கிளைகள் இவைகளை கடலில் இறக்குவதால் வலை அதில் சிக்கி கிழிந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் மீன்களும் கிடைப்பதில்லை,

    கரைப்பகுதியில் 8 பாகம் அளவிலும் கூக்கான் இறக்குவதால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.

    கடலின் சூழலை சீர்குலைத்து இயற்கைக்கு மாறாக தொழில் செய்வதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் இந்த தொழில் முறையை தடுக்க வேண்டிய கடலூர் மற்றும் புதுவை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்,

    மேலும் இவற்றை கண்காணிக்க வேண்டிய கடலோர காவல்படை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கடல் மாசு ஏற்படுவதுடன் மீன்கள் வாழ முடியாது நிலை உள்ளது,

    சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இதன் மீது கவனம் செலுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த தொழில் முறையை தடுத்து கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • அடிக்கடி வடமாநில வாலிபர்கள் மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக புகார்.

    பல்லடம் :

    பல்லடம்- மாணிக்காபு–ரம் ரோட்டில் அமைந்துள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சில திருநங்கைகள் அங்கு உள்ள ஒரு வீட்டில் குடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தப் பகுதியில் அடிக்கடி வடமாநில வாலிபர்கள், மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக இப்பகுதி பொதுமக்கள் பலமுறை போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இந்தப் பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×