என் மலர்
நீங்கள் தேடியது "college student protest"
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்கவில்லை. கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இன்று 12 மணிக்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லை எனில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.
இதனால் கல்லூரி வளாகம் முன்பு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மாணவ-மாணவிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி ஒட்டப்பட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி உள்ளனர். கடந்த 6 மாதங்களாக விடுதியில் குடிநீர் கிடைக்காமல் மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் மாணவிகள் குடிநீர் தேவைக்கு அருகில் அவ்வையார் நகர் பகுதிக்கு சென்று குளிக்க, குடிக்க தண்ணீரை குடத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
சரியான முறையான குடிநீர் வினியோகம் செய்ய கோரி விடுதி கல்லூரி மாணவிகள் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விடுதி மாணவிகள் இன்று காலை சேலம்-தர்மபுரி சாலை ஒட்டிப்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், திட்ட உதவி இயக்குனர் ரவிசங்கரநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கல்லூரி வணிகத் துறை பேராசிரியர் பிரபாகரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு கல்லூரி மாணவிகள் விடுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






