என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்? - சீமான் விளக்கம்
- பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
- பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'விஜில்' என்ற பிரிவு நடத்திய விழாவில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் பாரதியின் கொள்கை வாரிசு. பாரதியை நிராகரிக்கும் இடத்தில், என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியின் புகழைப் பாட, பாகிஸ்தானுக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறினார்.
இந்நிலையில் RSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
* பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
* எங்கு பேசினேன் என பார்க்காதே, என்ன பேசினேன் என பாருங்கள்.
* பா.ஜ.க. தலைவர்களை தி.மு.க.வினர் புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டி அவர் பதில் அளித்தார்.






