search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admission"

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

    • ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள்.
    • 6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. வருகிற 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முதல் வகுப்பு, 6-ம் வகுப்புகளில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர். 5 நாட்களில் 60 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் பெற்றோர் குவிகிறார்கள். இந்த பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதால் எவ்வித செலவும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.

    குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்க்க அலைமோதுகிறார்கள். விண்ணப்பம் கொடுக்க தொடங்கிய முதல் நாளில் பெற்றோர் குவியத் தொடங்கினர்.

    ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள். விண்ணப்ம் வாங் குவதற்கு நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அசோக் நகர் மேல் நிலை பள்ளியில் குறிப்பாக 6-ம் வகுப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். அப் பகுதியில் உள்ள மெட்ரிக் குலேஷன், தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவர்கள் இங்கு சேருகின்றனர் என்றார்.

    இந்த பள்ளியில் 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவிகள் முழு அளவில் தேர்ச்சி பெறுவதால் பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.

    அரசு பள்ளிகள் என்றாலே தரம் இருக்காது, கட்டமைப்பு வசதி இருக்காது என்ற பொதுவான பார்வைக்கு மத்தியில் அசோக்நகர் அரசு மகளிர் பள்ளி மட்டும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அலைந்து திரிகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
    • நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. இதற்காக ஏற்கனவே ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது.

    மேலும் பக்தர்களுக்கு 4 லட்சம் இலவச தரிசன டோக்கன் வழங்க விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

    திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்களில் இன்று மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

    இதன் காரணமாக நாளை முதல் திருப்பதியில் நேரடி இலவச தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இதற்காக மலை அடிவாரத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களின் ஆதார் அட்டை மற்றும் தரிசன டோக்கன்களை சரி பார்த்து மலைக்கு அனுப்பி வைப்பார்கள்.

    9 மையங்களிலும் தரிசன டோக்கன் தீரும் வரை பக்கர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.

    அந்த டோக்கனில் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

    தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. இதனால் பக்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக திருப்பதிக்கு வருவார்கள் .

    டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி உள்ளதால் கீழ் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

    டோக்கன் வழங்கப்படும் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.

    இன்று வழக்கம் போல நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நாளை முதல் டோக்கன் இல்லாத பக்தர்கள் அனுமதிக்க படமாட்டார்கள். நேரடி இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் 9 மையங்களில் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். அந்த இடங்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை பெறலாம்.

    பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்சில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உள்ளன.

    நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.

    • விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர்.
    • மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான ‘அ' என்னும் எழுத்தை எழுதினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ' என்னும் எழுத்தை எழுதினர். மழலையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாடப்புத்தகங்களை மழலையர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.

    • 9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
    • 10-வது நாளான விஜயதசமி அன்று “அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா” நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த வருட நவராத்திரி விழா 15-ந் தேதி முதல் நேற்று வரை கொண்டாடப்பட்டது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு படிகளில் கொலுமேடை உருவாக்கப்பட்டது.

    நவராத்திரி பூஜையை மேலும் அழகாக்கும் வகையில் பள்ளியில் உள்ள லோட்டஸ், மார்னிங் குளோரி, ரைசிங் டைஸீ, சன் பிளவர் எனும் நான்கு அணி மாணவர்களும், இந்தியாவின் நான்கு திசைகளின் முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் பாரம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டு வகைகளை தனித்தனியே அவற்றின் தனித்தன்மை விளக்கும் விதமாக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். மார்னிங் குளோரி அணி மேற்கு இந்திய மாநிலங்களையும், சன் பிளவர் அணி தென்னிந்திய மாநிலங்களையும், லோட்டஸ் அணி வட இந்திய மாநிலங்களையும், ரைசிங் டைஸி அணி கிழக்கு இந்திய மாநிலங்களையும், மையமாக வைத்து அவற்றின் பாராம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் தோன்றிய விதம், சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியதோடு அவற்றை அணி மாண வர்களே மாணவர்களுக்கும் கொலுவை காண வந்தவர்களுக்கும் விளக்கிக் காட்டினர்.

    மேலும் ஆசிரியைகளும், கொலுவினை தினமும் வித்தியாசமாகக் காட்டும் விதத்தில் அவற்றினை அலங்காரப்படுத்தியதும், அந்தந்த நாளுக்குரிய கோலங்கள், மலர்கள், பிரசாதங்களை அவர்களே தயார்செய்து வந்து அன்றாட பூஜையை அந்நாட்களுக்குரிய வண்ண உடை உடுத்தி, மாண வர்களோடு இணைந்து வழிபாடு செய்தனர்.

    9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.10-வது நாளான விஜயதசமி அன்று "அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா" நடைபெற்றது. அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உடன் வாழை இலை, பச்சரிசி, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தார்.

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 200-பேர் படிக்கும் மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவை பெற்றோர்-மாணவர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னர் தமிழிசை மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    தேசிய மருத்துவ கமிட்டியின் பொது அறிவிப்பின்படி இளநிலை மருத்துவ கல்லூரியின் இயக்குநர் சம்பு ஷரன் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மாநில மற்றும் யூனியன் பிரதே சங்களால் 30.09.2023 பிறகு நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வை தகுதியற்றது எனக் கூறி நிராகரித்து ள்ளது.

    புதுவை சுகாதாரத்துறை க்கும் மற்றும் சென்டாக் நிர்வாகத்திற்கும் பலமுறை எங்கள் அமைப்பின் மூலம் மருத்துவ கலந்தாய்வை காலத்தோடு நடத்திட வலியுறுத்தி மனு அளித்தி ருந்தோம்.

    புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4-ந் தேதி 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மற்றும் 14-ந் தேதி மாப்பாப் கலந்தாய்வு நடத்தி அரசு ஒதுக்கீட்டில் 50-க்கு மேற்பட்ட மாணவர்களும் மற்றும் நிர்வாக மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 200-பேர் படிக்கும் மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே காலதாமதமாக நடைபெற்ற கலந்தாய்விற்கு மத்திய அரசையும், மத்திய கலந்தாய்வு கமிட்டியையும் அணுகி உரிய அனுமதி யினைப் பெறவேண்டும். மேலும் இது உச்சநீதி மன்றத்தின் வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் 30.09.2023-க்குள் அனைத்து கவுன்சிலையும் முடித்துக் கொ ள்ள வேண்டும் என அறிவித்து ள்ளதால் புதுவை அரசும், உச்ச நீதிமன்றத்தினை அணுகி காலதாமதமாக சேர்க்கைப் பெற்ற மாண வர்களின் சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
    • மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் இளநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய பாடங்களும், தமிழ், ஆங்கிலம், வரலாறு பொருளாதாரம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், வணிகவியல், கணிதம், இயற்பியல் வேதியியல் மற்றும் முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய முதுநிலை பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த பாடங்களில் சேர்வதற்கான தேதி வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம், (www.msuniv.ac.in/Distance-Education) விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இத்தகவலை பதிவாளர் சாக்ரட்டீஸ் தெரிவித்துள்ளார்.

    • புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது
    • இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

    இதில் பி.காம், பி.காம்(சி.ஏ.), பி.பி.ஏ., பி.எஸ்சி. (சி.டி.எப்) பி.எஸ்சி. சி.எஸ். (ஏ.ஐ.) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கல்லூரியில் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கல்லூரியில் சிறப்பு கணபதி ஹோமம் பூஜை திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓ.கே.எம்.கந்தசாமி, துணைத்தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பி.வி.எஸ். பி.முருகசாமி, இணைச் செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்பட அறக்கட்டளை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் இக்கல்லூரி முதல்வர் 20 ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவர். அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கல்லூரி முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றில் ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  

    • 9, 10-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
    • அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளி நடைபெறு கிறது. இந்த மாதிரி பள்ளியில் சேர்க்கை என்பது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாண விகளின் கல்வித் திறன் அடிப்படையில் தேர்வு செய்து மாதிரி பள்ளிக்கு அனுமதிக்கப் படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் 11,12 ஆகிய வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று

    9,10-ம் வகுப்பு சேர்க்கை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9,10 ஆகிய வகுப்புகளின் படித்து சிறப்பும் அதிக மதிப்பெண்கள் பெற்ற 80 பேர் தேர்வு செய்யப்பட்டு இது குறித்து அந்த மாணவர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் மற்றும் உறவினர்க ளுடன் பள்ளிக்கு வந்து விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அலுவலர்க ளிடம் கொடுத்தனர்.

    இது குறித்து பள்ளி முதல்வர் ரவி கூறியதாவது:-

    கல்வி வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவர்க ளின் விருப்பத்திற் கேற்ப கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப் பட்டு அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி யாக அனைத்து வசதிகளும் வழங்கி கல்வி கற்பிக்கப்ப டுகின்றன.

    நடப்பா ண்டில் கூடுதலாக 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் தொ டங்க உள்ளது. மாணவ, மாணவி கள் சிறந்த முறையில் பயி ன்று உயர்கல்வி படிப்புக்கான அரசு தேர்வு களில் அதிக மதி ப்பெண் பெற்று மருத்து வம், பொறியியல், சட்டப் படிப்பு, வேளாண்மை படிப்பு போன்றவற்றில் அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024ம் கல்வியாண்டு முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல் (40), சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கணினி அறிவியல் (40) ஆகிய முதுநிலைப் பட்ட வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 265 மாணவா்களுக்கான இடங்கள் உள்ளன.

    இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் கைப்பேசி, மடிக்கணினி, கணினி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    முதலில் தங்கள் பெயா், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் முதலான விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னா் விண்ணப்பத்தை முறையாக பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின்னா் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தர வரிசைப்பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும். 

    • நீதிமன்ற மாளிகையில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் முன் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை நீதிமன்ற மாளிகையில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய பிரமு கர்களை சந்தித்தார்.

    அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் முன் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர். அதுபோல் புதுவை காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ ஜனாதிபதியை சந்திக்க வந்தார்.

    அவரை மாளிகையின் காத்திருப்பு பகுதியில் அமர வைத்த அதிகாரிகள் சிறிது நேரத்துக்கு பிறகு பார்வையாளர் பட்டியலில் வைத்திய நாதன் எம்.எல்.ஏ. பெயர் இல்லை என கூறினர். மேலும் பட்டியலில் பெயர் இல்லாத வர்கள் கந்திக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.

    இதனால் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஜனாதிபதியை சந்திக்காமல் வெளியே றினார். இது தொடர்பாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    ஜனாதிபதியை சந்திக்க விரும்புகிறீர்களா.?.என அதிகாரிகள் வீட்டிற்கு வந்து கேட்டனர். இதனை ஏற்று நான் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அளித்தேன். ஆனால் இங்கு வந்த போது பார்க்க அனுமதிக்கவில்லை.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து, மணிப்பூர் விவகாரம் போன்றவை குறித்து மனு கொடுக்க இருந்தேன். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ என்பதால் தன்னை சந்திக்கா மல் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

    இதற்கிடையே நேற்று ஜிப்மரில் நடந்த ஜனாதிபதி விழாவில் ம.தி.மு.க. மாநில அமைப்பாளர் கபிரியேல் பங்கேற்க சென்றார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. அவர் கருப்பு, சிவப்பு துண்டு அணிந்திருந்ததால் அவரை அனுமதிக்க முடியாது என கூறி அவரை தனி அறையில் அமரவைத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.
    • மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) வழிகாட்டல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி-பிளஸ்' சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

    இளங்கலை கல்வியியல் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிர் அறிவியல், பொருளறிவியல், வணிகவியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன. பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம், கணினி அறிவியல், பொருளறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    சிறப்பு அம்சங்கள்

    பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்விநுட்பவியல், கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) வழிகாட்டல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    மாணவர் சேர்க்கை

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கண்ட பாடப்பிரிவுகளில் குறைவான இடங்களே உள்ளன. எனவே பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.

    ×