search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prevent transgenders from"

    • ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் டவுன் போலீஸ் சப்- டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக சில திருநங்கை கள் குற்ற செயல்களிலும், சிலா் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து அதிகரித்தது.

    இதனை தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். இதன்பேரில் ஈரோட்டில் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். பயிற்சி ஏ.எஸ்.பி. ஷ ஹ்னாஸ் முன்னிலை வகி த்தார். இதில் திருநங்கைகள் சிலர் குற்ற செயல்களிலும், சட்ட விரோத செய ல்களிலும் ஈடுபடுகின்றனர். இனி திருநங்கைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தி னா்.

    மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அசோக், ஒருங்கி ணைப்பாளர் சந்தாதேவி ஆகியோர் பங்கேற்று திருநங்கைகளுக்கான சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து போலீசார் திருநங்கைகளிடம் அவர்களது கோரிக்கை களை கேட்டறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காண ப்படும் என உறுதியளி த்தனா்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, சண்முகம் மற்றும் திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ×