என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "full blockade protest"

    • பெங்களூரு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது.
    • எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு நாளை மறுநாள் (29-ந் தேதி) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்குகிறார்.

    இது குறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-

    நாங்கள் வருகிற 29-ந் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் பெங்களூருவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். பெங்களூரு முழு அடைப்பு வேண்டாம் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை நடத்தியவர்கள் ஏற்கவில்லை. பெங்களூரு மட்டுமே கர்நாடகம் இல்லை. எங்களின் குரல் டெல்லியில் உள்ள பிரதமருக்கு கேட்க வேண்டும்.

    இந்த போராட்டத்தில் 2,000 அமைப்புகள் பங்கேற்கும். திரைத்துறை, உற்பத்தி துறை, ஓட்டல், போக்குவரத்து உட்பட அனைத்து துறையினர், விமான நிலைய ஊழியர்கள் பந்த்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    நேற்று பெங்களூரில் இவ்வளவு பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பந்த் நடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    நாளை மறுநாள் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவுவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. எனவே வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே செல்லும்.

    எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
    • இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    சண்டிகர்:

    பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள கனவுரி பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இங்கு கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயி ஜகஜீத் சிங் தலேவால் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஜகஜீத் சிங்கின் உண்ணாவிரதம் நேற்றுடன் 34-வது நாளாக நீடித்தது.

    இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீதும், ஜக ஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் பிற விவசாயிகள் மீதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் (நாளை) அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்தது.

    இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை தெரிவித்தது.

    இந்தச் சூழலில், ஜகஜீத் சிங்கை அரசின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஜகஜீத் சிங்கை மருத்துவ மனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ள நிலையில், காந்திய வழியில் தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாபில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அமிர்தசரசில் விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள். பஞ்சாப்-அரியானா எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பஞ்சாபில் சில இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

    • போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
    • போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளுக்குள் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    இதனால் மனித உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வயநாட்டில் சமீப காலமாக வன விலங்குகள் அட்டகாசம் அதிகளவில் நடந்து வருகிறது. புலி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்கியதில் உயிர் பலியும் ஏற்பட்டது.


    வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 4 பேர் பலியாகி விட்டனர். வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி மனிதர்கள் பலியாவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    இந்தநிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வனவிலங்குகள் தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் வயநாடு மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அறிவித்தது.

    அதன்படி இன்று வயநாடு மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இந்த போராட்டம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வயநாடு மாவட்டத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி கைது செய்தனர். அப்போது சில இடங்களில் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

    அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக் காரர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் பல இடங் களில் பதட்டமாக சூழல் நிலவியது.

    போராட்டக்காரர்கள் திரண்ட இடங்களில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் வயநாட்டில் தனியார் பஸ்கள் இன்று இயக்கப்பட வில்லை. சில இடங்களில் போராட்டக்காரர்கள் அரசு பஸ்களையும் மறித்து நிறுத்தினர்.

    இதனால் வயநாடு மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இன்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிலையங்களுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    ×