என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government arts colleges"

    • 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
    • மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

    சென்னை:

    அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (24-ந்தேதி) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 2025-26-ம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப் பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று முதல் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 8.10.2025 ஆகும். மேலும், 21.7.2025-ம் செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும்போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

    தமிழ்நாடு அரசின் நெறி முறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீ டுகளின் அடிப்படையிலும் கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

    இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார்.

    • கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.

    இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாண வர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
    • கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வமாக உள்ளனர். 176 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 8-ந்தேதி தொடங்கியது.

    ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 263 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று 2 லட்சத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்டப்படிப்புகளில் சேர்ந்து போட்டித் தேர்வு மூலம் அரசு பணியில் சேரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக வேகமாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய தள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வளைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044- 24343106, 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது.
    • விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7- ந் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.

    இதேபோல் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் படுஜோராக நடந்து வருகிறது. கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த விண்ணப்ப பதிவில் நேற்று வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

    • தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.
    • தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானவுடன் உயர்கல்வியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

    வழக்கம்போல பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கும், கலை அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கும் விண்ணப்பித்தனர்.

    பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பி.காம். (பொது), பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகமாக உள்ளது. அரசு கலை கல்லூரிகளில் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளிலும் முன்கூட்டியே நல்ல பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்து வருகிறார்கள்.

    164 அரசு கலை கல்லூரிகளில் சேர கடந்த 8-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், அரசு கலைகல்லூரிகளை நோக்கி வருகிறார்கள்.

    பி.காம். உள்ளிட்ட குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இறுதி நாளாக இருப்பதால் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் மையங்களை நாடினர்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.

    நேற்று வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 780 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இன்று இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் இருப்ப தால் இந்த எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டும் என்று உயர் கல்வித்துறை எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    விண்ணப்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என தனியார் நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர். நந்தகுமார் தெரிவித்துள்ளார். ஏழை பெற்றோர் இத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முக்கிய சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.

    அதனை பெறுவதற்கு தாமதம் ஆவதால் குழந்தைகளை சேர்க்க கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

    • கோவையில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
    • விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

    கோவை:

    தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.

    நடப்பாண்டில், கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது.இதனை யடுத்து, பி.ஏ.பி. காம். பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங் களை சமர்ப்பிக்க கடந்த 8-ம் தேதி வரை கடைசி என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வு முடிவுகள் வராத தால், கால அவகாசம் நீடிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு தற்போது வரை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

    கல்லூரிக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகா சம் இருப்பதால் இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி தெரிவித் துள்ளார்.

    மேலும், கல்லூரி யில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்காக இலவச விடுதி வசதியும் செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×