search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student protest"

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #pollachiissue
    திருவெறும்பூர்:

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிட வலியுறுத்தி திருச்சி  எம்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் இன்று 2-வது நாளாக கல்லூரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.   

    இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் திருச்சி கோர்ட்டில் இன்று நடைபெற்ற வழக்குகளில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதேபோல் முசிறி, லால்குடி, மணப்பாறை கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  #pollachiissue
    தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #pollachiissue
    புதுக்கோட்டை:

    பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. 

    இதேபோல புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் வன்கொடுமைக்கு உச்சபட்ச கொடூர (மரண) தண்டனை அமல்படுத்து, அதுவரை தேர்தலை ரத்துசெய். பெண்டீரே விழித்தெழுங்கள் உன்னை சிதைப்பவனின் பிறப்புறுப்புகளை அறுத்தெறியுங்கள், என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வலம்வந்ததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #pollachiissue
    ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்கவில்லை. கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இன்று 12 மணிக்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லை எனில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.

    இதனால் கல்லூரி வளாகம் முன்பு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மாணவ-மாணவிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.
    குடிநீர் கேட்டு விடுதியில் தங்கி இருந்த கல்லூரி மாணவிகள் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி ஒட்டப்பட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி உள்ளனர். கடந்த 6 மாதங்களாக விடுதியில் குடிநீர் கிடைக்காமல் மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் மாணவிகள் குடிநீர் தேவைக்கு அருகில் அவ்வையார் நகர் பகுதிக்கு சென்று குளிக்க, குடிக்க தண்ணீரை குடத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

    சரியான முறையான குடிநீர் வினியோகம் செய்ய கோரி விடுதி கல்லூரி மாணவிகள் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த விடுதி மாணவிகள் இன்று காலை சேலம்-தர்மபுரி சாலை ஒட்டிப்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், திட்ட உதவி இயக்குனர் ரவிசங்கரநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கல்லூரி வணிகத் துறை பேராசிரியர் பிரபாகரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அரசு கல்லூரி மாணவிகள் விடுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் விரிவுரையாளர்களை நியமிக்க வலியுறுத்தி, மாணவ, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூரில் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக்கல்லூரி இயங்கி வருகிறது. 

    இக்கல்லூரியில் இயற் பியல் மற்றும் கணிதத்துறை பாடங்கள் நடத்த 7 விரிவு ரையாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 விரிவுரையாளர்கள் மட் டுமே உள்ளனர். மாணவ, மாணவியருக்கு முறையாக பாடங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகளின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான விரிவுரையாளர்களை நியமிக்க பல முறை வலியுறுத்தியும் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் வீரப்பன், ஆவுடையார்கோவில் போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் உள்ளிட்டோர் மாணவ,மாணவியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர். 

    கல்லூரி மாணவ, மாணவியகளின் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ×