search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mansoor Ali khan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தொகுதி முழுவதும் மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    வேலூர்:

    பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரை தாக்கிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
    • அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பசுபதி நேற்று குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

    அப்போது, வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் வேப்பங்குப்பம் நோக்கி வந்தார்.

    அப்போது குருவராஜபாளையத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதியை பார்த்து மன்சூர்அலிகான், 'வணக்கம் பசுபதிசார் அவர்களே' தோற்று போக போகும் நீங்கள் வாக்கு சேகரித்துக் கொண்டு இருக்குறீர்களே, நீங்கள் தோற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்'. அம்மாவை கொன்று விட்டு ஓட்டு கேட்க வந்துட்டீங்களே பாவிகளா? எனக் கூறிவிட்டு பிரசார வேனில் நின்றபடி வேகமாக சென்றார்.


    இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.

    அதற்குள் அவர் வேப்பங்குப்பத்தில் உள்ள பள்ளிவாசல் உள்ளே தொழுகை செய்வதற்காக சென்று விட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பள்ளிவாசல் முன் நின்று அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.


    மேலும் மன்சூர்அலி கானை வெளியே வரச் சொல்லுங்கள், அடிக்காமல் விட மாட்டோம். எங்கள் ஊருக்கு வந்து இந்த மாதிரி பேசுகிறார். அவரை அடிக்கிற அடியில் சென்னைக்கு ஓடி விடுவார் என மிரட்டல் விடுக்கும் பாணியில் கூச்சலிட்டு கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரு தரப்பினரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர்.
    • பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.

    சென்னை:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    இதைத்தொடர்ந்து அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதே சின்னத்தை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    இது பற்றி மன்சூர் அலிகானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பலாப்பழம் சின்னத்தை முதலில் கேட்டது நான் தான். எனக்கு பலா சின்னம் கிடைத்துள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., டி.பி.எஸ் என யாருக்கு ஒதுக்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லை.


    பலாப்பழம் எனக்கு பிடித்த பழம். 'விறகு வாங்கலியோ விறகு' என்பது போல பலாப்பழத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். நான் வெல்வது உறுதி. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராக இருந்தார்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பல முறை கூறிவருபவர் நான்.

    மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக தினமும் முயற்சி செய்தேன். என்னை பார்க்கவிடவேயில்லை.

    மோடியா? லேடியா? என ஜெயலலிதா தைரியமாக கேட்டார். வாக்குகளை பிரிப்பதற்கு நான் போட்டியிடுகிறேன் என சொல்கிறார்கள் 'படுபாவிகள்'

    வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர். மக்கள் அமோகமாக என்னை வரவேற்கின்றனர். பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்.
    • ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேட்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.

    ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு 'பலாப்பழம்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை
    • தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "எத்தனையோ கட்சிகள் எத்தனையோ இடங்களில் போட்டியிடட்டும். நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை. வேலூர் மக்களுக்கும் என்னை விட்டால் வேறு வழியில்லை. நான் நல்ல வேலைக்காரனாக உழைப்பேன். உங்களுக்காக கழுதை போல பொதி சுமப்பேன்.

    இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேச்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.

    ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.

    • பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
    • மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும்.

    சென்னை:

    பிரபல வில்லன் நடிகரான மன்சூர்அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

    கட்சியின் முதல் மாநாடு பல்லாவரத்தில் நடந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    * மது, கஞ்சா, போதைப் பொருள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மன்சூர்அலிகான் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டி யிடுவது பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். மின்னணு எந்திர வாக்குப்பதிவு மூலம் 2 முறை மாப்பிள்ளை ஆகிவிட்டார் பிரதமர் மோடி. 3-வது முறையும் மின்னணு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்க்கிறார்.

    எந்திர வாக்குப்பதிவில் மோசடி நடைபெறுகிறது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் எந்திர வாக்குப்பதிவு உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை.

    இந்தியாவை தமிழன்தான் ஆள வேண்டும். தமிழகத்தில் நெசவு தொழிலாளர்கள் பலர் ஒரு கிட்னியுடன் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வாதாரத்திற்காக ஒரு கிட்னியை விற்று விட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.

    இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் தனியாக அறக்கட்டளை தொடங்கி வட்டியில்லாத கடன் வழங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன்.
    • தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

    சென்னை:

    தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி இவர் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

    இதையொட்டி மன்சூர் அலிகான் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மன்சூர் அலிகான் டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நான் 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் ஜெயலலிதா பெயரால் வெற்றி பெற்றார்.

    நான் ஜெயலலிதா மரணத்திற்கு வழக்குப் போட்டு எல்லா ஆவணங்களையும் வைத்துள்ளேன். அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அவரை கவர்னர் உள்பட யாரையும் பார்க்கவிடாமல் செய்தனர்.

    இதை மக்களிடம் எடுத்து சொல்ல 1999-ம் ஆண்டு நான் தோற்ற அதே பெரிய குளம் தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

    இது சத்தியம். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. இந்தா வர்றேன்டா...

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார்.
    • மேலாக பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார்.

    சென்னை:

    விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான 'கேப்டன் பிரபாகன்' படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இப்படம் மன்சூர் அலிகானுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்டனங்களுக்கும், சர்ச்சையிலும் மாட்டிய மன்சூர் அலிகானின் நேற்றைய செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

    நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார். அங்கு விஜயகாந்த் உடலுக்கு மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர், சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக மக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார்.


    பின்னர் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இரவு கடந்தும் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார் மன்சூர் அலிகான். இன்று காலை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்ட போதும் கூடவே சென்றார். இன்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யும்வரை மன்சூர் அலிகான் இருப்பார். இதன் மூலம் தனது ஆசானுக்கு தன்னால் இயன்ற மரியாதையை அவர் செலுத்துகிறார் என்பதே நிதர்சனம்.

    • மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய முன்ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

    சென்னை:

    நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    முன்ஜாமின் மனுவில் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறி தனது முன்ஜாமினை அவர் வாபஸ் பெற்றார். பின்னர் புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார்.

    இதற்கு பெண் நீதிபதி அல்லி கடும் கண்டனம் தெரிவித்தார். 'நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல. கோர்ட்டின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று அவர் தெரிவித்தார்.

    மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய முன்ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

    • நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானின் பேச்சு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீ சார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு நேரில் சென்று போலீசார் சம்மனை வழங்கினார்கள். இதனை ஏற்றுக்கொண்டு மன்சூர் அலிகான் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


    ஆனால் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.

    முன் ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடியுள்ள நிலையில், போலீசாரால் மன்சூர் அலிகானிடம் இன்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எனது குரல்வளை

    15 நாட்களாக தொடர் இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்பு அடைந்து பேச மிகவும் சிரமமாக உள்ளது. நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு நாளை தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் தங்களைச் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    சென்னை:

    நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானின் பேச்சு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு நேரில் சென்று போலீசார் சம்மனை வழங்கினார்கள். இதனை ஏற்றுக்கொண்டு மன்சூர் அலிகான் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போதுதான் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் கிடைக்குமா என்பது தெரிய வரும்.

    திரிஷா பற்றிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள மன்சூர் அலிகான் தான் பேசியதில் தவறு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

    நடிகர் சங்கத்துக்கு எதிராகவும் அவர் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். டைரக்டர் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இருந்த நிலையிலும் மன்சூர் அலிகான் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில்தான் அவர் முன்ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடியுள்ளார். இதனால் போலீசாரால் மன்சூர் அலிகானிடம் இன்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    • மன்சூர் அலிகான் விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.
    • அதில், சேரி மொழி என்று குஷ்பூ பயன்படுத்திய வார்த்தை சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

    சென்னை:

    நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

    மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கிடையே, மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சேரி மொழி என்று பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையான நிலையில், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

    ×