என் மலர்
நீங்கள் தேடியது "road blockage"
- திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வெள்ளம்.
- தடுப்புச் சுவர் பகுதி சரிந்து விழுந்தது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக படி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் கோவில் நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையின் ஒரு பகுதியில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் பகுதி சரிந்து விழுந்தது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை யொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு மலை ப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் இன்னும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
- இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
சண்டிகர்:
பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள கனவுரி பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயி ஜகஜீத் சிங் தலேவால் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஜகஜீத் சிங்கின் உண்ணாவிரதம் நேற்றுடன் 34-வது நாளாக நீடித்தது.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீதும், ஜக ஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் பிற விவசாயிகள் மீதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் (நாளை) அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்தது.
இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை தெரிவித்தது.
இந்தச் சூழலில், ஜகஜீத் சிங்கை அரசின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஜகஜீத் சிங்கை மருத்துவ மனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ள நிலையில், காந்திய வழியில் தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாபில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அமிர்தசரசில் விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள். பஞ்சாப்-அரியானா எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பஞ்சாபில் சில இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
- குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட குன்னூர் ஊராட்சியில் திருவள்ளுவர் காலனி, கலைஞர் காலனி என இரு காலனிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சரியாக ஏற்றப்படாமல் இருப்பதால் கிராம மக்களுக்கு தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் அந்த பகுதி மக்கள் குன்னூர் செல்லும் சாலையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி:
ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.
ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து எரித்து தப்பிச்சென்று விட்டனர்.
இன்று காலை கொடிக்கம்பம் எரிக்கபட்டிருப்பதை கண்ட விடுதலை சிறுத்தையினர் ஆரணி-பூசிமலைக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எங்கள் கட்சிகொடியை சேதப்படுத்திய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூரில் விஸ்வநாதன் நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்ட செயலாளர் மாணிக்கம் தலைமையில் இன்று அரியூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி ஒட்டப்பட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி உள்ளனர். கடந்த 6 மாதங்களாக விடுதியில் குடிநீர் கிடைக்காமல் மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் மாணவிகள் குடிநீர் தேவைக்கு அருகில் அவ்வையார் நகர் பகுதிக்கு சென்று குளிக்க, குடிக்க தண்ணீரை குடத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
சரியான முறையான குடிநீர் வினியோகம் செய்ய கோரி விடுதி கல்லூரி மாணவிகள் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விடுதி மாணவிகள் இன்று காலை சேலம்-தர்மபுரி சாலை ஒட்டிப்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், திட்ட உதவி இயக்குனர் ரவிசங்கரநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கல்லூரி வணிகத் துறை பேராசிரியர் பிரபாகரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு கல்லூரி மாணவிகள் விடுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






