search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Application Distribution"

    • வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை கண்டறிந்து சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை
    • கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் ஆம்பூர் வட்டம் சோலூர் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணியினை கண்காணிப்பு அலுவலரும். கூடுதல் பதிவாளரும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனருமான எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை நேரில் கண்டறிந்து சேமிப்பு கணக்கு துவக்கிட உரிய விண்ணப்பம் அளித்து அவர்களுக்கு அடுகில் உள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் இல்லாமல் "ஜீரோ பேலன்ஸ்" என்ற அடிப்படையில் உடனுக்குடன் சேமிப்பு கணக்கு உடனுக்குடன் துவக்கி கொடுக்குமாறும் ஆம்பூர் சரக களமேலாளர் சி.சுப்பிரமணி, திருப்பத்தூர் வங்கி கிளை உதவியாளர் எம்.மஞ்சுநாத் ஆகியோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் . கூட்டுறவு சார்பதிவாளரும் , ஆம்பூர் சரக அலுவலருமான எம்.கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
    • இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

    நெல்லை மாவட்டம்

    இதனை ஒட்டி இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கான பணிகளை வருவாய் மற்றும் கூட்டுறவுத்துறை பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று ஊரக பகுதியில் மொத்தம் உள்ள 528 ரேஷன் கடைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடைகளில் வினியோகம்

    மாவட்டத்தை பொறுத்த வரை வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட வில்லை. பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பும், ரேஷன் கடைகள் முன்பும் பொது மக்களை வர வழைத்து டோக்கன் விநியோ கிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பாளை கே.டி.சி. நகரில் ரேஷன் கடை முன்பு டோக்கன் விநியோகிக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    5 லட்சம் விண்ணப்பங்கள்

    நெல்லை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப் பிப்பதற்காக 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்து ள்ளது. இவை அனைத்தும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு முழுமையாக நிரப்பப்பட்டு வருகிற 24-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் தகுதியான வர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடை பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    நகர்புறத்தில் 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
    • பி.டெக், என்ஜினீயரிங், அக்ரிகல்சா், ஆர்க்கிடெக்சா், பி.எஸ்சி, பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., கேட்டரிங், பாரன்சிக் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்விபுத்தூர்

    ஸ்ரீவில்விபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் ெதாடக்க விழா பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நிறுவனா் கலசலிங்கம் மணிமண்டபத்தில் நடந்தது. பி.டெக், என்ஜினீயரிங், அக்ரிகல்சா், ஆர்க்கிடெக்சா், பி.எஸ்சி, பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., கேட்டரிங், பாரன்சிக் போன்ற படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவா்களுக்கு பல்கலை துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் வழங்கினார்.

    இணைவேந்தர் டாக்டா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவா் எஸ்.சசிஆனந்த், சுபா ஆனந்த், துணைத் தலைவா் எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், ஷில்பா அா்ஜூன், ஆலோசகா் ஞானசேகா், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளா் வாசுதேவன், மாணவா் சோ்க்கை இயக்குநா் லிங்குசாமி, நிதி நிர்வாக அதிகாரி தா்மராஜ் மற்றும் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

    ×