என் மலர்
நீங்கள் தேடியது "pollachi issue"
- அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.
- குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.
சென்னை:
தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.
* குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.
* குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.
* அண்ணா பிளீஸ் அடிக்காதீங்க... அடிக்காதீங்க... என்றபோது நாங்கள் என்ன யார் அந்த அண்ணா... என்று எழுதி ஒட்டினோமா?
* சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்பதிலே முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்.
* பெண்கள் பாதுகாப்பு என்பதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சமரசமே கிடையாது என்று கூறினார்.
- நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள்.
- நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை.
வடலூர்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூர் வந்தார். அங்குள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் அவர் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-
தி.மு.க.-அ.தி.மு.க. பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள். தி.மு.க.வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அ.தி.மு.க.வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். முட்டுக்கட்டை நிர்வாகிகளாக இருப்பார்கள்.
வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும் போது பாறையாக இருந்தாலும் உருட்டிக் கொண்டு தான் செல்லும். நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை. நிர்வாகிகள் விலகல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். சிற்றூர்களையெல்லாம் நகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.
கிராமங்களில் இருந்துதான் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வருகிறது. அதனால்தான் எங்களை அப்படியே வாழ விடுங்கள் என்கிறார்கள், இதில் என்ன பிரச்சனை. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. வில்லேஜ் சிட்டி உள்ளதா?
இவ்வாறு அவர் கூறினார்.
- பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
- இரு தரப்பும் ஆதாரங்களை வழங்கிய நிலையில் இன்று காரசார விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
இந்தாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று தொடங்கியது. அப்போது, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை திமுக மற்றும் அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இரு தரப்பும் ஆதாரங்களை வழங்கிய நிலையில் இன்று காரசார விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது.
- சபாநாயகர் பேச்சுக்கு சட்டசபையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் வழங்கினர்.
இதையடுத்து, இருதரப்பினரும் அளித்த ஆதாரங்களை ஆராய்ந்து பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சபாநாயகர் பேச்சுக்கு சட்டசபையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
கோவை
கோவையில் மாயமான கல்லூரி மாணவி பிரகதி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் சென்றனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் ஒரு தனிப்படையினர் காந்திபுரம், பொள்ளாச்சி, பல்லடம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் மாணவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
கோவை:
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரகதியின் சொந்த அண்ணன் அரவிந்த்குமார் கூறியதாவது:-
எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.
3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
அதன்பின்னர் பிரகதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்லடம் போலீசில் புகார் செய்ய சென்றோம். பல்லடம் போலீசார் நீங்கள் கோவை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.
உடனே கோவைக்கு புறப்பட்டோம். கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தோம். இந்நிலையில் எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.
கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
திண்டுக்கல்:
பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது பிரசாரம் திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு சுவாரசியமாக மாறி இருக்கிறது. திரையில் பார்ப்பது போலவே காமெடியாக பேசி மக்களை சிரிக்க வைக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி என் சொந்த ஊர். நானும் திண்டுக்கல் காரன்தான். நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
இங்கே மணல் முழுவதையும் அள்ளிட்டாங்க. பொன்மாந்துரை என்கிற கிராமத்துக்கு சென்றேன். அங்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. இந்தியாவிலேயே தண்ணீர் இல்லாத கிராமமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தை அந்தக் கிராமத்தில் தான் அமைக்கப் போகிறேன். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழன்தான் பிரதமராக வரவேண்டும். நான் எம்.பி ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து சீட்டை துடைத்து விட்டு வர மாட்டேன். எழுந்து நின்றுதான் கேள்வி கேட்பேன். கிராமங்களுக்குப் போகும் பொழுது நிறைய பேர் கேட்கிறார்கள். நீங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவீங்களான்னு.
நான் நல்லது பண்ண மாட்டேன். கெட்டதுதான் பண்ணுவேன். இந்த ஊருக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப்போறேன். பொள்ளாச்சி விஷயத்துல தவறு செய்த அவங்க தலையை வெட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #MansoorAliKhan #naamtamilarkatchi
கோவை:
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தர விட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு தொடர்பான வீடியோ வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளை சிலர் மீது பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார்.
அவர் ‘பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலும் 5 வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #pollachiissue #cbi
கோவை:
கோவை விமான நிலையத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த புகாரை கொடுக்க சொல்லிய பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதுவும் இதுவரை வெளியிடப்பட வில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் வீடியோ வெளியிட்டார். அதுவும் மறைக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோமே தவிர, எங்களால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
எனது மகன்கள் வெளிநாடு தப்பிச்சென்று விட்டனர் என்று வதந்தி பரப்பி உள்ளனர். அவர்கள் வெளிநாடு செல்லவில்லை. இங்குதான் எப்போதும் போல தங்களின் பணியை செய்து வருகிறார்கள். எனவே எங்கள் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார். #pollachiissue #PollachiJayaraman
கோவை:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்த்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று 3-வது நாளாக திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. வட்டித் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. வலையில் விழுந்த பெண்களை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் சீரழித்து, வீடியோ எடுத்த விவகாரம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளது.
அப்போது போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆனால் அரசியல் பிரமுகர்கள் உதவியால், விசாரணை வளையத்துக்குள் சிக்காமல் இந்த கும்பல் தப்பி வந்துள்ளது. இதற்கு கைமாறாக பல லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்துள்ளனர். எனினும் கடந்த மாதம் இவர்களால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தைரியமாக போலீசில் புகார் கொடுத்ததும், திருநாவுக்கரசு தவிர அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது திருநாவுக்கரசை வெளி மாநிலத்துக்கு தப்பி செல்லுமாறும் போலீஸ் அதிகாரி ஒருவர் தான் கூறி உள்ளார். ஆனாலும், வழக்கு விஸ்வரூபம் எடுத்ததும் தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று திருநாவுக்கரசை கைது செய்தனர்.
திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளதால் அவர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளது. சில பெண்களை அடித்து, துன்புறுத்தி பணம், நகை பறித்துள்ளனர். இச்சம் பவங்களில் 20 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தினர். இதில் சில முக்கியத்தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்பேரில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
தங்களது வலையில் விழுந்த பெண்கள், மாணவிகளை இந்த கும்பல் ஆனைமலையில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீட்டிலும், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தி லேப்டாப், பென்-டிரைவ், செல்போன்கள் மற்றும் ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பலால் சீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்புடைய சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களில் உள்ள சில அடையாளங்கள், அவை திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்துகிறது. இது தொடர்பாக அவரது பண்ணை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநாவுக்கரசுக்கு நேற்று திடீரென காலில் வீக்கம் அடைந்து, கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #pollachiissue
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மேலும் இதில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. #pollachiissue






