என் மலர்
நீங்கள் தேடியது "naam tamilar katchi"
- தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது.
திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடுவதாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோடி மகளிர்க்கு உரிமை தொகை வழங்கி வந்ததாகவும், தற்போது 36 லட்சம் பேரை கூடுதலாக இணைத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
60 வருடங்களாக இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தினமும் ரூ.30 சம்பாதிக்க முடியாத ஒரு நிலையைத் தான் இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. ஆகவே தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி இவர்கள், சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை, வரமாட்டார்கள். மக்கள் அரசியல் வந்தால் இந்த மக்கள் உழைத்து சம்பாதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்தக் கூடுதல் பேருக்கு மகளிர் உரிமை தொகையை ஏன் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை?
அதேபோன்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியையும் பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மக்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என தெரியவில்லை. பத்து லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசாங்கம், ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறது என சொல்லுங்கள்.
பஸ்சில் மகளிருக்கு இலவச கட்டணம், அந்த பணத்தை அவரது தந்தை, சகோதரனிடம் வாங்கிக் கொள்கிறார்கள். தன்மானம் மிக்க தமிழன் தனது தாய் ரூ.ஆயிரத்துக்கு கையேந்தி நிற்பதை ஏற்கமாட்டான்.
இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏன் அக்கறை வரமாட்டேன் என்கிறது. தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையில் ஊழல் நடக்கவில்லை? இடி வந்தால் டாடி, மோடியை பார்க்க ஓடுகிறார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர் ஏன் ஓடிச் சென்றார்.
நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதுவரை முருகன் மீது வராத பாசம் ஏன் இப்போது அவர்களுக்கு வருகிறது. காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா?
அயோத்தி பிரச்சனையை வைத்து அரசியல் செய்தார்கள். இப்போது அங்கு ராமர் கோவில் கட்டி விட்டதால் சர்ச்சை நீங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சி நடக்கிறது.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க. என கருணாநிதி பாராட்டி பேசி உள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம்.
பா.ஜ.க.வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பது தி.மு.க. தான். அவர்கள் வந்து விடுவார்கள் வந்து விடுவார்கள் என பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க தி.மு.க. அரசியல் செய்கிறது.
இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்து நான் பேசினேன். தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்து பேச சொன்னால் பேசுவேன்.
தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியது அப்போது இனித்ததா?
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
- பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'விஜில்' என்ற பிரிவு நடத்திய விழாவில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் பாரதியின் கொள்கை வாரிசு. பாரதியை நிராகரிக்கும் இடத்தில், என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியின் புகழைப் பாட, பாகிஸ்தானுக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறினார்.
இந்நிலையில் RSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
* பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
* எங்கு பேசினேன் என பார்க்காதே, என்ன பேசினேன் என பாருங்கள்.
* பா.ஜ.க. தலைவர்களை தி.மு.க.வினர் புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டி அவர் பதில் அளித்தார்.
- வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
- தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முருகன் சைவக் கடவுளா, இந்து கடவுளா. முருகன் என் ரத்தம், என் இன கடவுள்.
சிவனும் முருகனும் இந்து கடவுளா என என்னுடன் விவாரம் செய்யத் தயாரா?
அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சனை தற்போது தீர்ந்துவிட்டதால் தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர்.
முருகனை கும்பிட வேண்டாம் என யாராவது உங்களை எதிர்த்தார்களா? எதை வைத்து அரசியல் செய்வது என தெரிய வேண்டாமா?
வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தை வைத்து திட்டமிட்டு பிரச்சனை உருவாக்குகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருப்பது மகிழ்ச்சி.
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு முன்னதாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான்தான்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சென்னை புழலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு சீமான் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
* புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருப்பது மகிழ்ச்சி.
* த.வெ.க. தலைவர் விஜய்க்கு முன்னதாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு ரூபாய் காசு கொடுக்காமல், குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம்.
- தேவேந்திர குல வேளாளர் மக்கள் நீண்ட காலமாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து விடுவியுங்கள் என போராடுகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சமூக நீதியும் பஞ்சமர் நில மீட்பும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம். குடும்ப ஆட்சியை அகற்றுவோம். மிகப்பெரிய இரு பதவிகளை குடும்பமே வகித்து வருகிறது. பெரும்பான்மையான சமூகத்தினர் குறைவான அமைச்சர் பதவி வகித்து வருகிறார்கள். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டும் இருந்தால் தாழ்த்தப்பட்டவர்களாக பட்டியலின மக்கள் இருந்திருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் 10 லட்சம் ஏக்கர் நிலமாவது மீட்போம்.
எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியவர்கள் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்ததால்தான் பஞ்சமி நிலங்களை மீட்க முடியவில்லை. தேவேந்திர குல வேளாளர் மக்கள் நீண்ட காலமாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து விடுவியுங்கள் என போராடுகிறார்கள். ஒரு ரூபாய் காசு கொடுக்காமல், குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம். இது தற்குறி கூட்டம் அல்ல. எங்களுக்கு வேண்டியது சலுகைகள் அல்ல. எங்களது உரிமை.
நீண்ட காலமாக சாதி வாரி கணக்கு எடுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தவர் டாக்டர் ராமதாஸ். ஆணை முத்து இல்லை என்றால் இந்த உரிமை கிடைத்திருக்காது..சாதிவாரி கணக்கெடுப்பு தான் சரியான சமூக நீதி .10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டாம். அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுப்பது தான் உண்மையாக சமூகநீதி.
10 நாட்களில் எஸ்.ஐ.ஆர். கொண்டு வரும் போது 10 மாதங்களில் சாதிவாரி கணக்கு எடுப்பை நடத்த முடியாதா? இந்திய துணை கண்டத்தில் சமூக நீதி என்ற வார்த்தையை அதிகம் உச்சரிப்பது திராவிட ஆட்சி தான். இவர்கள் கூட்டனி வைத்துள்ள கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிம் மட்டு மல்ல பிற மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த நாட்டின் முதல் குடிமகள் திரவுபதி முர்முவால் கூட கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள் என்றால் சாதி, மத வேறுபாடுகள்தான்.
சமச்சீர் பாடதிட்டம் இருக்கிறது. ஆனால் சமச்சீரான கல்வி மிகவும்பின் தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு கிடைக்க வில்லை. திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில்.இங்கு ராமராஜ்யம் அமைக்க முயற்சி நடைபெறுகிறது .
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி உளுந்தூர்பேட்டைக்கு லோகேஸ்வரி, கள்ளக்குறிச்சிக்கு நாகம்மாள், சங்கராபுரத்துக்கு ரமேஷ், விழுப்புரத்துக்கு அபிநயா பொன்னிவளவன், திண்டி வனத்துக்கு பேச்சுமுத்து, மயிலத்திற்கு விஜய்விக் ரமன், செஞ்சிக்கு கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
- தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை
- மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.
கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.
அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.
மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் மாநாடு நடைபெற்றது.
தண்ணீர் மாநாட்டில் பேசிய சீமான், "கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. மக்களின் வாக்கு தரத்தை மாற்ற நினைக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு யாரும் போட்டியில்லை.
தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை. ரத்தநாளம் போன்றது ஆறுகள்; அதில், அணை கட்டுவது ஸ்டோக்குக்கு ஒப்பானது. மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
- சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
- மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
பூதலூர்:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.
கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.
அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.
மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நாளை மாலை (15-ந் தேதி) தண்ணீர் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள திறந்தவெளி திடல் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.
திடலின் முகப்பில் மாமன்னன் கரிகாலன், விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலின்முகப்பு பகுதியில் ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி, பல்லுயி ர்க்கும் பகிர்ந்தளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் மாநாட்டு திடலில் இருபுறங்களிலும் ஒரு பகுதியில் மாமன்னன் கரிகாலனின் சிறப்புகளை விளக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு பகுதியில் காவிரி ஆறு பாய தொடங்கும் குடகு முதல் பூம்புகார் வரையிலான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் இன்று திருச்சி வருவார் என்று கூறப்படுகிறது.

மாநாட்டு திடலின் முகப்பு தோற்றத்தை காணலாம்.
நாளை மாலை 4 மணிக்கு பூதலூரில் தொடங்கும் தண்ணீர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இந்த மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாநாட்டு திடல் பகுதியில் திருவையாறு தொகுதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள மாமன்னன் கரிகாலன் மற்றும் காவிரி ஆற்றின் வரலாற்று காட்சிகளை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளன. இவற்றை அங்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் காவிரி படுகையின் தலைப்பு பகுதியான பூதலூரில் நடைபெற உள்ள இந்த தண்ணீர் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
- நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
- நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு.
- கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
சென்னை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன, இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன.
இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 'தண்ணீர் மாநாட்டை' நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும்.
"ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு" என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
- நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை வறுவல் என விதவிதமான அசைவ உணவுகள் சீமான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு கட்சியினருக்கு பரிமாற்றப்பட்டது. இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சூடாக பரிமாறப்பட்ட பிரியாணி உள்பட அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டனர்.
கைதேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு சீமான் வீட்டு வளாகத்திலேயே அசைவ உணவுகள் சமைக்கப்பட்டன. அதனை கல்யாண வீடுகள் போன்று சேர், டேபிள்கள் போட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது.
- மதுரையில் காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
- கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவலியைத் தருகின்றது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று நடிகர்களைக் கொண்டு வெற்று விளம்பரம் செய்துவிட்டு, கல்விக்கண் திறந்த கடவுள் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தைச் செயற்பட முடியாதபடி முடக்குவது வன்மையானக் கண்டனத்துக்குரியது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு அவருடைய நினைவாக 1978 ஆம் ஆண்டு காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. 18 பாடசாலைகளுடன், 72 திணைக்களங்களை கொண்டுள்ள இப்பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும், 7 மாலைநேரக் கல்லூரிகளையும் உறுப்பு கல்லூரிகளாகக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியையும் பெற்றுத் திகழ்வதோடு, 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இளம்பிள்ளைகள் உயர்கல்வி பயில வாய்ப்பளித்து பல இலட்சம் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது.
அத்தகு சிறப்பு வாய்ந்த காமராசர் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாகக் கடும் நிதி நெருக்கடி காரணமாக முற்று முழுதாக முடங்கிப்போயுள்ளதுதான் பெருங்கொடுமையாகும்.
காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை.
பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு ஆண்டுக்குமான தணிக்கை அறிக்கைகள், நிதி நெருக்கடிகள் ஏற்பட பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றில் முதன்மையானது 17.05.1999 நாளிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குத் தரப்படும் சம்பளம் மற்றும் படிகள் ஆகியன தமிழ்நாடு அரசால் ஈடு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை.
கடந்த 2007 மற்றும் 2008 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசால் பல்கலைகழகத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை 7 கோடியே 74 லட்சம். அது கடந்த 17 ஆண்டுகளில் அதிகரித்து 2023-24 ஆம் நிதி ஆண்டுகளில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவைத்தொகை தமிழ்நாடு அரசால் தரப்படவில்லை. ஒருவேளை நிலுவைத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருந்தால் இன்றைய நாளில் 500 கோடி அளவிற்கு உபரித்தொகை பல்கலைக்கழகத்தில் கையிருப்பாக இருந்திருக்கும் எனவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
ஆனால், நிலுவைத்தொகையைத் தராமல் இருப்பதற்கு, பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் விதிமீறல் நடைபெற்றதே காரணம் என அரசு கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றபோதே அதனை தமிழ்நாடு அரசு தடுக்கத்தவறியது ஏன்? பணி நியமனத்தில் முறைகேடு என்றால் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வழங்க வேண்டிய நிதியை நிறுத்துவது எவ்வகையில் நியாயமாகும்?
மேலும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்விதுறை 2010 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 50,000 மாணவர்களைக் கொண்டிருந்தது, அதே துறை 2023 ஆம் ஆண்டில் வெறும் 6000 மாணவர்களையேக் கொண்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் இந்திய ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூரக் கல்வியானது அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற புதிய விதியை நிர்ணயித்து, பல்கலைக்கழகத்தில் அதிகளவில் மாணவர் சேர்க்கையைத் தடுத்து நிறுத்தியதேயாகும். இதனால் பல்கலைக்கழகத்தின் வருமானம் பெருமளவு குறைந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956 இன் படி, அவ்வாணையத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று பல்கலைக்கழகங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதாகும். ஆனால், இந்திய ஒன்றிய அரசின் புதிய விதிமுறை அதற்கு நேரெதிராக நிதியைக் குறைக்கச் செய்து, மாணவர்களின் கல்வியை முடக்கியுள்ளது. இதற்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசே முழுக்காரணமாகும்.
பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகத்தின் சிறகுகளை வெட்டாவிட்டால், காமராஜர் பல்கலைக்கழகம்
பத்து மடங்கு கூடுதல் நிதியைத் தொலைதூரக் கல்வித்துறையின் மூலம் ஈட்டியிருக்க முடியும். பல்கலைக்கழகமும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த தவறியதோடு, பல்கலைகழகப் பணியாளர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகளையும், பணிவிதிகளையும் ஏற்படுத்த தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியமும் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கெட மற்றுமொரு காரணமாகும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இது தவிர பட்டதாரிகளுக்கான 15 உறுப்பினர் பதவிகளும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளன. உதவிப்பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல், தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மாணவர்களின் உயர்கல்வியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை.
பாஜக ஆளுநர் - திமுக அரசின் மோதல் போக்கு தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முற்று முழுதாகச் சீரழித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களை இத்தகைய மோசமான நிலையில் வைத்துவிட்டு கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என வீண் தற்பெருமை பேசுவது வெட்கக்கேடானது.
பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டு முதல்வரே செயல்படுவார் எனும் நிலையை எட்டிய பிறகும் திமுக அரசு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைச் சீர்படுத்தி, நிதிநிலைமையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு உயர் கல்வியிற் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ள முறையா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு மதுரை காமராசர் பல்கலைகழத்திற்குத் தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கி மூடப்படும் நிலையிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும். மேலும், சீரழிந்துள்ள தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தையும் சீரமைத்து, நிதி நிலைமையை மேம்படுத்தி, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார்.
- இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.
அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" என்ற பெயரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார். இது தொடர்பாக சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரோடும் உறவோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.
தீய ஆட்சி முறை ஒழிய தூய ஆட்சி முறை மலர கேடுகெட்ட பணநாயகம் ஒழிய மாண்புமிக்க ஜனநாயகம் மலர அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி எப்போதும் வெல்லும். நமது வெற்றி அதை சொல்லும். திருச்சியில் திரள்வோம். தீந்தமிழ் இனத்தீரே.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களை காக்கும் வகையில் மலைகள், மரங்களின் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்திய சீமான் தற்போது மக்களின் மாநாட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.






