என் மலர்
நீங்கள் தேடியது "திருநங்கைகள்"
- பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4 திருநங்கைகள் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று காலை சென்றனர்.
அப்போது அங்கிருந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் உங்களுக்கு என்ன இங்கு வேலை? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு திருநங்கைகள் அரசு அனுமதியுடன் தான் பரிசோதனைக்காக வந்து இருக்கிறோம் என பதில் அளித்துள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனைக்குப்பிறகு வெளியே வந்த திருநங்கைகளிடம் 4 பேர் தகராறு செய்து ஸ்கூட்டர் சாவியை பறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட திருநங்கைகள் இதுபற்றி கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகேவுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திருநங்கைகள் தலைவி ஷீத்தல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தரக்குறைவாக திட்டி தாக்க முயன்ற பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இரவு 10 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. அதன்பின்னர் கட்சியின் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் அங்கு வந்து சமரச பேச்சு நடத்தினார். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு திருநங்கைகள் கலைந்து சென்றனர்.
திருநங்கைகள் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
- உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
- திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன் பெறலாம்.
இதுவரை திருநங்கைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே கல்லூரி படிப்பில் ரூ.1000 உதவித்தொகை பெற முடியும் என்று இருந்தது.
இப்போது இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என எந்த வழியில் பயின்றிருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.
திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
- ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
- இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
லண்டன்:
சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.
இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.
- புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து,
- நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்!
புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!
கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் திராவிட மாடல் அரசு.
திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்!
- சுவரில் ஓவியம் வரையும் பணியை ‘திருநங்கை தூரிகை குழு’ என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர்.
- திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.
திருவொற்றியூர்:
எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெளிப்புற சுவற்றை வர்ணம் தீட்டி அழகுபடுத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து, சுவரில் ஓவியம் வரையும் பணியை 'திருநங்கை தூரிகை குழு' என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து திருநங்கைகள் ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா, ஆகியோர் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் சுவரில் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருநங்கை அபிமுக்தா கூறும்போது,
எண்ணூர் மக்கள் நல சங்கத்தினர் மூலம் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது யாசகம் பெறுபவர்கள் என்ற எண்ணம் பரவி உள்ளது. அதனை மாற்றும் நோக்கத்துடனேயே இவ்வாறு தாங்கள் தொடங்கிய திருநங்கை தூரிகை அமைப்பு மூலம் ஓவியங்கள் வரைவதாக கூறினார். மேலும், பள்ளியின் வெளிப்புற சுவற்றில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு கலை, திருவள்ளுவர், அவ்வைபாட்டி, பாண்டியர், சேரர், சோழர், தஞ்சை பெரிய கோவில் சித்திரம், கோவில் யானை போன்ற தமிழர்களின் கலாசார இலக்கிய பண்பாடு குறித்த ஓவியங்களை சுவரில் வரைவதன் மூலம் வரும் தலைமுறையினருக்கும் நமது பாரம்பரியத்தை கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்தார். திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.
- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது
- கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது, விருப்பமுள்ள திருநங்கைகள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சொந்த தொழில் துவங்க விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் துவங்க உள்ள தொழில் தொடர்பான கருத்துரு மற்றும் உரிய விலைப்புள்ளிகளுடன் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு 25.11.2022-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்,
மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆதரவற்ற பெண்கள்
இதைப் போல் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி,
சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் வாரியத்திற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளதால்,
தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் 14.11.2022 க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் : 0431-2413796 என்ற எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,
- சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
- 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் 50 திருநங்கைகளுக்கு கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கவுரவமான தொழிலில் ஈடுபடும் வகையில், 50 திருநங்கைகளுக்கு சகோதரன் அமைப்பு, அரிமா சங்கம் இணைந்து கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்களில், மிகக்குறைந்த அளவினர் மட்டுமே, சுயதொழில் செய்கின்றனர். பெரும்பாலானோர் ரெயில்களிலும், கடைகளிலும் காசு பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநங்கையர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, சகோதரன் அமைப்பு சார்பில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை நகரில் வசிக்கும், 50 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கார், ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரிமா சங்க உதவியுடன் 50 திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சகோதரன் அமைப்பு தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் வாகனம் தொகுதி தி.மு.க., எம். எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக, 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடித்தவர்கள் ஆட்டோ, கார் ஓட்டுனராக வலம் வர உள்ளனர். எதிர்காலத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சொந்த வாகனம் வாங்க அமைப்பின் வாயிலாக ஏற்பாடு செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- ராஜபாளையம் அருகே டிரைவரை தாக்கி ரூ.1½ லட்சம் வழிப்பறி வழிப்பறி நடந்துள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டி திருமலாபுரம் தெரு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 43), லாரி டிரைவர்.
இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சுரண்டை, பாவூர்சத்திரம் பகுதியில் சப்ளை செய்துள்ளார். அதில் கிடைத்த பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துடன் ராஜபாளையம் நோக்கி திரும்பி வந்துள்ளார்.
அப்போது இயற்கை உபாதைக்காக சாலை யோரம் லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அந்த பகுதியில் நின்றிருந்த திருநங்கைகள் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ராம்குமார், முகவூர் பாம்பலம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவஞ்சி (21) உள்ளிட்ட 3 திருநங்கைகள் மீது ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள், சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
- இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வெம்பக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 21 திருநங்கைகள், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 27 சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியாக திருநங்கைகளுக்கும், சிறுபான்மையர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு குடும்ப அட்டைகள், குடியிருப்பு வீடுகள், உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 6 திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
தமிழகத்திலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் 1 திருநங்கைக்கு மாவட்ட அளவிலான ஊராட்சி களுக்கான வளமையத்தின் தலைமையாளராக பணி நியமன ஆணையும், 1 திருநங்கைக்கு வள மையத்தின் உதவியாளர் கணினி இயக்குபவராக பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளன.
இது போன்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், வருவாய் கோட்டாட்சியர்கள் விசுவநாதன்(சிவகாசி), அனிதா(சாத்தூர்), விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கநாதன், வத்திராருப்பு வட்டாட்சியர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார். பின்னர் அவர் கூறிய தாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநங்கை கள் நலன் சார்ந்த திட்டங் கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. 55 திருநங்கைகள் இணைய தளத்தில் பதிவு மேற் கொண்டு தமிழ்நாடு அரசால் இணையவழி அடையாள அட்டை வழங் கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கும் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 31 திருநங் கைகள் அந்தந்த தாலுகா அலுவ லகத்தின் மூலமாக சிறப்பு ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை 49 நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள திருநங்கை களுக்கு 2021-2022 நிதி யாண்டிற்கு சொந்த தொழில் செய்வதற்கு மானியம் வழங்கிட தேர்வு குழு அமைத்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட தைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத்தொ கையினை வழங்கப்பட்டது. இவற்றில், துணி வியாபரம் செய்திட 17 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவும், மாடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலுள்ள கால்நடைகள் கொள்முதல் செய்யவும், ரூ.15 ஆயிரத் திற்கு தீவனம் மற்றும் மேற்கூரை அமைத்தல் என 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மானியமாகவும். மீன் வியாபாரம் செய்துவரும் 4 நபர்களுக்கு தொழில் விரிவு படுப்படுத்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக காய்கறி வியாபாரம் மற்றும் கிராமிய கலை மற்றும் பூ கட்டுதல் செய்திட தலா ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 2 நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் என மொத்தம் 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருநங்கைகள், திருநம்பிகளை சமமாக நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
- பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கண்டாங்கிபட்டி ஊராட்சி கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மனித கடத்தில் மற்றும் வணிக ரீதியில் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் நபர்களுக்கான இழப்பீடு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குடும்ப பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். திருநங்கை கள், திருநம்பிகள் ஆகியோர் சமமாக நடத்தப்பட்ட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார்.
இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பேசினர். இந்த முகாமில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- கஞ்சா விற்பதாக கூறி மிரட்டுகின்றனர்
- வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வீர மார்த்தாண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் சிறு, குறு தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் பகுதிக்கு கடந்த 28-ந்தேதி மாலை மது விலக்கு பிரிவு போலீசார் என கூறி 2 பேர் வந்தனர். அவர்கள் எங்களிடம் கஞ்சா மற்றும் மது வியாபாரம் செய்வதாக கூறி எங்களை மிரட்டினர். ஆதலால் திருநங்கைகளுக்கு அவப்பெயர் ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






