என் மலர்
நீங்கள் தேடியது "jewellery robbery"
- கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
- நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவல்.
தாம்பரம் சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கத்தில் வேளச்சேரி பிரதான சாலையில் 'புளு ஸ்டோன்' என்ற பெயரில் நகைக் கடை உள்ளது.
அப்பகுதியில் பிரபலமான இந்த நகைக்கடையில் வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று இரவு இந்த நகைக்கடையில் பணிகளை முடித்துவிட்டு கடை ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடை பொறுப்பாளரான ஜெகதீசன் என்பவரின் செல்போனில் அலாரம் ஒலித்தது.
நகைக் கடைக்குள் யாரோ புகுந்துவிட்டதை உணர்த்தும் வகையில் அலாரம் அடித்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது புளுஸ்டோன் நகை கடையில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
நகைக் கடையில் உள்ள பைப் லைன் வழியாக ஏறி மர்ம நபர்கள் நகைக்கடை மாடிக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து லிப்ட் இணைப்பு அறை வழியாக நகைக் கடைக்குள் சென்று கைவரிசை காட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது.
நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க- வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கொள்ளையர்கள் அணிந்துருந்த டி சர்ட்டை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான். அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் வைத்து போலீசார் அவனை மடக்கி பிடித்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தான்.
நகைக்கடையில் கொள்ளை அடித்தபின் கொள்ளையர்கள் அருகில் உள்ள நகைக்கடை மாடியில் குதித்து தப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 2 சிறார்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் வீட்டுமனை வாங்க ஒருவரிடம் மாத தவணையாக பணத்தை கட்டினேன்.
- போலீஸ் நிலையங்களில் பொய்புகார் கொடுத்து என்மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய வைத்தார்.
கோவை :
அன்னூரில் சத்தி சாலையில் ஜெயகுமார் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், தான் வங்கியின் மேலாளர் என்று கூறி 2 பவுன் தங்க செயினை திருடி கொண்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து அன்னூர் போலீசில் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், நகைக்கடைக்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து, போலீசார் அதனை வைத்து அவரை தேடினர்.
அன்னூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் சென்னையை சேர்ந்த ரவி என்ற சீசிங் ரவி(வயது 40) என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் தான் அன்னூரில் நகைக்கடையில் நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் செயின் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
போலீசாரிடம் ரவி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் கோபி நீதிமன்றம் எதிரே உணவு கடை நடத்தி வந்தேன். 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் வீட்டுமனை வாங்க ஒருவரிடம் மாத தவணையாக பணத்தை கட்டினேன். ஆனால் அவர் மோசடி செய்து விட்டார்.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக அவரை எச்சரித்ததால் என்மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பொய்புகார் கொடுத்தார். அதன்பேரில் என்மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய வைத்தார். இதனால் நான் சிறைக்கு சென்றேன். இதனால் மனைவி பிரிந்து செ்னறார். எனது வாழ்க்கையும் மாறிவிட்டது.
சிறையில் இருந்தபோது, தேனியை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு 2 பேரும் ஒன்றாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டோம்.
பின்னர் நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். மீண்டும் கோபில் உணவகம் நடத்தினேன்.இதற்கிடையே எனது 2-வது மனைவி, மகன் நோயால் பாதித்ததால் சிகிச்சைக்காக வட்டிக்கு பணம் பெற்றேன். ஆனால் அதுவும் போதவில்லை. இதையடுத்து நகை திருடி சம்பாதிக்க ஆசைப்பட்டு, நகைக்கடையில் திருடினேன். அப்போது தான் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டிப்பட்டி:
கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் அனீஸ் குமார் (வயது 25). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக தினக்கூலி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நாகர்கோவிலுக்கு சென்றார்.
பின்னர் மீண்டும் அவர்கள் மூணாறு திரும்பிக் கொண்டு இருந்தனர். வரும் வழியில் அனீஸ்குமார் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக இறங்கி விட்டார்.
பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தபோது 3 வாலிபர்கள் அவரிடம் வந்து அழகான பெண் உல்லாசத்துக்கு இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவருடன் சந்தோசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதனை நம்பி அனீஸ்குமார் அவர்களுடன் சென்றார். ரெயில்வே கேட் அருகே வந்ததும் திடீரென அவர்கள் அனீஸ்குமாரை பீர் பாட்டிலால் தாக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த மோதிரம், செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி விட்டனர்.
படுகாயங்களுடன் ஊருக்கு சென்ற அனீஸ்குமார் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23), முல்லை நகரத்தைச் சேர்ந்த மனோ ஆனந்த் (32), போடியைச் சேர்ந்த மாரிமுத்து (24) ஆகிய 3 பேர் தான் அனீஸ்குமாரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களையும் பறிமுதல் செய்து அனீஸ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
மாரிமுத்துவும், கார்த்தியும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த மனோ ஆனந்த் பல வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணத்தில் உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் பசீர் என்ற சிங்கம் பசீர் (வயது 53). இவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார்.
பெரிய பட்டணத்தில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தனது டிரைவர் மர்சூக் அலி என்பவரிடம் வீட்டின் பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறு சிங்கம் பசீர் கூறிவிட்டு வெளிநாட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிங்கம் பசீர் சொந்த ஊருக்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்து டிரைவர் மர்சூக் அலி மாயமானார். அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, பீரோவில் இருந்த 31 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்ததில், மர்சூக் அலி நகையை திருடி விற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசில் சிங்கம்பசீர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி மர்சூக் அலி மற்றும் உடந்தையாக இருந்த செய்யது அபுதாகீர், அசன் மைதீன், முகமது பயாஸ்கான், பைசல் சர்புதீன், பாசிக் அலி, சாகுல் அமீது, சுலைமான் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
போரூர்:
சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக் கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
கோயம்பேடு 100அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்
கூட்ட நெரிசலை பயன் படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.
பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.
மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.
விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.
பின்னர் நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.
வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்ததும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவஇடத்தின் அருகே சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டிருந்தது. இதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விஜய் ஆனந்தன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் சரியாக பேச முடியவில்லை. வீடு வாடகைக்கு வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது,
இந்நிலையில் பீளமேட்டில் பெண்ணை கொன்று நகை கள் கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தஞ்சாவூர்:
தஞ்சை செல்வம் நகரில் ஒரு தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு தஞ்சையை சேர்ந்த மணப்பெண் வீட்டார் தங்கியிருந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்ததால் வெளியூரிலிருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மணப்பெண் தனது திருமணத்திற்கு செய்யப்பட்ட 60 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து அதனை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.
நள்ளிரவு மணப்பெண் அறைக்குள் புகுந்த கொள்ளையன் தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றான்.
அப்போது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த மணப்பெண் உறவினர் ஒருவர் மர்மநபர் பையுடன் செல்வதை கண்டு திடுக்கிட்டார். அவர் சந்தேகமடைந்து திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்த உறவினர்கள் சிலர் எழுந்து வந்து மர்மநபரை விரட்டி சென்றனர்.
இதுபற்றி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனை கண்ட மர்ம நபர் தன்னை பிடித்துவிடுவார்கள் என்று பயந்து கையில் வைத்திருந்த நகை பையை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டான். அதனை கைபற்றி போலீசார் மணப்பெண் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
திருமண மண்டபத்தில் கொள்ளையன் புகுந்து 60 பவுன் நகையை திருடி செல்ல முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.