என் மலர்
நீங்கள் தேடியது "housing patta"
- மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற மாற்றுத்திறனாளி இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வ ீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன.
- 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை.
வெள்ளகோவில் :
இலவச வீட்டு மனைப் பட்டாக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனு விவரம் வருமாறு:-
வெள்ளக்கோவில் வருவாய் கிராமம், கிழக்கு உப்புப்பாளையத்தில் 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன. இவற்றில் வெளியூா் நபா்கள் என 20 பேரின் பட்டாக்கள் 2007ல் தனி வட்டாட்சியரால் ரத்து செய்யப்பட்டன. இதனை எதிா்த்து தகுந்த ஆதாரங்களுடன் 8 நபா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கிடைத்த தீா்ப்பில், தனி வட்டாட்சியா் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை. மீண்டும் உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, இலவசப் பட்டாக்கள் படி, நிலத்தை அளந்து நான்கு புறமும் அத்துக்கட்டித் தர வேண்டுமென தீா்ப்பு வழங்கப்பட்டது. எனவே உயா்நீதிமன்ற ஆணைப்படி 8 நபா்களுக்கு நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
- சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
- மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேற சென்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா இன்னும் வழங்கப்படவில்லை.
மேலும் தனிப்பட்ட நபர்கள் சிலர் சுடுகாட்டு பாதை உள்ளிட்ட பொது இடங்களை தங்களது பட்டா நிலம் என கூறி வேலி அமைத்து தடுத்துள்ள தாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக இறந்தவரின் உடலை வேறொரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்லும் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இது வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்
இதனையடுத்து இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்துவதற்காக சென்றனர்.
அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அவர்கள் தெருவிலேயே தங்களது போராட்டத்தை தொடங்கினர்.பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிமாணவ, மாணவி களும், பெண்களும், முதி யவர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் நடு தெருவில் சமையல் செய்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையறிந்து அங்கு வந்த நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
- 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.
- கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காங்கயம் :
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் தோ்தல் வாக்குறுதியின்படி கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தமிழக மக்களின் நலனுக்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இன்னுயிா் காப்போம், நம்மைக் காப்போம் - 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் 78 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள், சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
- இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வெம்பக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 21 திருநங்கைகள், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 27 சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியாக திருநங்கைகளுக்கும், சிறுபான்மையர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு குடும்ப அட்டைகள், குடியிருப்பு வீடுகள், உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 6 திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
தமிழகத்திலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் 1 திருநங்கைக்கு மாவட்ட அளவிலான ஊராட்சி களுக்கான வளமையத்தின் தலைமையாளராக பணி நியமன ஆணையும், 1 திருநங்கைக்கு வள மையத்தின் உதவியாளர் கணினி இயக்குபவராக பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளன.
இது போன்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், வருவாய் கோட்டாட்சியர்கள் விசுவநாதன்(சிவகாசி), அனிதா(சாத்தூர்), விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கநாதன், வத்திராருப்பு வட்டாட்சியர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூரில் விஸ்வநாதன் நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்ட செயலாளர் மாணிக்கம் தலைமையில் இன்று அரியூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.