search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள்"

    சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்துவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தது. 

    தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

    தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகளுடன் சமரசம் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் முதல் முறையாக 25 ஆயிரம் பேர் பணியை நிறைவு செய்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார்.

    2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் காரணமாக 2020-ம் ஆண்டின் போது 58 வயது பூர்த்தியானவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 2 வருடத்துக்கு முன்பு 58 வயது பூர்த்தியாகி பணி நீட்டிப்பு வழங்கப்பட்டவர்களுக்கு தற்போது 60 வயது நிறைவு பெறுகிறது. எனவே அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

    இதன்காரணமாக ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் முதல் முறையாக 25 ஆயிரம் பேர் பணியை நிறைவு செய்கிறார்கள்.

    புதிய நடைமுறையின்படி கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். பணி ஓய்வு பெற்ற 25 ஆயிரம் பேருக்கும் ஓய்வூதிய பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தமிழகத்தில் ஏற்கனவே 1.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது மேலும் 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாகிறது. இந்த காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

    ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாளை திருத்த ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.

    இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும்.

    இந்த நிலையில் ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாளை திருத்த ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது. அதில் ஒன்று ஆசிரியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள மையத்தில் விடைத்தாள் திருத்தலாம் என அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ×