search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "write"

    • எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
    • அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.

    கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.

    அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.

    • பேராவூரணி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத அளிக்க வேண்டிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேராவூரணி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அங்கையர்கண்ணி, கலாராணி ஆகியோர் பார்வையாளராக கலந்து கொண்டனர்.

    ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பால்ராஜ் பார்வையிட்டு கருத்துரை வழங்கினார்.

    பேராவூரணி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத அளிக்க வேண்டிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    ஜன 2 முதல் 4 ந்தேதி வரை நடைபெற்ற பயிற்சியில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 105 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 15,819 பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு வசதியாக 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2019-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-1 வருகிற 8-ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-2 வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையும் நடக்கிறது. 

    தூத்துக்குடி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 5 ஆயிரத்து 446 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 10 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

    இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    ×