என் மலர்
நீங்கள் தேடியது "naam tamilar katchi"
- சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
- நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை வறுவல் என விதவிதமான அசைவ உணவுகள் சீமான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு கட்சியினருக்கு பரிமாற்றப்பட்டது. இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சூடாக பரிமாறப்பட்ட பிரியாணி உள்பட அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டனர்.
கைதேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு சீமான் வீட்டு வளாகத்திலேயே அசைவ உணவுகள் சமைக்கப்பட்டன. அதனை கல்யாண வீடுகள் போன்று சேர், டேபிள்கள் போட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது.
- மதுரையில் காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
- கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவலியைத் தருகின்றது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று நடிகர்களைக் கொண்டு வெற்று விளம்பரம் செய்துவிட்டு, கல்விக்கண் திறந்த கடவுள் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தைச் செயற்பட முடியாதபடி முடக்குவது வன்மையானக் கண்டனத்துக்குரியது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு அவருடைய நினைவாக 1978 ஆம் ஆண்டு காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. 18 பாடசாலைகளுடன், 72 திணைக்களங்களை கொண்டுள்ள இப்பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும், 7 மாலைநேரக் கல்லூரிகளையும் உறுப்பு கல்லூரிகளாகக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியையும் பெற்றுத் திகழ்வதோடு, 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இளம்பிள்ளைகள் உயர்கல்வி பயில வாய்ப்பளித்து பல இலட்சம் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது.
அத்தகு சிறப்பு வாய்ந்த காமராசர் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாகக் கடும் நிதி நெருக்கடி காரணமாக முற்று முழுதாக முடங்கிப்போயுள்ளதுதான் பெருங்கொடுமையாகும்.
காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை.
பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு ஆண்டுக்குமான தணிக்கை அறிக்கைகள், நிதி நெருக்கடிகள் ஏற்பட பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றில் முதன்மையானது 17.05.1999 நாளிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குத் தரப்படும் சம்பளம் மற்றும் படிகள் ஆகியன தமிழ்நாடு அரசால் ஈடு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை.
கடந்த 2007 மற்றும் 2008 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசால் பல்கலைகழகத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை 7 கோடியே 74 லட்சம். அது கடந்த 17 ஆண்டுகளில் அதிகரித்து 2023-24 ஆம் நிதி ஆண்டுகளில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவைத்தொகை தமிழ்நாடு அரசால் தரப்படவில்லை. ஒருவேளை நிலுவைத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருந்தால் இன்றைய நாளில் 500 கோடி அளவிற்கு உபரித்தொகை பல்கலைக்கழகத்தில் கையிருப்பாக இருந்திருக்கும் எனவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
ஆனால், நிலுவைத்தொகையைத் தராமல் இருப்பதற்கு, பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் விதிமீறல் நடைபெற்றதே காரணம் என அரசு கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றபோதே அதனை தமிழ்நாடு அரசு தடுக்கத்தவறியது ஏன்? பணி நியமனத்தில் முறைகேடு என்றால் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வழங்க வேண்டிய நிதியை நிறுத்துவது எவ்வகையில் நியாயமாகும்?
மேலும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்விதுறை 2010 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 50,000 மாணவர்களைக் கொண்டிருந்தது, அதே துறை 2023 ஆம் ஆண்டில் வெறும் 6000 மாணவர்களையேக் கொண்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் இந்திய ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூரக் கல்வியானது அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற புதிய விதியை நிர்ணயித்து, பல்கலைக்கழகத்தில் அதிகளவில் மாணவர் சேர்க்கையைத் தடுத்து நிறுத்தியதேயாகும். இதனால் பல்கலைக்கழகத்தின் வருமானம் பெருமளவு குறைந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956 இன் படி, அவ்வாணையத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று பல்கலைக்கழகங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதாகும். ஆனால், இந்திய ஒன்றிய அரசின் புதிய விதிமுறை அதற்கு நேரெதிராக நிதியைக் குறைக்கச் செய்து, மாணவர்களின் கல்வியை முடக்கியுள்ளது. இதற்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசே முழுக்காரணமாகும்.
பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகத்தின் சிறகுகளை வெட்டாவிட்டால், காமராஜர் பல்கலைக்கழகம்
பத்து மடங்கு கூடுதல் நிதியைத் தொலைதூரக் கல்வித்துறையின் மூலம் ஈட்டியிருக்க முடியும். பல்கலைக்கழகமும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த தவறியதோடு, பல்கலைகழகப் பணியாளர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகளையும், பணிவிதிகளையும் ஏற்படுத்த தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியமும் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கெட மற்றுமொரு காரணமாகும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இது தவிர பட்டதாரிகளுக்கான 15 உறுப்பினர் பதவிகளும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளன. உதவிப்பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல், தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மாணவர்களின் உயர்கல்வியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை.
பாஜக ஆளுநர் - திமுக அரசின் மோதல் போக்கு தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முற்று முழுதாகச் சீரழித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களை இத்தகைய மோசமான நிலையில் வைத்துவிட்டு கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என வீண் தற்பெருமை பேசுவது வெட்கக்கேடானது.
பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டு முதல்வரே செயல்படுவார் எனும் நிலையை எட்டிய பிறகும் திமுக அரசு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைச் சீர்படுத்தி, நிதிநிலைமையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு உயர் கல்வியிற் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ள முறையா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு மதுரை காமராசர் பல்கலைகழத்திற்குத் தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கி மூடப்படும் நிலையிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும். மேலும், சீரழிந்துள்ள தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தையும் சீரமைத்து, நிதி நிலைமையை மேம்படுத்தி, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார்.
- இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.
அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" என்ற பெயரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார். இது தொடர்பாக சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரோடும் உறவோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.
தீய ஆட்சி முறை ஒழிய தூய ஆட்சி முறை மலர கேடுகெட்ட பணநாயகம் ஒழிய மாண்புமிக்க ஜனநாயகம் மலர அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி எப்போதும் வெல்லும். நமது வெற்றி அதை சொல்லும். திருச்சியில் திரள்வோம். தீந்தமிழ் இனத்தீரே.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களை காக்கும் வகையில் மலைகள், மரங்களின் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்திய சீமான் தற்போது மக்களின் மாநாட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
- பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.
சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
* தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
* தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்.
* யாருடனும் கூட்டணி கிடையாது. எந்த காலத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.
* இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது.
* பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
- பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை, சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது.
* கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
* மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள்.
* தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, விளம்பர மாடல் அரசு.
* பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
* தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை.
- நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை.
தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வித்தாள் அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
ஆங்கில வழியில் எழுதியவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தமிழிலில் எழுதியவர்களுக்கு ஏன் கடினமான கேள்விகளையும் கேட்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கேள்வி கேட்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு மேற்பட்ட கல்வி பாடத்தில் இருந்து கடினமான கேள்வி ஏன் கேட்க வேண்டும்.
தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால் தற்போது பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. அதே நேரம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டிற்கு யார் காரணம். 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களை ஓய்வூதியம் கொடுக்க வழியில்லாமல் 60 வயது வரை வேலை பாருங்கள் என்கின்றனர். அப்படியானால் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல் காத்திருப்பவர்களின் நிலை என்னவாகும். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும். கருணை அடிப்படையில் மீண்டும் பணி புரிவதற்கு ஏன் கொடுக்க வேண்டும். இதை யார் தட்டி கேட்பது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி முறைகேடு நடைபெறக்கூடாது என்பதை பொதுக்கூட்டம் மூலம் அரசிற்கு முன் வைக்கிறோம். தேர்வில் தோல்வி அடைந்த பலர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அதனால் இந்த பெரம்பலூரை தேர்வு செய்தேன்.
நான் தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டே தான் இருக்கிறேன். நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை. இதயத்துல இருந்து பேசுறேன். தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது தான் வீதிக்கு வர்றாங்களே தவிர, பொதுவான மக்களின் பிரச்சனைக்கு கற்ற பிள்ளைகள், கற்றறிந்தவர்கள் வந்து களத்துல நின்று அதை தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறது இல்லை.
அதனால அது, இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு நமக்கான சரியான தலைமையை தேர்வு செய்து, சரியான அதிகாரத்தை நிறுவ வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறையும் இதே மாதிரி வீதியில் நின்று போராடி கொண்டு இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் பொதுக்கூட்டம் தி.மு.க.வுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.
விஜய் பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்கிறார். கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும். இல்லையென்றால் பேசக்கூடாது. விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்க்காதீங்க, கூட்டம் எல்லாருக்கும் வரும்.
நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர். அதே நேரம் பக்கத்தில் வெறும் 40 விவசாயிகள் போராடி கொண்டிருந்தார்கள். வடிவேலுக்கு வராத கூட்டமா. இல்ல விஜயகாந்திற்கு வராத கூட்டமா. கூட்டம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கூட்டம் வரும். அந்த படம் நல்லா இருந்தா அடுத்த காட்சியில் அதே கூட்டம் இருக்கும்.
ரொம்ப நல்லா இருந்தா அதற்கு அடுத்த காட்சியிலும் அதே கூட்டம் இருக்கும். இல்லைன்னா அடுத்த கட்டத்தில் திரையரங்கு ஈ ஆட்டிடும். விஜய்யை பார்க்க கூடுவார்கள். அவர் பேசுறதை கேட்க கூட மாட்டார்கள். என்னை பார்க்க வரமாட்டார்கள். நான் என்ன பேசுறான்னு கேட்க கூடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நம்மை ஜாதி மத உணர்வுகள் தான் பிரித்து வருகிறது.
- நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியவர் காயிதே மில்லத்.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதலாக தேர்தலை சந்தித்தேன். என்னை சமாளிக்க முடியாமல் அதிகாரத்தில் இருந்த தி.மு.க. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். இலங்கையில் தமிழின அழிப்புக்கு காங்கிரஸ் முக்கிய காரணம். அதற்கு துணையாக இருந்தது தி.மு.க. பலமுறை எனது குரலை நசுக்க சிறையில் அடைத்தார்கள்.
இதற்கு வேறு வழியில்லை என்ற பட்சத்தில் அரசியல் கட்சி தொடங்கினேன். அரசியல் விடுதலை ஒன்றே இதற்கான தீர்வாகும்.
நம்மை ஜாதி மத உணர்வுகள் தான் பிரித்து வருகிறது. இந்து தமிழன் இஸ்லாமியருக்கும், இஸ்லாமிய தமிழன் இந்துவுக்கும் வாக்களிப்பதில்லை இவர்கள் 2 பேருக்கும் கிறிஸ்தவ தமிழன் வாக்களிப்பது இல்லை. இதனால் தான் இங்கு எந்த தமிழனும் எழுவதில்லை, வெல்வதில்லை, வாழ்வதில்லை. இதேபோல் ஜாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியவர் காயிதே மில்லத். அதுவரை இஸ்லாம் என்றால் உருது என்று நினைத்துக் கொண்டிருந்த நேருவிடம் இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி என காயிதே மில்லத் கூறினார்.
சாதி, மதமாக இணைந்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் அச்சுறுத்தப்படுவீர்கள். மொழி இனமாக நீங்கள் இணைந்திருந்தால் வலிமை பெறுவீர்கள்.
சீமான் பி.ஜே.பி.யின் பி டீம் என்று கூறினார்கள். எனவே சீமானுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் யாரும் பா.ஜ.க.விற்கு ஓட்டு போடாதீர்கள் என கூறவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த நாகலாந்து ஆளுநர் இல கணேசன் அண்மையில் காலமானார். அவருக்கு பிரதமர் சார்பில் முதலமைச்சர் சென்று அஞ்சலி செலுத்தினார். இப்பொழுது யார் பா.ஜ.க.வின் பி டீம் என்பது தெரியவரும்.
பா.ஜ.க. மனித குலத்தின் பகைவன், திராவிட கட்சிகள் என் நிலத்தின் தீய சக்திகள். கேடுகெட்ட கேவலமிக்க ஊழல் லஞ்சத்தின் ஊறிப்போனவை திராவிட கட்சிகள். அண்ணா மறைவிற்கு பின் நெடுஞ்செழியன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக வந்தவர்களால் தான் தமிழகம் பாதிக்கப்பட்டது. கச்சத்தீவு பிரச்சனையால் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் தாக்கி அழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆன்றோர்களும், சான்றோர்களும் இருந்த அரசியல் செய்த நிலத்தில், உலகத்திற்கு பொதுமறை தந்த மக்கள், சிறந்த பேரறிஞர்கள் வாழ்ந்த இந்த நிலத்தில் திராவிட சூழ்ச்சிகளால் தான் வீழ்த்தப்பட்டு அடிமைகளாக கிடக்கிறது தமிழ் சமூகம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் அரசியல் செய்து 1 1/2 ஆண்டுகள் மேலாக சிறையில் இருந்தவர் நான். 220 வழக்குகள் போடப்பட்டு ஏராத நீதிமன்ற படிக்கட்டு இல்லை. தொழில் செய்ய முடியாது. கடவுச்சீட்டு இல்லை. ஒரு நாட்டிற்கு செல்ல முடியாது. எல்லாத்தையும் விட்டு என் மொழி, என் இனம், என் மக்கள், அவர்களின் எதிர்காலம், பாதுகாப்பு, நல்வாழ்வு என நின்று வாக்குக்கு காசு கொடுக்காமல் ஒருத்தருடைய ஆதரவும் இல்லாமல் திரள்நிதி திரட்டி கட்சி நடத்தி போராடி போராடி 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்று 1.1 சதவீதத்தில் இருந்து 8.50 விழுக்காடு வாக்குகளை பெற்று தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி. மக்களின் கவனத்தை பெற்று திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ் தேசியத்தின் அரசியலை கட்டி வருகிறோம். கூட்டணி சேராத ஒரே கட்சி நாம் தமிழர் தான். மக்கள் ஓட்டு போடுவதற்காக தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை.
இந்த நிலையில் திடீரென்று வந்து திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று தான் என்று கூறி, மறுபடியும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்றால் கோபம் வருமா? வராதா? தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வந்த கோட்பாடு தான் திராவிடம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் அல்லாதவர் பாதுகாப்பாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்டது தான் திராவிடம். திராவிடம் என்ற ஒன்றே கிடையாது. சங்கி என்றால் கூட நண்பன் என்று பொருள் வரும். திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்று தான் பொருள் வரும். அந்த சொல்லே தமிழ் சொல் கிடையாது. எதையாவது தெரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். காமராஜரை பற்றி 10 நிமிடம் பேசுங்கள். வேலு நாச்சியாரை பற்றி பேசுங்கள். ஆனால் நீங்கள் மொத்தமாக பேச அனுமதிக்கும் நேரம் 10 நிமிடம் தான்.
திருச்சியில் பிரசாரம் செய்வதற்கு 15 நிமிடம் தான் கேட்கிறார்கள். சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். இதில் பேசவும் அவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். வேட்டையாடும் சிங்கமாக இல்லை. வேடிக்கை பார்க்க வரும் சிங்கமாகவும் இல்லை. வேடிக்கை காட்ட வரும் சிங்கமாக உள்ளது. கோட்பாட்டளவில் எதிர்க்கிறேன். உனக்கு நண்பா, நண்பி. எனக்கு தம்பி, தங்கைகள். அவன் எதிர்காலத்திற்கும் நான் போராடி வருகிறேன். பா.ஜ.க. முன் கொள்கை எதிரி. முதலில் உங்கள் கொள்கையை சொல்லுங்கள். தி.மு.க. அரசியல் எதிரி. அப்போ அ.தி.மு.க. அரசியல் உனக்கு எதிரி அல்ல. காங்கிரசும் எதிரி அல்ல. பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றின் வர்ணம் மாறும். ஆனால் அவர்களின் கொள்கை மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.
பேச்சை மனப்பாடம் செய்வதற்காகவே சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
* தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
* மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் 15 நிமிடங்கள் தான் உரையாற்ற அனுமதி கேட்டுள்ளனர்.
* சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது, திராவிடம் என்றால் திருடன் என்றே வருகிறது.
* த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.
* ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படை கூட விஜய்க்கு தெரியவில்லை.
* விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்.
* தி.மு.க அரசியல் எதிரி என்றால் அ.திமு.க. அரசியல் எதிரி இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான்.
- நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான்.
மதுரை:
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் அவரிடம் நிருபர்கள் எழுப் பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கே: இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்து?
ப: சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்னவோ அப்படித்தான் பா.ஜ.க. இயங்கும். ஆர்.எஸ்.எஸ்.ல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லிவிட போகிறார்களா? அவர்கள் வைத்திருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவரை தவிர இவர் தெரிந்தவராக இருக்கிறார். இதை தவிர இதில் பேச எதுவும் இல்லை.
மரபுப்படி அந்த இடத்திற்கு வருவதற்காக அவருக்கு வாழ்த்துகள். பா.ஜ.க.வின் கொள்கைகளுடன் ஒத்துபோய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தி.மு.க. தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழிதான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித்தன்மை என்ன இருக்கிறது.
குஜராத் கலவரத்தை தி.மு.க. கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள், இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான்.
இல.கணேசன் ஐயாவின் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதையை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன.? மூப்பனார் ஐயாவின் மறைவிற்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை. எல்.முருகன் மற்றும் ஆளுநர் ரவியை கூட அனுப்பி இருக்கலாம். இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று என்ன உள்ளது.
கே: சனிக்கிழமைகளை மட்டும் தேர்ந்தெடுத்து விஜய் பிரசாரம் மேற்கொள்வது குறித்து?
ப: அது அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது.
கே: திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து?
ப: படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.
கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன?
ப: கூட்டத்தை வைத்து கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான். ஊழல் லஞ்சமா, உண்மை நேர்மையா, பிள்ளைகள் வாழ்வதற்கு வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நான் பிள்ளைகள் வாழ நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசுடன் கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60 சதவீதம் கொள்ளை அடித்தால் இவர்கள் 40 சதவீதம் கொள்ளை அடிப்பார்கள் இதுதான் நடக்கப்போகிறது.
கே: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து?
ப: 17 ஆண்டுகளுக்கு முன்பாகவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அப்போது நமக்கு தெரியவில்லை. அதைப் போராடி தான் தடுப்போம், தரையில் எடுத்து முடித்துவிட்டு தற்போது கடலுக்குள் செல்கிறார்கள்.
இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, இதற்கெல்லாம் பயப்படக்கூடாது.
கே: விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்து?
ப: எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
கே: திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து?
ப: அது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக அமையும்.
கே: ஆடு, மாடுகள் மாநாடுகளை தொடர்ந்து அடுத்தகட்ட மாநாடு என்ன?
ப: ஆடு, மாடு மாநாடுகளை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல், எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள்.
- எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள். ஒரு சமூகத்தினர் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றும், ஒரு சமூகத்தினர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள்.
* எங்கள் நிலைப்பாடு எந்த தாத்தா பெயரும் வேண்டாம். எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் வைக்க வேண்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
* சாதாரண குடிமகளான கண்ணகி கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நினைத்தானே அவன் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பெருமை, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.
* நீங்கள் வைப்பதாக இருந்தால் நான் போராடி பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை வைக்க வேண்டும் என்று சண்டை போடுவேன். இல்லையென்றால் நான் வந்தால் வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திவிரமாக தயாராகி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் பலமே இளைஞர்கள்தான் என்பதால் தேர்தலில் அவர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.
இதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று 130 பேரை தேர்தலில் களமிறக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.
தங்களது பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி இளைஞர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து இளம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 130 பேரில் 65 பேர் இளம் பெண்களாக இருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற தேர்தலில் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 134 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியினர் செய்து வரு கிறார்கள். அந்த மாநாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் சீமான் வெளியிட உள்ளார்.
மாநாட்டு மேடையில் இருந்தே தனது தேர்தல் பிரசாரத்தையும் சீமான் தொடங்குகிறார். இதன் பின்னர் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து சீமான் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை சட்டமன்ற தேர்தலில் காட்டி கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
- சீமான் திருச்சி சமயபுரத்தில் கள் இறக்க அனுமதி கோரி பனைமரம் ஏறி போராட்டம் நடத்தினார்.
- தேனியில் கால்நடைகளுக்காக பேசுவேன் என்று ஆடு, மாடுகளுடன் மாநாடு, அதன் பின்னர் மரங்கள் மாநாடு நடத்தினார்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவ பெருமக்களுடன் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
உலக தமிழ் கிறிஸ்தவ இயக்கம் ஏற்பாடு செய்து உ ள்ள இந்த நிகழ்ச்சியில் சீமான் கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் இஸ்லாமிய அமைப்பினர் ஏற்பாடு செய்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தங்களை சிறுபான்மையினர் என ஏன் அழைக்கிறார்கள் என பலரும் எழுப்பிய கேள்விக்கு அவரது பாணியில் புதிய விளக்கம் அளித்திருந்தார். ஏற்கனவே சீமான் திருச்சி சமயபுரத்தில் கள் இறக்க அனுமதி கோரி பனைமரம் ஏறி போராட்டம் நடத்தினார். அதன் பின்னர், தேனியில் கால்நடைகளுக்காக பேசுவேன் என்று ஆடு, மாடுகளுடன் மாநாடு, அதன் பின்னர் மரங்கள் மாநாடு நடத்தினார்.
இதன் மூலம் மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






