என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher eligibility test"

    • தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
    • முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்து இருக்கிறது.

    அந்த வகையில் டெட் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வை எழுத சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் முதல் 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

    மற்ற ஆண்டுகளில் நடந்த 4 தேர்வுகளிலும் விண்ணப்பப் பதிவு 4 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

    சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஏற்கனவே பணியில் இருந்து, டெட் தேர்வை எழுதாதவர்களும் அதை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள இந்த டெட் தேர்வை எழுதுவதற்கு இந்த ஆசிரியர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கான தேர்வு வருகிற நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி செப்.7-ந்தேதி நடக்கிறது.
    • பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025’ எனும் புத்தகம் இலவசம்.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த அகாடமியில் படித்தவர்கள், கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறது.

     

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு

    ஒரு நாள் இலவச பயிற்சி

    இந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, செப்டம்பர் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நேரடியாக நடைபெறுகிறது.

    இவ்வாறு கூறினார்.

    மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு கலந்து கொண்டு, 'ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு நுட்பங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

    மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியை சேர்ந்த அனுபவமிக்க பயிற்சியாளர்கள், டெட் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய பாடத் திட்டங்களை சுருக்கமாக கற்றுத்தர உள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி புத்தகம் இலவசம்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 'ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025' எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    முன்பதிவு செய்க

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 'TNTET ONE DAY FREE COACHING-2025' என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியுடன் 9176055514 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு, 9176055542, 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.

    • தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும்.
    • உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.

    பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,

    கட்டாய உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வை எழுதி தகுதி பெற வேண்டும்.

    தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். சில குறைபாடுகளால் தேர்வை எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

    ஆசிரியராக பணியில் சேர விரும்புவோரும், ஆசிரியர் பணியில் உயர்வை விரும்புவோரும் இந்த தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * டெட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் ஆசிரியர்களை ஒருபோதும் தமிழக அரசு கைவிடாது.

    * உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.

    * உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
    • ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம்.

    புதுடெல்லி:

    அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டது.

    நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    அந்த வழக்கு விசாரணையின்போது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அதை கட்டாயப்படுத்தக்கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது.

    குறிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களை பொறுத்தவரைக்கும் அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமையின் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    அதேபோல ஓய்வு பெறக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் தகுதி தேர்வு கட்டாயப்படுத்துவதற்கு முன்பாக பணியில் சேர்ந்து பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று ஆக்கப்படுவதால் பாதிப்படைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது

    அந்த தீர்ப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளித்தது.

    இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

    அதேவேளையில், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்ற அம்சங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து, இலவசமாக பெறலாம்.
    • பாடநூல்களை படித்தாலே, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இத்தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து, இலவசமாக பெறலாம் எனவும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

    சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய- மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.

    இந்த அகாடமியில் கடந்த ஆண்டுகளில் படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தொகுத்துள்ள, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பயிற்சி நூல்களை, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் வெளியிட, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜவகர் ஐ.ஏ.எஸ் பெற்றுக் கொண்டார்.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல்

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் (தாள்-1 மற்றும் தாள்-2) தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-1 மற்றும் 16.11.2025 அன்று தாள்-2 ம் நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுகளை எழுதும் ஆசிரியர்களின் வெற்றிக்கு உதவும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாடப்புத்தகங்களை 'ஆசிரியர் தகுதித் தேர்வு நோக்கில்' தொகுத்து, இந்த 'ஆசிரியர் தகுதித் தேர்வு பாடநூல்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாட நூல்கள் அனைத்தும் இ-புத்தகங் களாக வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும். இந்த பாடநூல்களை படித்தாலே, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

    முன்பதிவுக்கு... இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) ஆகிய இரண்டு தாள்களுக்கான பாட நூல்களை இலவசமாக பெற 'TNTET PAPER-I,II FREE TEXT BOOKS' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியுடன் 9176055542 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

    • நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    • இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    இந்த தேர்வு எழுத இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நாளை ெதாடங்குகிறது.
    • மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை (3-ந்தேதி) முதல் 8-ந் தேதி வரை முதற்கட்டமாகவும் (ேபட்ச்-1),இ 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் (ேபட்ச்-2), 2 கட்டங்களாக காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

    திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி, காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் காலையில் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்கும், மதியம் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 12.30 மணிக்கும் வருகை தர வேண்டும். மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது.
    • தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும்.

    சேலம்:

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2, இணையவழி தேர்வு தொடர்பாக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது,

    சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது. காலை மற்றும் மாலை வேளை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    இந்த தேர்தலை 36 ஆயிரத்து 113 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும். இத்தேர்வுக்காக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வுகளை கண்காணிக்கும் போது கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தலைமையில் 4 தேர்வு மையங்களுக்கு ஒரு பறக்கும் படைகுழு செயல்பட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுகள் நடைபெறும் 14 தேர்வு மையங்களிலும் காவல்துறை போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், மாதிரி தேர்வுகள் மற்றும் தேர்வு நாட்களில் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தேசிய தகவல் அலுவலர் வழங்கிடவும், அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ குழுக்கள் அமைத்து தேர்வு மையங்களில் நோய் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கண்காணித்து வழிநடத்திட சுகாதாரத் துறைக்கும், தேர்வு நாள்களில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேற்கொள்ளவும், தடை இல்லாமல் மின்சாரம் மற்றும் தேர்வுகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதி தேர்வு தாள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுவதை அனைத்து பொறுப்பு அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் வருவாய் அதிகாரி மேனகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி, மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுக வகுப்பு வருகறி 28-ந்தேதி நடக்கிறது.
    • முதலில் வரும் 100 மா வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு களான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு களுக்காக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

    மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள https://bit.ly/svgtetclass என்ற கூகுல் பார்மை பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். முதலில் வரும் 100 மாண வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மேலும் https://t.me/svgemployment என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclesvg@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

    • ஆண்டுக்கு 2 தடவை ‘டெட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும்.
    • தேர்வை நடத்துவது குறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதி முறைகளின் படி, ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

    2024-ம் ஆண்டு 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகால அட்ட வணையில் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிவடைந்து உள்ள நிலையில் 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை.

    இதனால், 'டெட்' தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது.

    அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வை நடத்த வேண்டும். இப்போது தனியார் சுயநிதி பள்ளிகளில் கூட 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைத் தான் பணிக்கு தேர்வு செய்கிறார்கள்.

    அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான போட்டித் தேர்வை எழுத 'டெட்' தேர்ச்சி அவசியம். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு விரைந்து தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 15,819 பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு வசதியாக 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2019-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-1 வருகிற 8-ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-2 வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையும் நடக்கிறது. 

    தூத்துக்குடி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 5 ஆயிரத்து 446 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 10 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

    இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இலவச பயிற்சிக்கு பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் இளநிலை கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பட்டம் பயின்ற பார்வையற்றவர்களுக்கு கல்வித்துறை மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. 

    இதில் சேர விருப்பமுள்ள பார்வையற்றவர்கள் தங்களது விண்ணப்பத்தை வருகிற 29-ந்தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முகவரிக்கு விண்ணப்பித்து அனைத்து பார்வையற்ற ஆசிரியர்கள் பயனடையலாம். 

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
    ×