search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடனை திருப்பி கொடுக்க நகை கடையில் திருடிய இளம்பெண் கைது
    X

    கடனை திருப்பி கொடுக்க நகை கடையில் திருடிய இளம்பெண் கைது

    • நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார்.
    • காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த டிப்-டாப் உடை அணிந்த இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி இரண்டு தங்க செயின்களை திருடி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து நகையை சுருட்டி செல்வது பதிவாகி இருந்தது.

    விசாரணையில் அவர், வாலாஜாபாத் அருகே உள்ள புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (26) என்பது தெரிந்தது. அவரை காஞ்சி போலீசார் கைது செய்தது விசாரித்தனர். அப்போது கடனை அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.

    கைதான காயத்ரி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, நகைக்கடையில் தங்க செயின்களை திருடினேன். ஆனால் கண்காணிப்பு காமிராவில் பதிவானதால் சிக்கிக்கொண்டேன் என்று கூறி உள்ளார்.

    காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×