search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollachi jayaraman"

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன.
    • புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோல்டன் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் திமுக., ஆட்சியில் எங்கேயாவது ஒரு வீடாவது கட்டிக் கொடுத்திருக்கிறார்களா? அதுமட்டுமல்ல , அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். அதையும் நிறுத்திவிட்டார்கள்.

    திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,அரசு வட்டியில்லா கடன் 200 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆட்சி யில் தொழில் முடங்கி கிடக்கிறது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி தி.மு.க., ஆட்சி. எப்போது ஸ்டாலின் வந்தாலும் அந்த ஆட்சியினுடைய அலங்கோலத்தை மக்கள் அனுபவிக்கிறோம்.

    ஏழை எளிய மக்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 450 டாக்டர்களையும் உருவாக்கியது அ.தி.மு.க.,தான். இவ்வாறு அவர் பேசினார்.

    • கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.

    திருப்பூர்:

    மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.

    பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    திருப்பூர்:

    திருப்பூர் சூசையாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் 4½ ஆண்டு காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அதற்கு விடை தருகிற நாள்தான் பிப்ரவரி 27ந் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போகிற நாள் தான் பிப்ரவரி 27. அதன் பிறகு தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். #pollachiissue #PollachiJayaraman

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த புகாரை கொடுக்க சொல்லிய பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதுவும் இதுவரை வெளியிடப்பட வில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் வீடியோ வெளியிட்டார். அதுவும் மறைக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோமே தவிர, எங்களால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    எனது மகன்கள் வெளிநாடு தப்பிச்சென்று விட்டனர் என்று வதந்தி பரப்பி உள்ளனர். அவர்கள் வெளிநாடு செல்லவில்லை. இங்குதான் எப்போதும் போல தங்களின் பணியை செய்து வருகிறார்கள். எனவே எங்கள் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #pollachiissue #PollachiJayaraman 

    பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். #pollachijayaraman #pollachimolestation #mkstalin
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் அதிமுக, இவ்வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

    பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறது. 

    இந்நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேச தயாராக இருக்கிறார்கள்.  

    குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை. அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தஒரு விசாரணைக்கும் நானும், என்னுடைய குடும்பமும் தயார் என கூறியுள்ளார்.  #pollachijayaraman #pollachimolestation #mkstalin
    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. உறுதியாக வரும். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். #pollachijayaraman #admk #dmdk

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசிடம் இருந்து தொடர்ந்து நிதிபெற்று தந்து பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    மருத்துவமனை விரி வாகத்திற்காக 5 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.10.50 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை செவ்வாய்கிழமை நடைபெற்றது.

    பூமிபூஜையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடங்கி வைத்தார். மகேந்திரன் எம்.பி., முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப் பினர்கள் ஜேம்ஸ்ராஜா, நீலகண்டன், அதிமுக நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூமிபூஜையின்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது,

    பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு என அனைத்து சிகிச்சை பிரிவுகளும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறை, பழனி, தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றார்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. உறுதியாக வரும். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி. தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த காலங்களில் தி.முக. வை கடுமையாக விமர்சித்துள்ளன.

    இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தன. ஆனால், தற்போது, திமுகவுடன் அதே கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது எப்படி என்று தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார். #pollachijayaraman #admk #dmdk

    ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். #pollachijayaraman #Jayalalithaa

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்க பணத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது-

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது.

    தற்போதுள்ள ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் ரூ. 1000-மும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் காயத்ரி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க. நிர்வாகிகள் அக்னீஸ் முகுந்தன், அருணாசலம், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachijayaraman #Jayalalithaa

    எங்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அ.தி.மு.க மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். #byelection #pollachijayaraman #gajacyclone

    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கோவில்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி 23 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களுக்கு அவர்பேட்டியளித்த போது கூறியதாவது:

    சத்துணவு திட்டத்திற்கு கொள்முதல் செய்ததில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை, எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பின் அதன் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் ஏதும் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் குற்றம் சாட்டுவது அபத்தமானது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் முகாமிட்டு சிறப்பாக பணியாற்றிக் கொண்டுள்ளனர். முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க மீட்பு பணிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க தொண்டர்களும் முகாமிட்டு சிறப்பாக செய்துகொண்டுள்ளனர்.

    எங்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அ.தி.மு.க மிகப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கிணத்துக் கடவு தாசில்தார் சங்கீதா, காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் தலைவர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் சின்னகண்ணன், அ.தி.மு.க நிர்வாகி டி.எல்.சிங், தண்டபாணி ,தாமரை ஈஸ்வரன், வினாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #byelection #pollachijayaraman #gajacyclone

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எக்கு கோட்டை எனவே அங்கு அதிமுக தான் வெற்றி பெரும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். #pollachijayaraman

    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவில் தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாயநலகூடத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமைதாங்கி குத்துவிளக்கேற்றி சமுதாய வளைகாப்பை தொடங்கி வைத்து 120 பெண்களுக்கு சேலை,பூ,மஞ்சள் கயி,பழம் வளையல், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களைவழங்கினார்.

    கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டி மடைசண்முகம் ,திட்ட அலுவலர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி வரவேற்று பேசினார். பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறி கொள்வது அவர்களின் கடமை.

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எக்கு கோட்டை எனவே அங்கு அ.தி.மு.க வேட்பாளர் யார் போட்டியிட்டாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அந்த வெற்றியை ஜெயலலிதா காலடியில் சமர்பிப்போம். தி.மு.க ஆட்சியில் என்னென்ன குறைபாடுகள் , குற்றச்சாட்டுகள் இருந்ததோ அதை எல்லாம் இன்றைக்கு எங்கள் மீது சுமத்த பார்க்கிறார்கள்.

    தி.மு.க.வினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரம் கிடையாது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு எங்கள் மீது ஒவ்வொரு அம்பாக எய்து பார்க்கிறார்.அம்புகள் எதுவும் எங்களைதாக்க முடியாது. அது மீண்டும் தி.மு.க . வினரையே தாக்கும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியினபோது கிணத்துக் கடவு பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் மூர்த்தி, மாவட்டமகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள தேவராஜ் , தாமரை ஈஸ்வரன், சண்முகம் , பிரபு, தங்கராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர். #pollachijayaraman

    மழைக்காலங்களில் அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். #pollachijayaraman #rainflood

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மழை வெள்ள எச்சரிக்கை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சி.மகேந்திரன் எம்.பி., வால்பாறை தொகுதி கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் காயத்திரி, பொள்ளாச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், கோஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், ஒன்றியச்செயலாளர்கள், சக்திவேல், கார்த்திக் அப்புச்சாமி, தம்பு, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால் பாறை கீழ் பகுதிகளை சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வரு வாய்த்துறையினர், மின்வாரியம், குடிநீர்வடிகால்வாரிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்கேற்ற அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தனர். மேலும், மழை பாதிப்புக்கு தேவையான உதவிகள் குறித்தும் கூறினர்.

    அனைத்து அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது-

    தென்மேற்கு பருவமழை கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளான வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுப்பகுதிகளில்தான் அதிகம் பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சில பள்ளிகள் மழைக்கு ஒழுகுவதாகவும், ஜன்னல் களுக்கு கதவுகள் இன்றி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் புகார் உள்ளது.

    இதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள சத்துணவுகூடங்கள், சமையல் அறைகள் போன்றவையும் கண்காணிக்கப் பட வேண்டும். சில இடங்களில் சமையல் அறைகள் சிதலமடைந்து சமைக்க தகுதியற்று இருப்பதாக தெரிகிறது. அங்கன்வாடி மையங்கள், ரேசன்கடைகள் போன்றவை முக்கியமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

    இந்த கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால், உடனடியாக அருகில் உள்ள வேறு அரசு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இதை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும், கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும், ஆழியாற்றில் யாரையும் குளிக்க அனுமதிக்கூடாது, மாசாணியம்மன் கோவில் பின்புறம் உள்ள உப்பாற்றில் குளிக்க தடை விதிக்க வேண்டும், நெச வாளர்கள் மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவு வேண்டும்.

    மழையில் இடிந்த வீடுகளுக்கு உடனடியாக ரூ.5000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும், வீடுகள் இடிந்து சேதமானதில் ரேசன்கார்டு, ஆதார்கார்டு போன்றவை சேதமடைந்திருந்தால் அடையாள அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும். அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர், ஜேம்ஸ்ராஜா, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #pollachijayaraman #rainflood

    ×