என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம்"
- ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
- விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி (நேற்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ந் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரண்டாம் தாளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை நடக்கிறது.
- தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர்.
சென்னை:
இரண்டாம் தாளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை (3-ந்தேதி) நடக்கிறது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 3½ லட்சம் பேர் எழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமாக தொடங்கும் இத்தேர்வு 12-ந்தேதி வரை நடக்கிறது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர்.
அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்டமாக 3-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும் நடக்கிறது. காலை மற்றும் மாலை இருவேளையிலும் இத்தேர்வு நடைபெறுகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.






