என் மலர்

    நீங்கள் தேடியது "naam tamilar katchi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
    • புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன்.

    திருவள்ளூர்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இந்த நிலையில் அவர் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் வீரலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நடிகை புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன். வீரலட்சுமி யார் என சீமானுக்கு தெரியாதா? சீமானுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட்டம் இருக்கிறது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.
    • இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நேற்று இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் பல குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக இருப்பது மதுப்பழக்கம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அவசியமற்றது. ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தி.மு.க. அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு குடும்ப சொத்து. கள்ளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் சாராய ஆலைகள் முடங்கிவிடும் என்பதால் கள்ளுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.

    2024-ம் தேர்தலில் வென்று மீண்டும் மோடி வந்தால் இந்தியாவே இருக்காது. காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நாட்டை விற்பதில் போட்டி. இதில் மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ் போட்டியிடுவார் என அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான், தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிப்பு.
    • தி.மு.க. வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை நிறுத்தாது என்றும் சீமான் தகவல்.

    நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி இவ்வாறு செய்தால், நிச்சயமாக நான் தி.மு.க.வுக்குத் தான் ஆதரவு கொடுப்பேன் என்று தெரவித்து இருக்கிறார்.

    "2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுப்படுகிறது. ஒருவேளை ராமேஸ்வரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். பிரதமர் மோடியை எதிர்த்து, தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தினால், இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது."

    "பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவிக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் எங்களுக்கு இருப்பது பங்காளி சண்டை மட்டும் தான்."

    "பா.ஜ.க. வெறுப்பு அரசியலை பேசி வருகிறது. எப்போதும் இஸ்லாமியர், கிறிஸ்தவரை மட்டுமே எதிர்த்து பேசுவது என்பது விருப்ப அரசியலா? வெறுப்பு அரசியல் தானே. நான் வெறுப்பு அரசியலை பேசுகிறவன் அல்ல. தேசிய இனத்தின் உரிமைக்காக, தெளிவான புரிதலோடு நிற்பவன்," என்று சீமான் தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேற்கு வங்கத்திலேயே எட்டு கட்டமாக தேர்தல் நடத்தும் நீங்கள் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவீர்கள்.
    • காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் வேறு வேறு கட்சிகள் தான். ஆனால் அவர்களது கொள்கைகள் ஒன்றுதான்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி, எல்லாமே பாரதிய ஜனதா தான். அதனால் வெறுப்பு அரசியலை பற்றி அவர்கள் பேசக்கூடாது. அவர்கள் செய்வது என்ன விருப்பு அரசியலா? மொழி, மதம், சார்ந்து பிரித்து இருப்பவர்கள் அவர்கள் தான்

    திராவிடத்தை ஒழிக்க வேண்டுவது என்பது என் எண்ணம் அல்ல. தமிழ் தேசியத்தை வளர்ப்பது என் எண்ணம். பெருமை பீத்துவது போல சந்திரனுக்கு, சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறேன் என்கிறார்கள். முதலில் இங்கே இருப்பவர்களுக்கு நீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

    மேற்கு வங்கத்திலேயே எட்டு கட்டமாக தேர்தல் நடத்தும் நீங்கள் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவீர்கள். காஷ்மீரில் இருந்து ஒரே ரோடு ஏற்றுக்கொள்கிறேன், ஒரே கொள்கை ஏற்றுக்கொள்கிறேன். ஒரே நீர் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு முன்னால் கர்நாடகாவில் இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு வாங்கி கொடுங்கள்.

    2024-ல் எனக்கு 4 பேரும் எதிரி தான் (திமுக, பாஜக, அதிமுக, காங்கிரஸ்). காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் வேறு வேறு கட்சிகள் தான். ஆனால் அவர்களது கொள்கைகள் ஒன்றுதான்.

    ராமதாஸ், திருமாவளவன் போன்ற ஆற்றல்கள் இந்த திராவிட ஆற்றல்களை எதிர்த்து சண்டை செய்ய இயலாமல் சமரசம் செய்து கொண்டு விட்டனர். தனித்து நிற்கும்போது ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களது வாக்கு என்ன? இந்தக் கட்சிகளோடு கூட்டணி வைத்த பிறகு அவர்களது வாக்கு எவ்வளவு என்பதை பார்த்தால் குறைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2 நாட்களாக தாங்கள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில் நான் காத்திருப்பதாக (ஐ யம் வெயிட்டிங் ) என்றார்.

    மேலும் அவர் கூறுகையில் மக்களுக்காக போராடவா? அல்லது விஜயலட்சுமி செயல்கள் பின்னாடி செல்வதா? என்னுடைய தகுதியை தீர்மானிப்பது யார்? என் மீது குற்றச்சாட்டு வைப்பவர் யார்? விஜயலட்சுமி என்ன ஆங் சாங் சூகியா, ஐரோம் சர்மிளாவா? இந்த விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி டப்பிங்கா? என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
    • தற்சார்பு பொருளாதாரம் குறித்து மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடக்கிறது.

    திருப்பூர்:

    நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூர் வருகை தந்தார்.

    காலை 9 மணிக்கு திருப்பூர் கே.செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் கட்சி கொடியேற்றி வைத்தார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா ஜே.மனோகர், திருப்பூர் மண்டல செயலாளர் வான்மதி வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    பின்னர் தாராபுரம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பல்லடத்தில் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசுகிறார்.

    இன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் யூனியன் மில்ரோடு ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் தற்சார்பு பொருளாதாரம் குறித்து மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடக்கிறது. இதில் அவர் சிறப்புரையாற்றுகிறார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் திருப்பூர் நடராஜா தியேட்டர் அருகே உள்ள தெற்கு ரோட்டரி மகாலில் நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்லாமும், கிறிஸ்துவமும் அநீதிக்கு எதிராக பிறந்தது.
    • மதம், சாதி என எல்லா அடையாளங்களையும் விட மொழி, இனம் தான் பெரும்பான்மை.

    சென்னை:

    சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு கணக்கில் அடங்காத மது, ஊழல்-லஞ்சம், கொலை-கொள்ளை, கனிம வளச்சுரண்டல் நடக்கிறது. இதையெல்லாம் சகித்து கொள்பவன் யார்?.

    இஸ்லாமும், கிறிஸ்துவமும் அநீதிக்கு எதிராக பிறந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க. என்று மாறி மாறி நடைபெறும் அநீதியான ஆட்சியை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?.

    நான் 2016, 2019-ம் 2021-ம் ஆண்டு தேர்தலில் நின்றேன். ஆனால் நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை. நான் கோபப்படவில்லை. ஆனால் திரும்பவும் நீங்கள் இதே தவறை செய்வீர்கள் என்று தெரியும் போது எனக்கு கோபம் வருமா, வராதா?. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சி செய்த ஒரே ஒரு நன்மையை சொல்ல முடியுமா?

    மதம், சாதி என எல்லா அடையாளங்களையும் விட மொழி, இனம் தான் பெரும்பான்மை.

    எனவே இங்கே இருக்கிற இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள். எனவே இனிமேல் சிறுபான்மையினர் என்று யாராவது சொன்னால், அவர்களை அடிப்பேன். நான் வெறி கொண்டு விடுவேன்.

    கட்சிகளில் சிறுபான்மை அணி என்று இருப்பதையும் வெறுக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மை என்று சொல்வதை எதிர்க்கிறேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது தவறு. மதம் மாறிக் கொள்ள கூடியது. மொழி, இனம் மாறிக் கொள்ள முடியாது.

    இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, போன்றவர்கள் முன்பு பெரும்பான்மை. இப்போது சிறுபான்மையா?.

    இளையராஜா பெரும்பான்மை, அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மை என்பது போன்ற பைத்தியகாரத்தனம் உலகில் வேறு எங்கேயாவது இருக்கிறதா?.

    நாம் தமிழர் கட்சியில் சிறுபான்மை அணி என்பதே கிடையாது. எல்லா சாதி, மதத்தையும் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் கொடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
    • விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம்.

    மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.

    ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்.

    அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது.

    விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும்.
    • இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும்.

    புதுக்கோட்டை :

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதில் விதிமுறைகள் இருப்பது மிகப்பெரிய கொடுமை. தேர்தல் நேரத்தில் அறிவித்தபோது விதிமுறைகளை அறிவிக்கவில்லை. அப்போது ஏன் சொல்லவில்லை.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை காங்கிரஸ், பா.ஜனதா என 2 கட்சியும் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். இதை தெரிந்து தான் அரசியல் கட்சியினர் ஆதரித்தனர்.

    தமிழ் தேசிய கொள்கையை விட்டு வந்தால் எங்களுடன் இணைந்து செயல்பட தயார் என பா.ஜனதா எச்.ராஜா கூறியுள்ளார். அதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வியடைந்ததாக திருமாவளவன் கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் தெரியும்.

    பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி பேசுவதை விட்டுவிடலாம். ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்ய மத்திய அரசு நினைத்தால் கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும்.

    கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததற்கு காரணம் பணிச்சுமை தான். 6 மாதமாக அவருக்கு விடுமுறை கொடுக்கவில்லை. எனக்கு அவரை தெரியும். நல்ல அறிவாளி, சமூக பற்றுக்கொண்டவர், எல்லாரையும் நேசிக்க கூடியவர். துணிவான அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய கோழைத்தனமானவர் அல்ல. அவரது தற்கொலை அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளது.

    டி.ஐ.ஜி. அளவில் உள்ளவர்களே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிற நிலை இருக்கிறபோது சாதாரண போலீசாரின் நிலையை கூறவா வேண்டும். எனவே போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம்.

    தமிழ் சினிமாவில் பட்டியலின மக்களின் உரிமை பற்றி பேசப்படுவதை நான் வரவேற்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்.

    சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் நான் உடைப்பேன். சென்னையில் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையின் கை பறிபோனதில் நிவாரணம் வழங்காமல் முறையற்ற பதில் கூறுவது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.
    • நமது மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள் விற்பதற்கு அனுமதி கொடுத்தால் டாஸ்மாக் வியாபாரம் சரிந்து விடும் என்பதற்காக அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது.

    மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இரண்டு அரசுகளுமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறது.

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் அறிவித்து வருகிறார்கள். எல்லா தலைவர்களும் பேசுவார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்களுடனே போய் கூட்டணி வைத்திருப்பார்கள்.

    மதுக்கடைகளை மூடினால் தான் கூட்டணி வைப்பேன் என்று கூறுவதற்கு தலைவர் இருக்கிறார்களா?. டாக்டர் ராமதாஸ் தான் அது போல் போராடினார். ஆனால் மறுபடியும் அவரும் கூட்டணி வைக்கும்போது மதுக்கடை பற்றி வாய் திறக்கவில்லை. இதனால் தான் நான் தனியாகவே போட்டியிடுகிறேன்.

    கம்யூனிஸ்டு எங்கு இருக்கிறது? அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக்களமாக மாறி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வை விட பெரிய கட்சி நான் தான். இங்கு அவர்கள் கட்சி தனித்து நின்று என் கட்சியை விட அதிக ஓட்டு வாங்குமா?.

    தேர்தலை நோக்கி தான் வேலை செய்கிறேன். தற்போது ஒரு பயணம் செல்கிறேன். 3 மாதம் கழித்து மீண்டும் சுற்றுவேன். மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

    நமது மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேசத்தை பிரிக்க மறுக்கிறார்கள். ஏனெனில் மத்திய அரசின் ஓட்டுகள் பிரிந்து விடும் என்று நினைக்கிறார்கள்.

    பா.ஜ.க. மீண்டும் மீண்டும் வரும். நாம் மாண்டு மாண்டு போக வேண்டியது தான். பா.ஜனதா இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் நாடு சுடுகாடாகிவிடும். நாட்டு நலன் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும். காங்கிரஸ் தலைமையில் மற்ற தலைவர்கள் சேர்வதற்கு நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அந்தந்த மாநில கட்சிகள் வலுப்பெற்றால் தான் இந்தியாவை யார் ஆள்வது என்று ஒன்று கூடி கூட்டாட்சியை கொண்டு வர வேண்டும்.

    நான் பணத்தை நம்பவில்லை. நான் பிறந்த இனத்தை நம்பி தேர்தலில் நிற்கிறேன். எனது கோட்பாடுகளை ஏற்பவர்களுடன் கூட்டணி வைப்பேன். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற என்னுடைய கருத்தை தான் நடிகர் விஜய் வலியுறுத்துகிறார்.

    வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்பதற்கு 10 ஆண்டுகள் தடை என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தால் அனைவரும் பயப்படுவார்கள். அப்போது தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது நிற்கும்.

    தமிழகத்திலேயே நடிகர் விஜய் தான் முதன்மையான நடிகர் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர். தமிழர்களுக்கு கோடிக்கணக்கான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு போராடுவதற்கு ஏராளமான தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.

    நடிகர் விஜய் வரட்டும் வரவேற்போம். எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. நடிகர் விஜய் தான் என்னுடன் சேர்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார்.
    • பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அரசாங்கமே டாஸ்மாக்கை திறந்து வைத்துள்ளது. தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவத்தில் முதலில் மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறினர். பின்னர் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இதுவரை சரியான உண்மை தகவல் இல்லை.

    தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை.

    பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

    அவர்கள் தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள். அதற்காக தமிழ், தமிழ்நாடு என கூறி வருகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்கு உள்ளே வைக்க வேண்டியது தானே? ஏன் வெளியே வைத்துள்ளார்கள். செங்கோல் வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp