என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் தகுதித்தேர்வு"
- பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.
- நடப்பு ஆண்டுக்கான ‘டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
சென்னை:
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க நேற்று முன்தினம் அவகாசம் முடிந்த நிலையில், இன்று (புதன்கிழமை) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பதாக சொல்லப்படுகிறது. என்ன திடீரென்று இவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று பார்த்தால், சமீபத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியதன் எதிரொலியாக, அதனால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே பணியில் இருக்கும் 'டெட்' தேர்வை எழுதாத ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், டெட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், தேர்வை எழுத விரும்பாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைகிறார்கள்.
அந்தவகையில் அடுத்தக்கட்டமாக இந்த ஆசிரியர்கள் விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அரசு அவர்களுக்கு இதுவரை தேர்வு நடத்த முடிவெடுக்காத சூழலில், டெட் தேர்வை எழுதாமல் பணியில் இருந்துவரும் ஆசிரியர்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்ட டெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவில் முண்டியடித்து போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுபற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களில் சிலர் இந்த தேர்வை எழுதிதான் பார்ப்போமே என்ற மனநிலையில் விண்ணப்பித்து இருக்கின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது' என்றனர்.
- ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
- விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி (நேற்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ந் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி செப்.7-ந்தேதி நடக்கிறது.
- பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025’ எனும் புத்தகம் இலவசம்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த அகாடமியில் படித்தவர்கள், கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு
ஒரு நாள் இலவச பயிற்சி
இந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, செப்டம்பர் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நேரடியாக நடைபெறுகிறது.
இவ்வாறு கூறினார்.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு கலந்து கொண்டு, 'ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு நுட்பங்களையும் தெளிவாக விளக்குகிறார்.
மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியை சேர்ந்த அனுபவமிக்க பயிற்சியாளர்கள், டெட் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய பாடத் திட்டங்களை சுருக்கமாக கற்றுத்தர உள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி புத்தகம் இலவசம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 'ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி-2025' எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
முன்பதிவு செய்க
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 'TNTET ONE DAY FREE COACHING-2025' என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியுடன் 9176055514 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 9176055542, 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.
- கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.
- குறைந்தபட்ச மதிப்பெண் 90 பெற்றால்தான் தகுதியாக தேர்வில் வெற்றி பெற்றதாக கணக்கிடப்படுகிறது.
சென்னை:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
1 முதல் 5-ம் வகுப்பு உள்ள பள்ளிகளுக்கு தாள்-1 தேர்வும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் பணியாற்றுவதற்கு தாள்-2 தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் டிசம்பர் 7-ந் தேதி வெளியானது. அதில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்தநிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தகுதித்தேர்வு கணினி வழியில் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத 4 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
1½ லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 98 சதவீதம் பட்டதாரிகள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 90 பெற்றால்தான் தகுதியாக தேர்வில் வெற்றி பெற்றதாக கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் 2-ம் தாள் தேர்வு எழுதிய பட்டதாரிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே தேர்ச்சி பெற்று இருக்க வாய்ப்பு இருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலையில் தேர்வு முடிவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளன.
கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும் மற்றொரு தேர்வை அரசு நடத்தி அதன் பிறகுதான் ஆசிரியர்கள் பணியில் நியமிக்கும் நிலை உள்ளது.
அதனால் டெட் தேர்வுக்கு முறையாக தயார் ஆகாமல் எழுதுகின்றனர். அரசு வேலைவாய்ப்பும் குறைந்து விட்டதால் ஆசிரியர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது.
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
- நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அரசின் விதியை ரத்து செய்தனர்.
சென்னை:
2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்.
ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை. ஆனால், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டனர்.
மேலும், நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அரசின் விதியை ரத்து செய்தனர்.






