என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘சஸ்பெண்டு’ ஆன அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
Byமாலை மலர்31 Jan 2019 10:02 AM GMT (Updated: 31 Jan 2019 10:02 AM GMT)
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு ‘சஸ்பெண்டு’ ஆன அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட காலங்களில் வேறு வேலை பார்க்கவில்லை என்று சான்று கொடுத்தால் மட்டுமே பாதி சம்பளம் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. #JactoGeo
சென்னை:
தமிழகத்தில் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
முதல்-அமைச்சரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை என்று சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பி உள்ள நிலையில் துறை ரீதியாக நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறைக்கு சென்றவர்கள் இன்று வேலையில் சேர முடியவில்லை.
சென்னை தலைமை செயலகத்தில் ‘சஸ்பெண்டு’ நடவடிக்கைக்கு உள்ளான ஜாக்டோ-ஜியோ நிர்வாகி வெங்கடேசன் இதுபற்றி கூறியதாவது:-
அரசு ஊழியர்களில் சஸ்பெண்டு ஆனவர்களில் நானும் ஒருவன். போராட்டத்தை தூண்டியதாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமை செயலகத்தில் நான் உள்பட 30 பேர் சஸ்பெண்டு ஆகி உள்ளோம். எங்களுக்கு பாதி சம்பளம் தான் கிடைக்கும்.
எங்களைப்போல் சஸ்பெண்டு ஆனவர்கள் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் சுமார் 3500 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் கிடைக்காது.
3 அல்லது 4-ந் தேதிகளில் தான் பாதி சம்பளம் கிடைக்கும். சஸ்பெண்டில் இருக்கும்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்று எழுதி சான்று கொடுத்தால் தான் எங்களுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்.
கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது 7 மாதம் பணியில் சேர முடியாமல் இருந்தோம். அதன் பிறகு தேர்தலுக்கு முன்புதான் எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். அதன் பிறகே வேலையில் சேர முடிந்தது.
அதேபோல் இப்போதும் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதால் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தால்தான் நாங்கள் பணியில் சேர முடியும். அப்போதுதான் முழு சம்பளத்தை பெற முடியும். அதுவரை பாதி சம்பளம் தான்.
பாராளுமன்ற தேர்தல் வருவதால் அதற்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
தமிழகத்தில் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
முதல்-அமைச்சரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை என்று சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பி உள்ள நிலையில் துறை ரீதியாக நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறைக்கு சென்றவர்கள் இன்று வேலையில் சேர முடியவில்லை.
சென்னை தலைமை செயலகத்தில் ‘சஸ்பெண்டு’ நடவடிக்கைக்கு உள்ளான ஜாக்டோ-ஜியோ நிர்வாகி வெங்கடேசன் இதுபற்றி கூறியதாவது:-
அரசு ஊழியர்களில் சஸ்பெண்டு ஆனவர்களில் நானும் ஒருவன். போராட்டத்தை தூண்டியதாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமை செயலகத்தில் நான் உள்பட 30 பேர் சஸ்பெண்டு ஆகி உள்ளோம். எங்களுக்கு பாதி சம்பளம் தான் கிடைக்கும்.
எங்களைப்போல் சஸ்பெண்டு ஆனவர்கள் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் சுமார் 3500 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் கிடைக்காது.
3 அல்லது 4-ந் தேதிகளில் தான் பாதி சம்பளம் கிடைக்கும். சஸ்பெண்டில் இருக்கும்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்று எழுதி சான்று கொடுத்தால் தான் எங்களுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்.
கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது 7 மாதம் பணியில் சேர முடியாமல் இருந்தோம். அதன் பிறகு தேர்தலுக்கு முன்புதான் எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். அதன் பிறகே வேலையில் சேர முடிந்தது.
அதேபோல் இப்போதும் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதால் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தால்தான் நாங்கள் பணியில் சேர முடியும். அப்போதுதான் முழு சம்பளத்தை பெற முடியும். அதுவரை பாதி சம்பளம் தான்.
பாராளுமன்ற தேர்தல் வருவதால் அதற்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X