search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "false"

    என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். #pollachiissue #PollachiJayaraman

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த புகாரை கொடுக்க சொல்லிய பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதுவும் இதுவரை வெளியிடப்பட வில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் வீடியோ வெளியிட்டார். அதுவும் மறைக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோமே தவிர, எங்களால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    எனது மகன்கள் வெளிநாடு தப்பிச்சென்று விட்டனர் என்று வதந்தி பரப்பி உள்ளனர். அவர்கள் வெளிநாடு செல்லவில்லை. இங்குதான் எப்போதும் போல தங்களின் பணியை செய்து வருகிறார்கள். எனவே எங்கள் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #pollachiissue #PollachiJayaraman 

    ×